இந்திய இசுலாமியரும் தமிழக இசுலாமியரும்
திரு. ஜகாரியா அவர்கள் எழுதிய எங்கே தவறு செய்தனர் இந்திய இசுலாமியர் ?
நூல் அறிமுகம் மட்டும் தான் படிக்கக் கிடைத்தது. முழு நூலும் படித்துப் பார்க்க ¬சையாகத்தான் இருக்கிறது .அது ஒரு புறம் இருக்க; எப்போதோ படித்த ஒரு பழைய கட்டுரை நினைவுக்கு வருகிறது. .இந்தியா சுதந்திரம்அடைவதற்கு ஏழு மாதம் முன்பாக ' சக்தி ' என்ற பத்திரிகையில் திரு. அப்துல் காதர் என்பவர் எழுதியதாகஞாபகம்.இது 'கவிதாச்சரன்' இதழில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் நடந்த அந்த கால கட்டத்த்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.இதன் சிறப்புப் பின்னனி என்ன எனத் தேடி அருமையானதொரு கட்டுரையை வழங்கி இருக்கிரார் அவர்.அந்தசிறப்பு மிகு கட்டுரைக்கும் 'திண்ணை' வாசகர்களுக்கும் இடையே குறுக்கே நந்தி போல் படுத்திருக்க நான்விரும்பவில்லை.நீங்களே படித்துப் பாருங்கள்.னாலும்,திருமதி.ரொமீலா தாப்பர் அவர்களது கருத்து ஒன்றினைத்தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள சை.அரையும் குறையுமாக நினைவில் இருப்பதை இப்போதும்அசலானவற்றை பின்னொரு சமயமும் பார்க்கலாம்.
அக்பர் காலத்துக்கு முன்னரே அசலாக இந்தியாவுக்குள் வந்தது சிலர்.பதவிக்காக மதம் மாறியவர் பலர்.ஷரியத்தையும் முழுமையாக ஏற்க முடியாமல் பழைய இந்துப் பழக்க வழக்கங்களையும் கைவிட முடியாமல்பலர் தவித்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.பிற்காலத்தில் தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்த தளபதிமாலிக்காபூர் இந்துவாக இருந்து பதவிக்காக மதம் மாறியவர் என்று வேறொரு வரலாற்றாசிரியர் எழுதியதும்படித்திருக்கிறேன்.இதனை நான் இங்கு குறிப்பிட ஒரு காரணம் உண்டு. அந்த கூலித் தளபதியை விரட்டியடித்தஅசல் இசுலாமியர்கள் பற்றிய கட்டுரை இது. .இனி அந்தக் கட்டுரையைப் பார்ப்போம்.
"the muslim population was only a fraction of the total and muslim elite could not have felt entirely secure.Those converted to islam in the early days were usually low-caste Hindus who chose to leavethe Hidu social fold for that of Islam ,beleieving that under Islam they would have better oppurtunities than ifthey remained low-caste Hindus .Such converts could provide little support for the ruling Muslim elite.Converts from higher Hindu social strata to Islam rarely made the change out of religious sympathy with Islambut out of opportunism, realizing that conversion was a necessary step before they could hope for economic and social advancement or political power. Ostensibly they were much of , but actually, andquite naturally ,they were regarded with suspicion by Turkish and Afghan nobles.(p.278 &9 )
Each year the sea brought a mere hand ful of traders ,who settled in the West coast ports .Islamtherefore had to rely increasingly on Hindu converts. The existing Indian population was slow in beingconverted.The fact that the muslims have always been a minority cmmunity in India would suggest ,as hasbeen pointed out elsewhere,that the vast mejority of Hindus were not so desperate a plight as to seekconversion. Perhaps at the lower levels of soceity the advantages to be gained by conversion were not spectacular. The Muslim community consisted mainly of converted Hindus ,and obviosly their pattern of living would not differ radically from that of the larger community in the midst of which they lived.
But the cultural fusion of the two ideologies was less predictable amonst the ruling classes andtheir seperateness was insisted upon by theologians of both religions and on occation, by politicallyambitious sections of the aristocracy .The call to Muslim loyalty or Hindu loyalty could always be used for the purposes other than religious, and this sentiment could be exploited when convenient.(p.289&90)
Muslim society as it evolved in India fell in to three broad divisins- the noblity both secular and religous,the artisans' and the cultivators.The nobility was made up of diverse trends , Turks, Afganisthans., prrsians, and Arabs,with the first two pre dominant ,sice they held power.To begin with , clan affiliations kept themdivided ,but once they wrer forced to accept India as their prominent home they became to coalseceinto a fairly homogeneous group. The fact of their being a minority in the country assited this process(p.298). ( A HISTORY OF INDIA_ ROMILA THAPER)
தமிழர் பண்பாடு ---------------------பாரத நாட்டின் பண்பாடு பயன் நிறைந்த பண்பாடு .பல கலாச்சாரங்கள் கலந்து மறைந்து உருவான, இனிமையும்புதுமையும் நிறைந்த பண்பாடு. .இப்புண்ணிய பூமியில் இன்று நின்று நிலவும் கலைகளையும் ,காவியங்களையும்மொழிகளையும், மதங்களையும் ராய்ந்து பார்ப்போமானால் ,அவை உருவாதற்கு உதவிய பல் வேறு ஜாதியதேசீய சக்திகளின் நிழலை நாம் அவற்றில் காணலாம். இந்த நன்னாட்டின் எதிர் கால உயர்வை உள்ளத்தில் கொண்ட யாவரும் இந்தியப் பண்பாட்டின் பல்வேறு முகங்களை பாது காக்கப் பாடுபட வேண்டும்.உண்மையில்உரம் தருவதும் உயிர் தருவதும் கிய சக்திகளை எல்லாம் ர்வத்துடன் இனிது வரவேற்று உபயோகமாய்இந்தியப் பண்பாண்ட்டோடு இணையச் செய்து அத¨னை வளர்க்க வேண்டும் .ஒரு பண்பாடு வளர அவ்வபோது தோண்றி¢ய சமூக, அரசியல் தார்மீக மாறுதல்களை ஏற்றே பண்பாடு பரிமளிக்கிறது.
தொண்மையும் பழமையும், கனிவும் செறிவும் மிகுந்த தமிழர் பண்பாட்டிலும் பல கலாசாரங்கள் கலந்துள்ளன. பண்டைத் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடு. சீரும் சிறப்பும் செழிப்பும் விழிப்பும் பெற்ற நாடு. காயும் கனியும், பூவும் பொழிலும் நிறைந்த பூமி., முத்தும், பொன்னும், மணியும், பவளமும், நம் நாட்டில் விளைந்தன. எனவே வர்த்தகமும்வாணிகமும் பெருகின. வேற்றுநாட்டு மக்கள் பலர் விரைந்து இந்நாடு வந்தனர். விருந்தோம்பலில் சிறந்தோங்கியதமிழர் அம்மக்களையெல்லாம் அவ்வப்போது வரவேற்று அவர்களுக்கு இடைவிடாமல் உணவு கொடுத்து நிழல் கொடுத்து எழில் கொடுத்து காப்பாற்றினர். தமிழ் நாட்டின் கீர்த்தி உலகெல்லாம் பரவியது.
தமிழ் நாட்டு வணிகர் நேர்மையும் நாணயமும் நிரம்பியவர்கள். வியாபாரத் துறையிலோ அல்லது வேறுஎத்துறையிலோ அவர்கள் பொய்யுரை புகலமாட்டார்கள். பொருட்களைக் கொள்ளை விலைக்கு விற்பதில்லை.ஊதியம் சிறிதே பெற்றுப் பெருகிய வாணிகம் நடத்தினார்கள். பழைய தமிழ் இலக்கியமாகிய 'பத்துப் பாட்டு' என்ற தொகுதியிலுள்ள'பட்டினப்பாலை' என்ற பாட்டில் அக்கால வணிகரின் நாணயத்திற்குத் தகுந்த சான்று கிடைக்கிறது.சோழர் பழம் பதியாகிய காவிரிப் பூம்பட்டினத்தின் வணிகரது உள்ளச்சிறப்பை அது வர்ணிப்பதைக் காணலாம்.
நடுவு நின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு(ம்) ஒப்ப நாடிக் கொள்வதூஉங் மிகை கொளாது கொடுப்பதூஉங் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை (வரிகள் 207 - 212)
நாணயமான வியாபாரமும் கண்ணியமான ஒழுக்கமும் அயலவரை அன்புடன் தரிக்கும் பேருள்ளமும் கொண்ட தமிழரின் நிழலில் பல அன்னியர்கள் பெருவிருப்புடன் வந்து தங்கினர். கடல் கடந்தும் வந்தனர். ரோமர்களும் கிரேக்கர்களும் மிகப் பழங்காலத்திருந்தே வாணிகத்தின் பொருட்டு தமிழ் நாட்டில் வந்து குடியேறினார்கள். ரோம அரசரது நாணயங்கள் பழந்துறைமுகப் பகுதிகளிலும் தலைநகர ஸ்தலங்களிலிலும் ஏராளமாய்த் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ரோமர், கிரேக்கர், அராபியர், சீனர்களின் பண்டக சாலைகள் தமிழ்நாட்டில் ங்காங்கே ஏற்பட்டன.காவிரிபூம்பட்டினத்தின் கடைவீதிகளில் இந்தியாவின் நாலாவிதப் பகுதிகளிலலுள்ள பண்டங்ளும் வந்து குவிந்தன. குதிரைகளும் அயல்நாட்டிலிருந்து கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும் காலில் வந்த கருங்கறி மூடையும் வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல்துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத் (து) க்கமும் (பட்டினப்பாலை 185 - 191)
அங்கு வந்து நிறைந்தன.
வியாபாரம் விரும்பி இங்கு வந்த பிற நாட்டு மக்கள் தமிழரின் உயர் பண்பாட்டாலும் உள்ள நிறைவாலும்கர்ஷிக்கப்பட்டு தமிழ் நாட்டைத் தங்கள் தாயகமாகவே கருதி இங்கேயே தங்கி விட்டனர். இவர்களில்பலர் கை தேர்ந்த சிற்பிகளாகவும், கம்மாளராயும், அரசரது மெய்க்காவலராயும் தொழில்களில் அமர்ந்தனர்.இவ்வாறு வந்து தங்கியவர்களையே 'யவணர் ' என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவர்கள் நாளடவில்தமிழரோடு தமிழராய்க் கலந்து இணைந்து விட்டனர்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ரம்பத்தில் அராபியாவில் 'இஸ்லாம்' என்ற புதிய மதம் தோன்றியது. உறங்கிக்கிடந்த அராபியர்கள் அதன் மூலம் புதியதோர் ஜீவசக்தியைப் பெற்று உலகம் வியக்கும் வண்ணம் ஒரு பலம்பொருந்திய பேரரசை நிர்மாணித்தார்கள். வாணிகத்துறையில் அவர்கள் அளவற்ற ர்வம் காட்டினார்கள். கீழ்நாடுகளுடனும் மேல் நாடுகளுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு பெரு வாணிகம் செய்தனர். தமிழ் நாட்டின் வளமான பண்டங்களை வாங்கி பிற நாடுகளில் விற்றனர்.தமிழரின் இனிய பண்பாட்டைப் பற்றி வெகுவாய்அறிந்து வியந்தார்கள்.
கி.பி.9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எகிப்தில் வாழ்ந்த அராபிய வணிகக் குடும்பங்களுக்கு பேராபத்துவந்தது. நாடு, நெறி திறம்பிய மன்னன் ட்சியால் சீர்குலைந்து, நன் மக்கள் நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.அவர்களில் சிலர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடையத் துணிவு கொண்டு கலங்களில் ஏறிச் சொல்லொணாத துன்பம் அடைந்து ஒருவாறு தென் குமரியைக் கடந்து பாண்டி நாட்டின் துறைமுகமாகியகாயலில் வந்து இறங்கினார்கள். பாண்டிய மன்னனைக் கண்டு தங்கள் பரிபவத்தைக் கூறித் தமிழ் நாட்டில்குடியேற அனுமதி கேட்டார்கள்.அரசர் அந்த அகதிகட்கு 'அஞ்சேல்' என அபயம் கொடுத்தார். சீர் குலைவுற்றஅவர்களது சீர் பெற வேண்டிய சாதனங்களும் தந்தார். அவர்களது உரிமைகளையும் கடமைகளையும் வகுத்துத்தாமிரப் பட்டயமும் கொடுத்தார்.அப்பட்டையம் தமிழரின் மாண்பை உலகுக்குப் பறை சாற்றும் ஒரு அழியாதசின்னம். தமிழரின் பண்பாட்டின் பிரதி பிம்பம். அதிலுள்ள சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :-
"................அறபி நாட்டு மிஸறு (எகிப்து) தேசாதிபதியின் கொடுங்கோலுக்கு அஞ்சி, மரக்கல யாத்திரையாய்கர்த்தர்களின் தேசச் செம்பி நாட்டில் பாசறை வகுத்து, கர்த்தர்களின் சமூகம் கொடுத்து அந்நாட்டில் குடியேறிஇருக்கத் தாமிரப் பட்டயம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டவர்களின் வம்சமும், எண்ணிக்கையும் :
சிம் வம்சத்தார் (23)பக்கிரி வம்சத்தார் (39)பாறூக்கு வம்சத்தார்(43)உமையா வம்சத்தார்(14)ராணுவ யுத்தர் (16)க்ஷவரகன் (3)நாச்சியார் பெண்டு (9) " " (16) " " (24)
" " (5)பெண் (6) " (1)அடிமை (4) " (7) " (17) " (12) " (2)இவர்கள் ஒரு மனப்பட்டு,முஹமது கல்ஜிக்கு தாமிரப் பட்டயம் கொடுக்கக் கேட்டுக் கொண்ட படியால்,இந்தக் குடியானவர்கள் மிஸறு தேசத்து காயிரூன் (கெய்ரோ) ஊரில் வசித்தவர்களான படியால்,தாமிரப்பட்டயங்கொடுக்கு மூருக்கு 'காயிரூன்' பட்டனமென்று நாமமும், மரக்கல யாத்திரையாக வந்ததற்காக இவர்களுக்குமரக்கல ராயர் என்ற நாமமும் நாம் சூட்டித் தாமிர பட்டயங்கொடுக்க உத்தரமருளி அரண்மனையார் கற்பித்தது.
" தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு மேற்கு,சிவந்தன் குளம், முள்ளக்காடு, கோபுரங்காடு, மஞ்சனக்காயல், கொற்கை,குலை நெல் கரிசை, முக்காணி கொலுவுத்துறை, ற்றூர், அதைச் சேர்ந்த மங்கலம், சொர்க்கப்பிள்ளைக்கரை,பின்னக்காயல்,வரங்காடு,தண்ணீர்ப்பந்தல்,கீரனுர், நல்லூர்,அம்மன் புரம், பள்ளிப்பத்து,மணற்காடு,ரஜமன்னியபுரம்,வீரபாண்டியன், மங்கள பாடி இவைகளடங்கிய குடிகளுக்கு முகமது கல்ஜி மரக்கலராயன்கற்பனையும்,அவனுக்கு இறைவரி செலுத்தக் கடைமையும் பளமும் பள்ளிப்பத்து அம்மன் புரங்கண்டு முதல்லாபத்தில் ஜெப லயங்கள் கட்டப் பாதியும்,தண்ணீர்ப் பந்தல் கண்டு முதலில் மரக்கலராயனுக்குப்பாதியும்பளமும், கன்னி முதல் மன்னார் மணல் மேடு இராமேஸ்வரம் வரை, இந்தக் குடியானவர்கள் சலாபமுத்துக் குளிக்க அம்பளவும்பளமும், தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு தோனி ஒன்னுக்கு 20 முத்துச் சிப்பியும்மரக்கலராயனுக்கு தோணி ஒன்னுக்கு 30 முத்துச் சிப்பியும் ,சித்த்ன லாசருக்கு 20 முத்துச் சிப்பியும் அம்பளவும்பளநிந்தமும்."
"அந்தந்த வருடமும் மகர மாசத்தையில், அரண்மனைக்கு மரக்கலராயன் 90 பொன்னும் உப்பு லாபத்தில் 100பொன்னுக்கு 25 பொன்னும் செலுதிவிடக் கடமையும், ஒரு பொன் எடையும் அதற்கு மேற்பட்ட ணிமுத்தும்,வலம்புரிச் சங்கும் அகப்பட்டால் அவைகளை மரக்கல ராயன் அரண்மனைக்கு சகல மேளவாத்தியத்துடன் செலுத்திட அரண்மனைக் கற்பனையும்."
"அரன்மனையார் உத்தரவிற்கு நாஞ்சி நாட்டு அதிபன் கொடுத்த வண்ணான் (5) ரெட்டியாபட்டி பாளைய கிருக்ஷ்ணநாயக்கன் கொடுத்த புதிய முத்தூர் மேளவாத்தியக்காரன்(5)க்கும் குடியானவர்கள் செலவு கொடுத்துக் கொள்ளவும்.பக்கிரி வம்சத்தலைவன் முகம்மது கல்ஜி மரக்கலராயன் தேசாதிபதி : பாறூக்கு வமிசத் தலைவன் உமறுமங்கூறு நியாதிபன் : சீம் வம்சத்தலைவன் கமாலுதீன் கடலதிபதி :உமையா வமிசத் தலைவன் சுபைறுஅடையில் முடையல்,ஊர் மணியம் ராணுவ யுத்தர்கள் , ஊர்க்காவல்,நாட்டுக்காவல்,கன்னி முதல் சேல மகரம்வரையுள்ள அரண் ம¨ண் குதிரைப் பாடிகளில் உள்ள இந்தக் குடியானவர்கள் குதிரை விற்பனை செய்துகொள்வதை ,அரண்மனைக் காவலர் பாளையக் காவலர் தடை செய்யக்கூடாது. சந்திராதிக்கம்,சந்திர சூரியப்பிரவேசமுள்ளவரைக்கும், அம்பள வும்பள சுதந்திரராக."
"சகாப்தம் எளக்ஷ்ய அ (798) ண்டு கீலக வருஷம்,மீன மாசம் சுக்கிரவாரம் உத்திர வேளையில்.............இந்தத் தாமிரப்பட்டயம் வெட்டி வரைந்து எழுதினேன் வீரவ நல்லூர் ககன மூர்த்தியாசாரி."
இந்த அபூர்வமான சாசனத்தைப் படிக்கப் படிக்க நாம் வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைகிறோம். பிறந்தநாட்டை விட்டு ஓடித்தப்பி அகதிகளாய் வந்தடைந்த அன்னியர்க்குத் தமிழ் நாட்டில் இத்தனை வரவேற்பா ?அதிலும் எவ்வளவு உரிமையும் சலுகையும்! கடற்கரைப் பகுதிகளில் குடியேற உரிமையும், முத்துக் குளிக்கவும்உப்பு விளைவிக்கவும், குதிரை வியாபாரம் செய்யவும் சலுகைகளும் எவ்வளவு தாராளமாய் வழங்கப் படுகின்றன.
பெரிய அரசுக்குள் அடங்கிய சிற்றரசு எனவே அவர்களைக் கூற வேண்டும்.அவர்களது நிர்வாகம் தான் எவ்வளவுதிறமையுடன் வகுத்துத் தரப்பட்டுள்ளது. ஒருவர் தேசாதிபதி ,மற்றொருவர் நியாயாதிபதி, பின்னொருவர்கடலாதிபதி மணியம் ஒருவர். இன்னும் அவர்களது ஊழியத்துக்கு வேண்டிய வண்ணார், மேளக்காரர், அம்பட்டர்முதலியோரையும் பாண்டி மன்னன் திட்டம் செய்து உதவுகிறான்.
மரக்கலராயர் என்ற பெயர் தான் எவ்வளவு அன்புடனும் அழகுடனும் சூட்டப்படுகிறது. அத்தமிழ் மன்னனின் வண்மைக்கும், ஒண்மைக்கும் சான்றாக இன்று தமிழ் நாட்டில் அம்மரக்கலராயரின் வகுப்பினர் மரக்காயர் என்றபெயருடன் கடற்கரைப் பகுதிகளிலெல்லாம் பல்கிப் பெருகிச் சிறந்த வணிக மன்னராய் வாழ்கின்றனர்.தமிழ்வளர்க்கின்றனர் .தமிழ் வளர்த்த தந்தையாகிய சீதக்காதி மரைக்காயரும் இவ்வகுப்பில் தோன்றியவரே.
மரக்காயர் பரம்பரையில் வந்த ஒருவரது பெயர் சரித்திரத்தில் தனிச் சிறப்பும் பெற்றது. ஸையத் ஜமாலுத்தீன் என்றஅரபி நாட்டு முஸ்லிம் தமிழ் நாட்டில் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தவர். அரேபியாவில் இருந்துநல்ல உயர் சாதிக் குதிரைகளைத் தென்னாட்டில் இறக்குமதி செய்யும் ஏகபோக உரிமையைப் பாண்டிய அரசரிடம் பெற்றார். காயல் பட்டினமே அவரது தலைமை காரியாலயஸ்தலம் .அரசர்க்கு அடுத்த பெருஞ்செல்வராய் அவர் விளங்கினார். எத்தனையோ மரக்கலங்கள் அவரது ஏவலில் இருந்தன. அவரது கப்பல்கள் செங்கடலில் இருந்துசீனம் வரை சென்று பொன்னொடும் பொருளோடும் திரும்பும்.உலகியலறிவும் நூலறிவும் மிகுந்த அவர் பிறறைவயமாக்கத் தக்க பேச்சுத் திறமையும் உடையவர்.அரசர் சுந்தர பாந்தியத் தெவரின் பேரன்பையும் பெரு நட்பையும் பெற்றவர்.கி.பி.1286-ல் பாண்டிய மன்னர் சீன அரசர் குப்ளைகானிடம் ஒரு தமிழர் தூது கோஷ்டியை அனுப்பிய பொழுது அதன் தலவராக ஸையத் ஜமாலுதீனே தெரிந்தெடுக்கப்பட்டார்.சீனச் சரித்திரம் இதற்குச் சான்று பகர்கிறது.இலங்கையில் பராகிரமபாகு ண்ட நாளில் (1288-1293) பாண்டியர் இலங்கை மீது படை எடுத்தனர்.அப்படைகளுக்கு சேனாதிபதியாக ஜமாலுத்தீனே நியமிக்கப்பட்டனர்.பாண்டி மன்னர் சபையில் இவருக்கு எவ்வளவு மதிப்பும் எத்துணை நம்பிக்கையும் உள்லம் கலந்த நல்லெண்ணமும் இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இந்துமுஸ்லிம் என்ற பேதம் எள்ளளவும் இன்றி தமிழ் நாட்டில் சவுஜன்யமும் சந்துஷ்டியும் அன்று முதல் இன்றும்நிலவுகிறது .
தமிழர் தமக்குச் செய்த தலையாய நன்றியை தமிழ் நாட்டு முஸ்லிம்கள் என்றும் மறந்தது இல்லை.வடக்கே இருந்துமுஸ்லிம் அரசர்களும் தளபதிகளும் போர்கொண்டு தென்னாடு வந்த போது தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தமிழரோடு தோள்தட்டி நின்று அவர்களை எதிர்த்து வீரப்போர் செய்தனர். மாலிகாபூர் என்ற சேனாதிபதியை எதிர்த்த வீரபாண்டியரின் சேனையில் 5000 முஸ்லிம் குதிரை வீரர்கள் இருந்தனர், என்று அக்காலச் சரித்திரக் காரரான குஸ்ருகுரிப்பிடுகிறார்.இந்து மன்னரின் கீழ் முஸ்லிம் படைகளை எதிர்த்துப் போராடிய அத்தமிழ் முஸ்லிம்களின் உள்ளப்பாங்கினை உணர்ந்து கொள்ள அச்சரித்திரக்காரருக்கு போதிய திருஷ்டி இல்லை.கையால் அவர்களைஏளனமாகவே அவர் குறிப்பிடுகிறார்." இவர்கள் பாதி இந்துக்களே.மத வைராக்கியமோ ஒழுக்கமோ இல்லாதவர்கள்.மரணம் தான் இவர்களுக்கு சரியான தண்டனை.எனினும் கலீமா சொல்ல அறிந்திருந்த படியால் பிழைத்துப்போனார்கள்." என்று அவர் எழுதுகிறார்.(See foot note on Malik kafur p.274 of A History of India by RomilaThapar )##
வடநாட்டு முஸ்லிம் அரசர்களின் தென்னாட்டுப் படையெடுப்பால் இங்குள்ள இந்துக்களைப் போலவே முஸ்லிம்களும் பெருந்துன்பமும் துயரமும் அடைந்தனர்.டெல்லி மன்னன் குத்புதீன் முபாரக் ஷா காலத்தில்(கி.பி.1317) அவனது தளபதி குஸ்ரூகான் தமிழகத்தின் மீது தண்டெடுத்து வந்தான்.மதுரையைத் தாக்கிப் பிடித்தான்.பாண்டியர் பிரதானிகளில் ஒருவராய் ஸிராஜுதீன் தாகீ என்பவர் மதுரையில் இருந்தார்.முஸ்லிம் என்பதற்காகஅவரைகுஸ்ரூகான் விட்டு வைக்கவில்லை. அவர் மாளிகையைச் சூரையிட்டது மல்லாமல்அவரது குடும்பத்தினரையும்கைது செய்தான்.அவரது அழகிய மகளையும் மணமுடித்துத்தர வேண்டுமென்று வம்பு பேசினான்.மானமிழந்த பின்உயிர் வாழாமை முன்னினிதே என்ற தமிழனது தன் மானக் கொள்கையைக் கொண்டே ஸிராஜுதீன் விஷமருந்திஉயிர் துறந்தார்.
சமீப காலத்தில் இந்திய நாட்டின் பிற பகுதிகளில் வகுப்பு மாச்சர்யம் மிகுந்து கொலைகளும்கொள்ளைகளும் நடந்த பொழுது தமிழ் நாட்டில்அமைதியும் சந்துஷ்டியும் நிலவி வந்ததைக் கண்டபிறர் ச்சரியமடைந்தனர். தமிழர் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட வினோதம் அவர்களுக்குப்புரியவில்லை. தமிழரின் தனிப் பண்பாடு அது.
##(Another expedition was sent under one of his officers ,Malik Kafur, a handsomeHindu convert from gujarat, and this was extremely successful. He had even attacked the city of Madurai ,the seat of the Panddyas ,and this was more than any other Northern rulers could claim. (p 274. )A HISTORY OF INDIA -ROMILA THAPAR)
தொகுப்பு: புதுவை ஞானம்.
இந்திய இசுலாமியரும் தமிழக இசுலாமியரும்
திரு. ஜகாரியா அவர்கள் எழுதிய எங்கே தவறு செய்தனர் இந்திய இசுலாமியர் ?
நூல் அறிமுகம் மட்டும் தான் படிக்கக் கிடைத்தது. முழு நூலும் படித்துப் பார்க்க சையாகத்தான் இருக்கிறது .அது ஒரு புறம் இருக்க; எப்போதோ படித்த ஒரு பழைய கட்டுரை நினைவுக்கு வருகிறது. .இந்தியா சுதந்திரம்அடைவதற்கு ஏழு மாதம் முன்பாக ' சக்தி ' என்ற பத்திரிகையில் திரு. அப்துல் காதர் என்பவர் எழுதியதாகஞாபகம்.இது 'கவிதாச்சரன்' இதழில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் நடந்த அந்த கால கட்டத்த்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.இதன் சிறப்புப் பின்னனி என்ன எனத் தேடி அருமையானதொரு கட்டுரையை வழங்கி இருக்கிரார் அவர்.அந்தசிறப்பு மிகு கட்டுரைக்கும் 'திண்ணை' வாசகர்களுக்கும் இடையே குறுக்கே நந்தி போல் படுத்திருக்க நான்விரும்பவில்லை.நீங்களே படித்துப் பாருங்கள்.னாலும்,திருமதி.ரொமீலா தாப்பர் அவர்களது கருத்து ஒன்றினைத்தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள சை.அரையும் குறையுமாக நினைவில் இருப்பதை இப்போதும்அசலானவற்றை பின்னொரு சமயமும் பார்க்கலாம்.
அக்பர் காலத்துக்கு முன்னரே அசலாக இந்தியாவுக்குள் வந்தது சிலர்.பதவிக்காக மதம் மாறியவர் பலர்.ஷரியத்தையும் முழுமையாக ஏற்க முடியாமல் பழைய இந்துப் பழக்க வழக்கங்களையும் கைவிட முடியாமல்பலர் தவித்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.பிற்காலத்தில் தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்த தளபதிமாலிக்காபூர் இந்துவாக இருந்து பதவிக்காக மதம் மாறியவர் என்று வேறொரு வரலாற்றாசிரியர் எழுதியதும்படித்திருக்கிறேன்.இதனை நான் இங்கு குறிப்பிட ஒரு காரணம் உண்டு. அந்த கூலித் தளபதியை விரட்டியடித்தஅசல் இசுலாமியர்கள் பற்றிய கட்டுரை இது. .இனி அந்தக் கட்டுரையைப் பார்ப்போம்.
"the muslim population was only a fraction of the total and muslim elite could not have felt entirely secure.Those converted to islam in the early days were usually low-caste Hindus who chose to leavethe Hidu social fold for that of Islam ,beleieving that under Islam they would have better oppurtunities than ifthey remained low-caste Hindus .Such converts could provide little support for the ruling Muslim elite.Converts from higher Hindu social strata to Islam rarely made the change out of religious sympathy with Islambut out of opportunism, realizing that conversion was a necessary step before they could hope for economic and social advancement or political power. Ostensibly they were much of , but actually, andquite naturally ,they were regarded with suspicion by Turkish and Afghan nobles.(p.278 &9 )
Each year the sea brought a mere hand ful of traders ,who settled in the West coast ports .Islamtherefore had to rely increasingly on Hindu converts. The existing Indian population was slow in beingconverted.The fact that the muslims have always been a minority cmmunity in India would suggest ,as hasbeen pointed out elsewhere,that the vast mejority of Hindus were not so desperate a plight as to seekconversion. Perhaps at the lower levels of soceity the advantages to be gained by conversion were not spectacular. The Muslim community consisted mainly of converted Hindus ,and obviosly their pattern of living would not differ radically from that of the larger community in the midst of which they lived.
But the cultural fusion of the two ideologies was less predictable amonst the ruling classes andtheir seperateness was insisted upon by theologians of both religions and on occation, by politicallyambitious sections of the aristocracy .The call to Muslim loyalty or Hindu loyalty could always be used for the purposes other than religious, and this sentiment could be exploited when convenient.(p.289&90)
Muslim society as it evolved in India fell in to three broad divisins- the noblity both secular and religous,the artisans' and the cultivators.The nobility was made up of diverse trends , Turks, Afganisthans., prrsians, and Arabs,with the first two pre dominant ,sice they held power.To begin with , clan affiliations kept themdivided ,but once they wrer forced to accept India as their prominent home they became to coalseceinto a fairly homogeneous group. The fact of their being a minority in the country assited this process(p.298). ( A HISTORY OF INDIA_ ROMILA THAPER)
தமிழர் பண்பாடு ---------------------பாரத நாட்டின் பண்பாடு பயன் நிறைந்த பண்பாடு .பல கலாச்சாரங்கள் கலந்து மறைந்து உருவான, இனிமையும்புதுமையும் நிறைந்த பண்பாடு. .இப்புண்ணிய பூமியில் இன்று நின்று நிலவும் கலைகளையும் ,காவியங்களையும்மொழிகளையும், மதங்களையும் ராய்ந்து பார்ப்போமானால் ,அவை உருவாதற்கு உதவிய பல் வேறு ஜாதியதேசீய சக்திகளின் நிழலை நாம் அவற்றில் காணலாம். இந்த நன்னாட்டின் எதிர் கால உயர்வை உள்ளத்தில் கொண்ட யாவரும் இந்தியப் பண்பாட்டின் பல்வேறு முகங்களை பாது காக்கப் பாடுபட வேண்டும்.உண்மையில்உரம் தருவதும் உயிர் தருவதும் கிய சக்திகளை எல்லாம் ர்வத்துடன் இனிது வரவேற்று உபயோகமாய்இந்தியப் பண்பாண்ட்டோடு இணையச் செய்து அத¨னை வளர்க்க வேண்டும் .ஒரு பண்பாடு வளர அவ்வபோது தோண்றி¢ய சமூக, அரசியல் தார்மீக மாறுதல்களை ஏற்றே பண்பாடு பரிமளிக்கிறது.
தொண்மையும் பழமையும், கனிவும் செறிவும் மிகுந்த தமிழர் பண்பாட்டிலும் பல கலாசாரங்கள் கலந்துள்ளன. பண்டைத் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடு. சீரும் சிறப்பும் செழிப்பும் விழிப்பும் பெற்ற நாடு. காயும் கனியும், பூவும் பொழிலும் நிறைந்த பூமி., முத்தும், பொன்னும், மணியும், பவளமும், நம் நாட்டில் விளைந்தன. எனவே வர்த்தகமும்வாணிகமும் பெருகின. வேற்றுநாட்டு மக்கள் பலர் விரைந்து இந்நாடு வந்தனர். விருந்தோம்பலில் சிறந்தோங்கியதமிழர் அம்மக்களையெல்லாம் அவ்வப்போது வரவேற்று அவர்களுக்கு இடைவிடாமல் உணவு கொடுத்து நிழல் கொடுத்து எழில் கொடுத்து காப்பாற்றினர். தமிழ் நாட்டின் கீர்த்தி உலகெல்லாம் பரவியது.
தமிழ் நாட்டு வணிகர் நேர்மையும் நாணயமும் நிரம்பியவர்கள். வியாபாரத் துறையிலோ அல்லது வேறுஎத்துறையிலோ அவர்கள் பொய்யுரை புகலமாட்டார்கள். பொருட்களைக் கொள்ளை விலைக்கு விற்பதில்லை.ஊதியம் சிறிதே பெற்றுப் பெருகிய வாணிகம் நடத்தினார்கள். பழைய தமிழ் இலக்கியமாகிய 'பத்துப் பாட்டு' என்ற தொகுதியிலுள்ள'பட்டினப்பாலை' என்ற பாட்டில் அக்கால வணிகரின் நாணயத்திற்குத் தகுந்த சான்று கிடைக்கிறது.சோழர் பழம் பதியாகிய காவிரிப் பூம்பட்டினத்தின் வணிகரது உள்ளச்சிறப்பை அது வர்ணிப்பதைக் காணலாம்.
நடுவு நின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு(ம்) ஒப்ப நாடிக் கொள்வதூஉங் மிகை கொளாது கொடுப்பதூஉங் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை (வரிகள் 207 - 212)
நாணயமான வியாபாரமும் கண்ணியமான ஒழுக்கமும் அயலவரை அன்புடன் தரிக்கும் பேருள்ளமும் கொண்ட தமிழரின் நிழலில் பல அன்னியர்கள் பெருவிருப்புடன் வந்து தங்கினர். கடல் கடந்தும் வந்தனர். ரோமர்களும் கிரேக்கர்களும் மிகப் பழங்காலத்திருந்தே வாணிகத்தின் பொருட்டு தமிழ் நாட்டில் வந்து குடியேறினார்கள். ரோம அரசரது நாணயங்கள் பழந்துறைமுகப் பகுதிகளிலும் தலைநகர ஸ்தலங்களிலிலும் ஏராளமாய்த் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ரோமர், கிரேக்கர், அராபியர், சீனர்களின் பண்டக சாலைகள் தமிழ்நாட்டில் ங்காங்கே ஏற்பட்டன.காவிரிபூம்பட்டினத்தின் கடைவீதிகளில் இந்தியாவின் நாலாவிதப் பகுதிகளிலலுள்ள பண்டங்ளும் வந்து குவிந்தன. குதிரைகளும் அயல்நாட்டிலிருந்து கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும் காலில் வந்த கருங்கறி மூடையும் வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல்துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத் (து) க்கமும் (பட்டினப்பாலை 185 - 191)
அங்கு வந்து நிறைந்தன.
வியாபாரம் விரும்பி இங்கு வந்த பிற நாட்டு மக்கள் தமிழரின் உயர் பண்பாட்டாலும் உள்ள நிறைவாலும்கர்ஷிக்கப்பட்டு தமிழ் நாட்டைத் தங்கள் தாயகமாகவே கருதி இங்கேயே தங்கி விட்டனர். இவர்களில்பலர் கை தேர்ந்த சிற்பிகளாகவும், கம்மாளராயும், அரசரது மெய்க்காவலராயும் தொழில்களில் அமர்ந்தனர்.இவ்வாறு வந்து தங்கியவர்களையே 'யவணர் ' என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவர்கள் நாளடவில்தமிழரோடு தமிழராய்க் கலந்து இணைந்து விட்டனர்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ரம்பத்தில் அராபியாவில் 'இஸ்லாம்' என்ற புதிய மதம் தோன்றியது. உறங்கிக்கிடந்த அராபியர்கள் அதன் மூலம் புதியதோர் ஜீவசக்தியைப் பெற்று உலகம் வியக்கும் வண்ணம் ஒரு பலம்பொருந்திய பேரரசை நிர்மாணித்தார்கள். வாணிகத்துறையில் அவர்கள் அளவற்ற ர்வம் காட்டினார்கள். கீழ்நாடுகளுடனும் மேல் நாடுகளுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு பெரு வாணிகம் செய்தனர். தமிழ் நாட்டின் வளமான பண்டங்களை வாங்கி பிற நாடுகளில் விற்றனர்.தமிழரின் இனிய பண்பாட்டைப் பற்றி வெகுவாய்அறிந்து வியந்தார்கள்.
கி.பி.9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எகிப்தில் வாழ்ந்த அராபிய வணிகக் குடும்பங்களுக்கு பேராபத்துவந்தது. நாடு, நெறி திறம்பிய மன்னன் ட்சியால் சீர்குலைந்து, நன் மக்கள் நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.அவர்களில் சிலர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடையத் துணிவு கொண்டு கலங்களில் ஏறிச் சொல்லொணாத துன்பம் அடைந்து ஒருவாறு தென் குமரியைக் கடந்து பாண்டி நாட்டின் துறைமுகமாகியகாயலில் வந்து இறங்கினார்கள். பாண்டிய மன்னனைக் கண்டு தங்கள் பரிபவத்தைக் கூறித் தமிழ் நாட்டில்குடியேற அனுமதி கேட்டார்கள்.அரசர் அந்த அகதிகட்கு 'அஞ்சேல்' என அபயம் கொடுத்தார். சீர் குலைவுற்றஅவர்களது சீர் பெற வேண்டிய சாதனங்களும் தந்தார். அவர்களது உரிமைகளையும் கடமைகளையும் வகுத்துத்தாமிரப் பட்டயமும் கொடுத்தார்.அப்பட்டையம் தமிழரின் மாண்பை உலகுக்குப் பறை சாற்றும் ஒரு அழியாதசின்னம். தமிழரின் பண்பாட்டின் பிரதி பிம்பம். அதிலுள்ள சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :-
"................அறபி நாட்டு மிஸறு (எகிப்து) தேசாதிபதியின் கொடுங்கோலுக்கு அஞ்சி, மரக்கல யாத்திரையாய்கர்த்தர்களின் தேசச் செம்பி நாட்டில் பாசறை வகுத்து, கர்த்தர்களின் சமூகம் கொடுத்து அந்நாட்டில் குடியேறிஇருக்கத் தாமிரப் பட்டயம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டவர்களின் வம்சமும், எண்ணிக்கையும் :
சிம் வம்சத்தார் (23)பக்கிரி வம்சத்தார் (39)பாறூக்கு வம்சத்தார்(43)உமையா வம்சத்தார்(14)ராணுவ யுத்தர் (16)க்ஷவரகன் (3)நாச்சியார் பெண்டு (9) " " (16) " " (24)
" " (5)பெண் (6) " (1)அடிமை (4) " (7) " (17) " (12) " (2)இவர்கள் ஒரு மனப்பட்டு,முஹமது கல்ஜிக்கு தாமிரப் பட்டயம் கொடுக்கக் கேட்டுக் கொண்ட படியால்,இந்தக் குடியானவர்கள் மிஸறு தேசத்து காயிரூன் (கெய்ரோ) ஊரில் வசித்தவர்களான படியால்,தாமிரப்பட்டயங்கொடுக்கு மூருக்கு 'காயிரூன்' பட்டனமென்று நாமமும், மரக்கல யாத்திரையாக வந்ததற்காக இவர்களுக்குமரக்கல ராயர் என்ற நாமமும் நாம் சூட்டித் தாமிர பட்டயங்கொடுக்க உத்தரமருளி அரண்மனையார் கற்பித்தது.
" தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு மேற்கு,சிவந்தன் குளம், முள்ளக்காடு, கோபுரங்காடு, மஞ்சனக்காயல், கொற்கை,குலை நெல் கரிசை, முக்காணி கொலுவுத்துறை, ற்றூர், அதைச் சேர்ந்த மங்கலம், சொர்க்கப்பிள்ளைக்கரை,பின்னக்காயல்,வரங்காடு,தண்ணீர்ப்பந்தல்,கீரனுர், நல்லூர்,அம்மன் புரம், பள்ளிப்பத்து,மணற்காடு,ரஜமன்னியபுரம்,வீரபாண்டியன், மங்கள பாடி இவைகளடங்கிய குடிகளுக்கு முகமது கல்ஜி மரக்கலராயன்கற்பனையும்,அவனுக்கு இறைவரி செலுத்தக் கடைமையும் பளமும் பள்ளிப்பத்து அம்மன் புரங்கண்டு முதல்லாபத்தில் ஜெப லயங்கள் கட்டப் பாதியும்,தண்ணீர்ப் பந்தல் கண்டு முதலில் மரக்கலராயனுக்குப்பாதியும்பளமும், கன்னி முதல் மன்னார் மணல் மேடு இராமேஸ்வரம் வரை, இந்தக் குடியானவர்கள் சலாபமுத்துக் குளிக்க அம்பளவும்பளமும், தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு தோனி ஒன்னுக்கு 20 முத்துச் சிப்பியும்மரக்கலராயனுக்கு தோணி ஒன்னுக்கு 30 முத்துச் சிப்பியும் ,சித்த்ன லாசருக்கு 20 முத்துச் சிப்பியும் அம்பளவும்பளநிந்தமும்."
"அந்தந்த வருடமும் மகர மாசத்தையில், அரண்மனைக்கு மரக்கலராயன் 90 பொன்னும் உப்பு லாபத்தில் 100பொன்னுக்கு 25 பொன்னும் செலுதிவிடக் கடமையும், ஒரு பொன் எடையும் அதற்கு மேற்பட்ட ணிமுத்தும்,வலம்புரிச் சங்கும் அகப்பட்டால் அவைகளை மரக்கல ராயன் அரண்மனைக்கு சகல மேளவாத்தியத்துடன் செலுத்திட அரண்மனைக் கற்பனையும்."
"அரன்மனையார் உத்தரவிற்கு நாஞ்சி நாட்டு அதிபன் கொடுத்த வண்ணான் (5) ரெட்டியாபட்டி பாளைய கிருக்ஷ்ணநாயக்கன் கொடுத்த புதிய முத்தூர் மேளவாத்தியக்காரன்(5)க்கும் குடியானவர்கள் செலவு கொடுத்துக் கொள்ளவும்.பக்கிரி வம்சத்தலைவன் முகம்மது கல்ஜி மரக்கலராயன் தேசாதிபதி : பாறூக்கு வமிசத் தலைவன் உமறுமங்கூறு நியாதிபன் : சீம் வம்சத்தலைவன் கமாலுதீன் கடலதிபதி :உமையா வமிசத் தலைவன் சுபைறுஅடையில் முடையல்,ஊர் மணியம் ராணுவ யுத்தர்கள் , ஊர்க்காவல்,நாட்டுக்காவல்,கன்னி முதல் சேல மகரம்வரையுள்ள அரண் ம¨ண் குதிரைப் பாடிகளில் உள்ள இந்தக் குடியானவர்கள் குதிரை விற்பனை செய்துகொள்வதை ,அரண்மனைக் காவலர் பாளையக் காவலர் தடை செய்யக்கூடாது. சந்திராதிக்கம்,சந்திர சூரியப்பிரவேசமுள்ளவரைக்கும், அம்பள வும்பள சுதந்திரராக."
"சகாப்தம் எளக்ஷ்ய அ (798) ண்டு கீலக வருஷம்,மீன மாசம் சுக்கிரவாரம் உத்திர வேளையில்.............இந்தத் தாமிரப்பட்டயம் வெட்டி வரைந்து எழுதினேன் வீரவ நல்லூர் ககன மூர்த்தியாசாரி."
இந்த அபூர்வமான சாசனத்தைப் படிக்கப் படிக்க நாம் வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைகிறோம். பிறந்தநாட்டை விட்டு ஓடித்தப்பி அகதிகளாய் வந்தடைந்த அன்னியர்க்குத் தமிழ் நாட்டில் இத்தனை வரவேற்பா ?அதிலும் எவ்வளவு உரிமையும் சலுகையும்! கடற்கரைப் பகுதிகளில் குடியேற உரிமையும், முத்துக் குளிக்கவும்உப்பு விளைவிக்கவும், குதிரை வியாபாரம் செய்யவும் சலுகைகளும் எவ்வளவு தாராளமாய் வழங்கப் படுகின்றன.
பெரிய அரசுக்குள் அடங்கிய சிற்றரசு எனவே அவர்களைக் கூற வேண்டும்.அவர்களது நிர்வாகம் தான் எவ்வளவுதிறமையுடன் வகுத்துத் தரப்பட்டுள்ளது. ஒருவர் தேசாதிபதி ,மற்றொருவர் நியாயாதிபதி, பின்னொருவர்கடலாதிபதி மணியம் ஒருவர். இன்னும் அவர்களது ஊழியத்துக்கு வேண்டிய வண்ணார், மேளக்காரர், அம்பட்டர்முதலியோரையும் பாண்டி மன்னன் திட்டம் செய்து உதவுகிறான்.
மரக்கலராயர் என்ற பெயர் தான் எவ்வளவு அன்புடனும் அழகுடனும் சூட்டப்படுகிறது. அத்தமிழ் மன்னனின் வண்மைக்கும், ஒண்மைக்கும் சான்றாக இன்று தமிழ் நாட்டில் அம்மரக்கலராயரின் வகுப்பினர் மரக்காயர் என்றபெயருடன் கடற்கரைப் பகுதிகளிலெல்லாம் பல்கிப் பெருகிச் சிறந்த வணிக மன்னராய் வாழ்கின்றனர்.தமிழ்வளர்க்கின்றனர் .தமிழ் வளர்த்த தந்தையாகிய சீதக்காதி மரைக்காயரும் இவ்வகுப்பில் தோன்றியவரே.
மரக்காயர் பரம்பரையில் வந்த ஒருவரது பெயர் சரித்திரத்தில் தனிச் சிறப்பும் பெற்றது. ஸையத் ஜமாலுத்தீன் என்றஅரபி நாட்டு முஸ்லிம் தமிழ் நாட்டில் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தவர். அரேபியாவில் இருந்துநல்ல உயர் சாதிக் குதிரைகளைத் தென்னாட்டில் இறக்குமதி செய்யும் ஏகபோக உரிமையைப் பாண்டிய அரசரிடம் பெற்றார். காயல் பட்டினமே அவரது தலைமை காரியாலயஸ்தலம் .அரசர்க்கு அடுத்த பெருஞ்செல்வராய் அவர் விளங்கினார். எத்தனையோ மரக்கலங்கள் அவரது ஏவலில் இருந்தன. அவரது கப்பல்கள் செங்கடலில் இருந்துசீனம் வரை சென்று பொன்னொடும் பொருளோடும் திரும்பும்.உலகியலறிவும் நூலறிவும் மிகுந்த அவர் பிறறைவயமாக்கத் தக்க பேச்சுத் திறமையும் உடையவர்.அரசர் சுந்தர பாந்தியத் தெவரின் பேரன்பையும் பெரு நட்பையும் பெற்றவர்.கி.பி.1286-ல் பாண்டிய மன்னர் சீன அரசர் குப்ளைகானிடம் ஒரு தமிழர் தூது கோஷ்டியை அனுப்பிய பொழுது அதன் தலவராக ஸையத் ஜமாலுதீனே தெரிந்தெடுக்கப்பட்டார்.சீனச் சரித்திரம் இதற்குச் சான்று பகர்கிறது.இலங்கையில் பராகிரமபாகு ண்ட நாளில் (1288-1293) பாண்டியர் இலங்கை மீது படை எடுத்தனர்.அப்படைகளுக்கு சேனாதிபதியாக ஜமாலுத்தீனே நியமிக்கப்பட்டனர்.பாண்டி மன்னர் சபையில் இவருக்கு எவ்வளவு மதிப்பும் எத்துணை நம்பிக்கையும் உள்லம் கலந்த நல்லெண்ணமும் இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இந்துமுஸ்லிம் என்ற பேதம் எள்ளளவும் இன்றி தமிழ் நாட்டில் சவுஜன்யமும் சந்துஷ்டியும் அன்று முதல் இன்றும்நிலவுகிறது .
தமிழர் தமக்குச் செய்த தலையாய நன்றியை தமிழ் நாட்டு முஸ்லிம்கள் என்றும் மறந்தது இல்லை.வடக்கே இருந்துமுஸ்லிம் அரசர்களும் தளபதிகளும் போர்கொண்டு தென்னாடு வந்த போது தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தமிழரோடு தோள்தட்டி நின்று அவர்களை எதிர்த்து வீரப்போர் செய்தனர். மாலிகாபூர் என்ற சேனாதிபதியை எதிர்த்த வீரபாண்டியரின் சேனையில் 5000 முஸ்லிம் குதிரை வீரர்கள் இருந்தனர், என்று அக்காலச் சரித்திரக் காரரான குஸ்ருகுரிப்பிடுகிறார்.இந்து மன்னரின் கீழ் முஸ்லிம் படைகளை எதிர்த்துப் போராடிய அத்தமிழ் முஸ்லிம்களின் உள்ளப்பாங்கினை உணர்ந்து கொள்ள அச்சரித்திரக்காரருக்கு போதிய திருஷ்டி இல்லை.கையால் அவர்களைஏளனமாகவே அவர் குறிப்பிடுகிறார்." இவர்கள் பாதி இந்துக்களே.மத வைராக்கியமோ ஒழுக்கமோ இல்லாதவர்கள்.மரணம் தான் இவர்களுக்கு சரியான தண்டனை.எனினும் கலீமா சொல்ல அறிந்திருந்த படியால் பிழைத்துப்போனார்கள்." என்று அவர் எழுதுகிறார்.(See foot note on Malik kafur p.274 of A History of India by RomilaThapar )##
வடநாட்டு முஸ்லிம் அரசர்களின் தென்னாட்டுப் படையெடுப்பால் இங்குள்ள இந்துக்களைப் போலவே முஸ்லிம்களும் பெருந்துன்பமும் துயரமும் அடைந்தனர்.டெல்லி மன்னன் குத்புதீன் முபாரக் ஷா காலத்தில்(கி.பி.1317) அவனது தளபதி குஸ்ரூகான் தமிழகத்தின் மீது தண்டெடுத்து வந்தான்.மதுரையைத் தாக்கிப் பிடித்தான்.பாண்டியர் பிரதானிகளில் ஒருவராய் ஸிராஜுதீன் தாகீ என்பவர் மதுரையில் இருந்தார்.முஸ்லிம் என்பதற்காகஅவரைகுஸ்ரூகான் விட்டு வைக்கவில்லை. அவர் மாளிகையைச் சூரையிட்டது மல்லாமல்அவரது குடும்பத்தினரையும்கைது செய்தான்.அவரது அழகிய மகளையும் மணமுடித்துத்தர வேண்டுமென்று வம்பு பேசினான்.மானமிழந்த பின்உயிர் வாழாமை முன்னினிதே என்ற தமிழனது தன் மானக் கொள்கையைக் கொண்டே ஸிராஜுதீன் விஷமருந்திஉயிர் துறந்தார்.
சமீப காலத்தில் இந்திய நாட்டின் பிற பகுதிகளில் வகுப்பு மாச்சர்யம் மிகுந்து கொலைகளும்கொள்ளைகளும் நடந்த பொழுது தமிழ் நாட்டில்அமைதியும் சந்துஷ்டியும் நிலவி வந்ததைக் கண்டபிறர் ச்சரியமடைந்தனர். தமிழர் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட வினோதம் அவர்களுக்குப்புரியவில்லை. தமிழரின் தனிப் பண்பாடு அது.
##(Another expedition was sent under one of his officers ,Malik Kafur, a handsomeHindu convert from gujarat, and this was extremely successful. He had even attacked the city of Madurai ,the seat of the Panddyas ,and this was more than any other Northern rulers could claim. (p 274. )A HISTORY OF INDIA -ROMILA THAPAR)
தொகுப்பு: புதுவை ஞானம்.
இந்திய இசுலாமியரும் தமிழக இசுலாமியரும்
திரு. ஜகாரியா அவர்கள் எழுதிய எங்கே தவறு செய்தனர் இந்திய இசுலாமியர் ?
நூல் அறிமுகம் மட்டும் தான் படிக்கக் கிடைத்தது. முழு நூலும் படித்துப் பார்க்க சையாகத்தான் இருக்கிறது .அது ஒரு புறம் இருக்க; எப்போதோ படித்த ஒரு பழைய கட்டுரை நினைவுக்கு வருகிறது. .இந்தியா சுதந்திரம்அடைவதற்கு ஏழு மாதம் முன்பாக ' சக்தி ' என்ற பத்திரிகையில் திரு. அப்துல் காதர் என்பவர் எழுதியதாகஞாபகம்.இது 'கவிதாச்சரன்' இதழில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் நடந்த அந்த கால கட்டத்த்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.இதன் சிறப்புப் பின்னனி என்ன எனத் தேடி அருமையானதொரு கட்டுரையை வழங்கி இருக்கிரார் அவர்.அந்தசிறப்பு மிகு கட்டுரைக்கும் 'திண்ணை' வாசகர்களுக்கும் இடையே குறுக்கே நந்தி போல் படுத்திருக்க நான்விரும்பவில்லை.நீங்களே படித்துப் பாருங்கள்.னாலும்,திருமதி.ரொமீலா தாப்பர் அவர்களது கருத்து ஒன்றினைத்தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள சை.அரையும் குறையுமாக நினைவில் இருப்பதை இப்போதும்அசலானவற்றை பின்னொரு சமயமும் பார்க்கலாம்.
அக்பர் காலத்துக்கு முன்னரே அசலாக இந்தியாவுக்குள் வந்தது சிலர்.பதவிக்காக மதம் மாறியவர் பலர்.ஷரியத்தையும் முழுமையாக ஏற்க முடியாமல் பழைய இந்துப் பழக்க வழக்கங்களையும் கைவிட முடியாமல்பலர் தவித்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.பிற்காலத்தில் தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்த தளபதிமாலிக்காபூர் இந்துவாக இருந்து பதவிக்காக மதம் மாறியவர் என்று வேறொரு வரலாற்றாசிரியர் எழுதியதும்படித்திருக்கிறேன்.இதனை நான் இங்கு குறிப்பிட ஒரு காரணம் உண்டு. அந்த கூலித் தளபதியை விரட்டியடித்தஅசல் இசுலாமியர்கள் பற்றிய கட்டுரை இது. .இனி அந்தக் கட்டுரையைப் பார்ப்போம்.
"the muslim population was only a fraction of the total and muslim elite could not have felt entirely secure.Those converted to islam in the early days were usually low-caste Hindus who chose to leavethe Hidu social fold for that of Islam ,beleieving that under Islam they would have better oppurtunities than ifthey remained low-caste Hindus .Such converts could provide little support for the ruling Muslim elite.Converts from higher Hindu social strata to Islam rarely made the change out of religious sympathy with Islambut out of opportunism, realizing that conversion was a necessary step before they could hope for economic and social advancement or political power. Ostensibly they were much of , but actually, andquite naturally ,they were regarded with suspicion by Turkish and Afghan nobles.(p.278 &9 )
Each year the sea brought a mere hand ful of traders ,who settled in the West coast ports .Islamtherefore had to rely increasingly on Hindu converts. The existing Indian population was slow in beingconverted.The fact that the muslims have always been a minority cmmunity in India would suggest ,as hasbeen pointed out elsewhere,that the vast mejority of Hindus were not so desperate a plight as to seekconversion. Perhaps at the lower levels of soceity the advantages to be gained by conversion were not spectacular. The Muslim community consisted mainly of converted Hindus ,and obviosly their pattern of living would not differ radically from that of the larger community in the midst of which they lived.
But the cultural fusion of the two ideologies was less predictable amonst the ruling classes andtheir seperateness was insisted upon by theologians of both religions and on occation, by politicallyambitious sections of the aristocracy .The call to Muslim loyalty or Hindu loyalty could always be used for the purposes other than religious, and this sentiment could be exploited when convenient.(p.289&90)
Muslim society as it evolved in India fell in to three broad divisins- the noblity both secular and religous,the artisans' and the cultivators.The nobility was made up of diverse trends , Turks, Afganisthans., prrsians, and Arabs,with the first two pre dominant ,sice they held power.To begin with , clan affiliations kept themdivided ,but once they wrer forced to accept India as their prominent home they became to coalseceinto a fairly homogeneous group. The fact of their being a minority in the country assited this process(p.298). ( A HISTORY OF INDIA_ ROMILA THAPER)
தமிழர் பண்பாடு ---------------------பாரத நாட்டின் பண்பாடு பயன் நிறைந்த பண்பாடு .பல கலாச்சாரங்கள் கலந்து மறைந்து உருவான, இனிமையும்புதுமையும் நிறைந்த பண்பாடு. .இப்புண்ணிய பூமியில் இன்று நின்று நிலவும் கலைகளையும் ,காவியங்களையும்மொழிகளையும், மதங்களையும் ராய்ந்து பார்ப்போமானால் ,அவை உருவாதற்கு உதவிய பல் வேறு ஜாதியதேசீய சக்திகளின் நிழலை நாம் அவற்றில் காணலாம். இந்த நன்னாட்டின் எதிர் கால உயர்வை உள்ளத்தில் கொண்ட யாவரும் இந்தியப் பண்பாட்டின் பல்வேறு முகங்களை பாது காக்கப் பாடுபட வேண்டும்.உண்மையில்உரம் தருவதும் உயிர் தருவதும் கிய சக்திகளை எல்லாம் ர்வத்துடன் இனிது வரவேற்று உபயோகமாய்இந்தியப் பண்பாண்ட்டோடு இணையச் செய்து அத¨னை வளர்க்க வேண்டும் .ஒரு பண்பாடு வளர அவ்வபோது தோண்றி¢ய சமூக, அரசியல் தார்மீக மாறுதல்களை ஏற்றே பண்பாடு பரிமளிக்கிறது.
தொண்மையும் பழமையும், கனிவும் செறிவும் மிகுந்த தமிழர் பண்பாட்டிலும் பல கலாசாரங்கள் கலந்துள்ளன. பண்டைத் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடு. சீரும் சிறப்பும் செழிப்பும் விழிப்பும் பெற்ற நாடு. காயும் கனியும், பூவும் பொழிலும் நிறைந்த பூமி., முத்தும், பொன்னும், மணியும், பவளமும், நம் நாட்டில் விளைந்தன. எனவே வர்த்தகமும்வாணிகமும் பெருகின. வேற்றுநாட்டு மக்கள் பலர் விரைந்து இந்நாடு வந்தனர். விருந்தோம்பலில் சிறந்தோங்கியதமிழர் அம்மக்களையெல்லாம் அவ்வப்போது வரவேற்று அவர்களுக்கு இடைவிடாமல் உணவு கொடுத்து நிழல் கொடுத்து எழில் கொடுத்து காப்பாற்றினர். தமிழ் நாட்டின் கீர்த்தி உலகெல்லாம் பரவியது.
தமிழ் நாட்டு வணிகர் நேர்மையும் நாணயமும் நிரம்பியவர்கள். வியாபாரத் துறையிலோ அல்லது வேறுஎத்துறையிலோ அவர்கள் பொய்யுரை புகலமாட்டார்கள். பொருட்களைக் கொள்ளை விலைக்கு விற்பதில்லை.ஊதியம் சிறிதே பெற்றுப் பெருகிய வாணிகம் நடத்தினார்கள். பழைய தமிழ் இலக்கியமாகிய 'பத்துப் பாட்டு' என்ற தொகுதியிலுள்ள'பட்டினப்பாலை' என்ற பாட்டில் அக்கால வணிகரின் நாணயத்திற்குத் தகுந்த சான்று கிடைக்கிறது.சோழர் பழம் பதியாகிய காவிரிப் பூம்பட்டினத்தின் வணிகரது உள்ளச்சிறப்பை அது வர்ணிப்பதைக் காணலாம்.
நடுவு நின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு(ம்) ஒப்ப நாடிக் கொள்வதூஉங் மிகை கொளாது கொடுப்பதூஉங் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை (வரிகள் 207 - 212)
நாணயமான வியாபாரமும் கண்ணியமான ஒழுக்கமும் அயலவரை அன்புடன் தரிக்கும் பேருள்ளமும் கொண்ட தமிழரின் நிழலில் பல அன்னியர்கள் பெருவிருப்புடன் வந்து தங்கினர். கடல் கடந்தும் வந்தனர். ரோமர்களும் கிரேக்கர்களும் மிகப் பழங்காலத்திருந்தே வாணிகத்தின் பொருட்டு தமிழ் நாட்டில் வந்து குடியேறினார்கள். ரோம அரசரது நாணயங்கள் பழந்துறைமுகப் பகுதிகளிலும் தலைநகர ஸ்தலங்களிலிலும் ஏராளமாய்த் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ரோமர், கிரேக்கர், அராபியர், சீனர்களின் பண்டக சாலைகள் தமிழ்நாட்டில் ங்காங்கே ஏற்பட்டன.காவிரிபூம்பட்டினத்தின் கடைவீதிகளில் இந்தியாவின் நாலாவிதப் பகுதிகளிலலுள்ள பண்டங்ளும் வந்து குவிந்தன. குதிரைகளும் அயல்நாட்டிலிருந்து கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும் காலில் வந்த கருங்கறி மூடையும் வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல்துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத் (து) க்கமும் (பட்டினப்பாலை 185 - 191)
அங்கு வந்து நிறைந்தன.
வியாபாரம் விரும்பி இங்கு வந்த பிற நாட்டு மக்கள் தமிழரின் உயர் பண்பாட்டாலும் உள்ள நிறைவாலும்கர்ஷிக்கப்பட்டு தமிழ் நாட்டைத் தங்கள் தாயகமாகவே கருதி இங்கேயே தங்கி விட்டனர். இவர்களில்பலர் கை தேர்ந்த சிற்பிகளாகவும், கம்மாளராயும், அரசரது மெய்க்காவலராயும் தொழில்களில் அமர்ந்தனர்.இவ்வாறு வந்து தங்கியவர்களையே 'யவணர் ' என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவர்கள் நாளடவில்தமிழரோடு தமிழராய்க் கலந்து இணைந்து விட்டனர்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ரம்பத்தில் அராபியாவில் 'இஸ்லாம்' என்ற புதிய மதம் தோன்றியது. உறங்கிக்கிடந்த அராபியர்கள் அதன் மூலம் புதியதோர் ஜீவசக்தியைப் பெற்று உலகம் வியக்கும் வண்ணம் ஒரு பலம்பொருந்திய பேரரசை நிர்மாணித்தார்கள். வாணிகத்துறையில் அவர்கள் அளவற்ற ர்வம் காட்டினார்கள். கீழ்நாடுகளுடனும் மேல் நாடுகளுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு பெரு வாணிகம் செய்தனர். தமிழ் நாட்டின் வளமான பண்டங்களை வாங்கி பிற நாடுகளில் விற்றனர்.தமிழரின் இனிய பண்பாட்டைப் பற்றி வெகுவாய்அறிந்து வியந்தார்கள்.
கி.பி.9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எகிப்தில் வாழ்ந்த அராபிய வணிகக் குடும்பங்களுக்கு பேராபத்துவந்தது. நாடு, நெறி திறம்பிய மன்னன் ட்சியால் சீர்குலைந்து, நன் மக்கள் நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.அவர்களில் சிலர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடையத் துணிவு கொண்டு கலங்களில் ஏறிச் சொல்லொணாத துன்பம் அடைந்து ஒருவாறு தென் குமரியைக் கடந்து பாண்டி நாட்டின் துறைமுகமாகியகாயலில் வந்து இறங்கினார்கள். பாண்டிய மன்னனைக் கண்டு தங்கள் பரிபவத்தைக் கூறித் தமிழ் நாட்டில்குடியேற அனுமதி கேட்டார்கள்.அரசர் அந்த அகதிகட்கு 'அஞ்சேல்' என அபயம் கொடுத்தார். சீர் குலைவுற்றஅவர்களது சீர் பெற வேண்டிய சாதனங்களும் தந்தார். அவர்களது உரிமைகளையும் கடமைகளையும் வகுத்துத்தாமிரப் பட்டயமும் கொடுத்தார்.அப்பட்டையம் தமிழரின் மாண்பை உலகுக்குப் பறை சாற்றும் ஒரு அழியாதசின்னம். தமிழரின் பண்பாட்டின் பிரதி பிம்பம். அதிலுள்ள சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :-
"................அறபி நாட்டு மிஸறு (எகிப்து) தேசாதிபதியின் கொடுங்கோலுக்கு அஞ்சி, மரக்கல யாத்திரையாய்கர்த்தர்களின் தேசச் செம்பி நாட்டில் பாசறை வகுத்து, கர்த்தர்களின் சமூகம் கொடுத்து அந்நாட்டில் குடியேறிஇருக்கத் தாமிரப் பட்டயம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டவர்களின் வம்சமும், எண்ணிக்கையும் :
சிம் வம்சத்தார் (23)பக்கிரி வம்சத்தார் (39)பாறூக்கு வம்சத்தார்(43)உமையா வம்சத்தார்(14)ராணுவ யுத்தர் (16)க்ஷவரகன் (3)நாச்சியார் பெண்டு (9) " " (16) " " (24)
" " (5)பெண் (6) " (1)அடிமை (4) " (7) " (17) " (12) " (2)இவர்கள் ஒரு மனப்பட்டு,முஹமது கல்ஜிக்கு தாமிரப் பட்டயம் கொடுக்கக் கேட்டுக் கொண்ட படியால்,இந்தக் குடியானவர்கள் மிஸறு தேசத்து காயிரூன் (கெய்ரோ) ஊரில் வசித்தவர்களான படியால்,தாமிரப்பட்டயங்கொடுக்கு மூருக்கு 'காயிரூன்' பட்டனமென்று நாமமும், மரக்கல யாத்திரையாக வந்ததற்காக இவர்களுக்குமரக்கல ராயர் என்ற நாமமும் நாம் சூட்டித் தாமிர பட்டயங்கொடுக்க உத்தரமருளி அரண்மனையார் கற்பித்தது.
" தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு மேற்கு,சிவந்தன் குளம், முள்ளக்காடு, கோபுரங்காடு, மஞ்சனக்காயல், கொற்கை,குலை நெல் கரிசை, முக்காணி கொலுவுத்துறை, ற்றூர், அதைச் சேர்ந்த மங்கலம், சொர்க்கப்பிள்ளைக்கரை,பின்னக்காயல்,வரங்காடு,தண்ணீர்ப்பந்தல்,கீரனுர், நல்லூர்,அம்மன் புரம், பள்ளிப்பத்து,மணற்காடு,ரஜமன்னியபுரம்,வீரபாண்டியன், மங்கள பாடி இவைகளடங்கிய குடிகளுக்கு முகமது கல்ஜி மரக்கலராயன்கற்பனையும்,அவனுக்கு இறைவரி செலுத்தக் கடைமையும் பளமும் பள்ளிப்பத்து அம்மன் புரங்கண்டு முதல்லாபத்தில் ஜெப லயங்கள் கட்டப் பாதியும்,தண்ணீர்ப் பந்தல் கண்டு முதலில் மரக்கலராயனுக்குப்பாதியும்பளமும், கன்னி முதல் மன்னார் மணல் மேடு இராமேஸ்வரம் வரை, இந்தக் குடியானவர்கள் சலாபமுத்துக் குளிக்க அம்பளவும்பளமும், தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு தோனி ஒன்னுக்கு 20 முத்துச் சிப்பியும்மரக்கலராயனுக்கு தோணி ஒன்னுக்கு 30 முத்துச் சிப்பியும் ,சித்த்ன லாசருக்கு 20 முத்துச் சிப்பியும் அம்பளவும்பளநிந்தமும்."
"அந்தந்த வருடமும் மகர மாசத்தையில், அரண்மனைக்கு மரக்கலராயன் 90 பொன்னும் உப்பு லாபத்தில் 100பொன்னுக்கு 25 பொன்னும் செலுதிவிடக் கடமையும், ஒரு பொன் எடையும் அதற்கு மேற்பட்ட ணிமுத்தும்,வலம்புரிச் சங்கும் அகப்பட்டால் அவைகளை மரக்கல ராயன் அரண்மனைக்கு சகல மேளவாத்தியத்துடன் செலுத்திட அரண்மனைக் கற்பனையும்."
"அரன்மனையார் உத்தரவிற்கு நாஞ்சி நாட்டு அதிபன் கொடுத்த வண்ணான் (5) ரெட்டியாபட்டி பாளைய கிருக்ஷ்ணநாயக்கன் கொடுத்த புதிய முத்தூர் மேளவாத்தியக்காரன்(5)க்கும் குடியானவர்கள் செலவு கொடுத்துக் கொள்ளவும்.பக்கிரி வம்சத்தலைவன் முகம்மது கல்ஜி மரக்கலராயன் தேசாதிபதி : பாறூக்கு வமிசத் தலைவன் உமறுமங்கூறு நியாதிபன் : சீம் வம்சத்தலைவன் கமாலுதீன் கடலதிபதி :உமையா வமிசத் தலைவன் சுபைறுஅடையில் முடையல்,ஊர் மணியம் ராணுவ யுத்தர்கள் , ஊர்க்காவல்,நாட்டுக்காவல்,கன்னி முதல் சேல மகரம்வரையுள்ள அரண் ம¨ண் குதிரைப் பாடிகளில் உள்ள இந்தக் குடியானவர்கள் குதிரை விற்பனை செய்துகொள்வதை ,அரண்மனைக் காவலர் பாளையக் காவலர் தடை செய்யக்கூடாது. சந்திராதிக்கம்,சந்திர சூரியப்பிரவேசமுள்ளவரைக்கும், அம்பள வும்பள சுதந்திரராக."
"சகாப்தம் எளக்ஷ்ய அ (798) ண்டு கீலக வருஷம்,மீன மாசம் சுக்கிரவாரம் உத்திர வேளையில்.............இந்தத் தாமிரப்பட்டயம் வெட்டி வரைந்து எழுதினேன் வீரவ நல்லூர் ககன மூர்த்தியாசாரி."
இந்த அபூர்வமான சாசனத்தைப் படிக்கப் படிக்க நாம் வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைகிறோம். பிறந்தநாட்டை விட்டு ஓடித்தப்பி அகதிகளாய் வந்தடைந்த அன்னியர்க்குத் தமிழ் நாட்டில் இத்தனை வரவேற்பா ?அதிலும் எவ்வளவு உரிமையும் சலுகையும்! கடற்கரைப் பகுதிகளில் குடியேற உரிமையும், முத்துக் குளிக்கவும்உப்பு விளைவிக்கவும், குதிரை வியாபாரம் செய்யவும் சலுகைகளும் எவ்வளவு தாராளமாய் வழங்கப் படுகின்றன.
பெரிய அரசுக்குள் அடங்கிய சிற்றரசு எனவே அவர்களைக் கூற வேண்டும்.அவர்களது நிர்வாகம் தான் எவ்வளவுதிறமையுடன் வகுத்துத் தரப்பட்டுள்ளது. ஒருவர் தேசாதிபதி ,மற்றொருவர் நியாயாதிபதி, பின்னொருவர்கடலாதிபதி மணியம் ஒருவர். இன்னும் அவர்களது ஊழியத்துக்கு வேண்டிய வண்ணார், மேளக்காரர், அம்பட்டர்முதலியோரையும் பாண்டி மன்னன் திட்டம் செய்து உதவுகிறான்.
மரக்கலராயர் என்ற பெயர் தான் எவ்வளவு அன்புடனும் அழகுடனும் சூட்டப்படுகிறது. அத்தமிழ் மன்னனின் வண்மைக்கும், ஒண்மைக்கும் சான்றாக இன்று தமிழ் நாட்டில் அம்மரக்கலராயரின் வகுப்பினர் மரக்காயர் என்றபெயருடன் கடற்கரைப் பகுதிகளிலெல்லாம் பல்கிப் பெருகிச் சிறந்த வணிக மன்னராய் வாழ்கின்றனர்.தமிழ்வளர்க்கின்றனர் .தமிழ் வளர்த்த தந்தையாகிய சீதக்காதி மரைக்காயரும் இவ்வகுப்பில் தோன்றியவரே.
மரக்காயர் பரம்பரையில் வந்த ஒருவரது பெயர் சரித்திரத்தில் தனிச் சிறப்பும் பெற்றது. ஸையத் ஜமாலுத்தீன் என்றஅரபி நாட்டு முஸ்லிம் தமிழ் நாட்டில் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தவர். அரேபியாவில் இருந்துநல்ல உயர் சாதிக் குதிரைகளைத் தென்னாட்டில் இறக்குமதி செய்யும் ஏகபோக உரிமையைப் பாண்டிய அரசரிடம் பெற்றார். காயல் பட்டினமே அவரது தலைமை காரியாலயஸ்தலம் .அரசர்க்கு அடுத்த பெருஞ்செல்வராய் அவர் விளங்கினார். எத்தனையோ மரக்கலங்கள் அவரது ஏவலில் இருந்தன. அவரது கப்பல்கள் செங்கடலில் இருந்துசீனம் வரை சென்று பொன்னொடும் பொருளோடும் திரும்பும்.உலகியலறிவும் நூலறிவும் மிகுந்த அவர் பிறறைவயமாக்கத் தக்க பேச்சுத் திறமையும் உடையவர்.அரசர் சுந்தர பாந்தியத் தெவரின் பேரன்பையும் பெரு நட்பையும் பெற்றவர்.கி.பி.1286-ல் பாண்டிய மன்னர் சீன அரசர் குப்ளைகானிடம் ஒரு தமிழர் தூது கோஷ்டியை அனுப்பிய பொழுது அதன் தலவராக ஸையத் ஜமாலுதீனே தெரிந்தெடுக்கப்பட்டார்.சீனச் சரித்திரம் இதற்குச் சான்று பகர்கிறது.இலங்கையில் பராகிரமபாகு ண்ட நாளில் (1288-1293) பாண்டியர் இலங்கை மீது படை எடுத்தனர்.அப்படைகளுக்கு சேனாதிபதியாக ஜமாலுத்தீனே நியமிக்கப்பட்டனர்.பாண்டி மன்னர் சபையில் இவருக்கு எவ்வளவு மதிப்பும் எத்துணை நம்பிக்கையும் உள்லம் கலந்த நல்லெண்ணமும் இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இந்துமுஸ்லிம் என்ற பேதம் எள்ளளவும் இன்றி தமிழ் நாட்டில் சவுஜன்யமும் சந்துஷ்டியும் அன்று முதல் இன்றும்நிலவுகிறது .
தமிழர் தமக்குச் செய்த தலையாய நன்றியை தமிழ் நாட்டு முஸ்லிம்கள் என்றும் மறந்தது இல்லை.வடக்கே இருந்துமுஸ்லிம் அரசர்களும் தளபதிகளும் போர்கொண்டு தென்னாடு வந்த போது தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தமிழரோடு தோள்தட்டி நின்று அவர்களை எதிர்த்து வீரப்போர் செய்தனர். மாலிகாபூர் என்ற சேனாதிபதியை எதிர்த்த வீரபாண்டியரின் சேனையில் 5000 முஸ்லிம் குதிரை வீரர்கள் இருந்தனர், என்று அக்காலச் சரித்திரக் காரரான குஸ்ருகுரிப்பிடுகிறார்.இந்து மன்னரின் கீழ் முஸ்லிம் படைகளை எதிர்த்துப் போராடிய அத்தமிழ் முஸ்லிம்களின் உள்ளப்பாங்கினை உணர்ந்து கொள்ள அச்சரித்திரக்காரருக்கு போதிய திருஷ்டி இல்லை.கையால் அவர்களைஏளனமாகவே அவர் குறிப்பிடுகிறார்." இவர்கள் பாதி இந்துக்களே.மத வைராக்கியமோ ஒழுக்கமோ இல்லாதவர்கள்.மரணம் தான் இவர்களுக்கு சரியான தண்டனை.எனினும் கலீமா சொல்ல அறிந்திருந்த படியால் பிழைத்துப்போனார்கள்." என்று அவர் எழுதுகிறார்.(See foot note on Malik kafur p.274 of A History of India by RomilaThapar )##
வடநாட்டு முஸ்லிம் அரசர்களின் தென்னாட்டுப் படையெடுப்பால் இங்குள்ள இந்துக்களைப் போலவே முஸ்லிம்களும் பெருந்துன்பமும் துயரமும் அடைந்தனர்.டெல்லி மன்னன் குத்புதீன் முபாரக் ஷா காலத்தில்(கி.பி.1317) அவனது தளபதி குஸ்ரூகான் தமிழகத்தின் மீது தண்டெடுத்து வந்தான்.மதுரையைத் தாக்கிப் பிடித்தான்.பாண்டியர் பிரதானிகளில் ஒருவராய் ஸிராஜுதீன் தாகீ என்பவர் மதுரையில் இருந்தார்.முஸ்லிம் என்பதற்காகஅவரைகுஸ்ரூகான் விட்டு வைக்கவில்லை. அவர் மாளிகையைச் சூரையிட்டது மல்லாமல்அவரது குடும்பத்தினரையும்கைது செய்தான்.அவரது அழகிய மகளையும் மணமுடித்துத்தர வேண்டுமென்று வம்பு பேசினான்.மானமிழந்த பின்உயிர் வாழாமை முன்னினிதே என்ற தமிழனது தன் மானக் கொள்கையைக் கொண்டே ஸிராஜுதீன் விஷமருந்திஉயிர் துறந்தார்.
சமீப காலத்தில் இந்திய நாட்டின் பிற பகுதிகளில் வகுப்பு மாச்சர்யம் மிகுந்து கொலைகளும்கொள்ளைகளும் நடந்த பொழுது தமிழ் நாட்டில்அமைதியும் சந்துஷ்டியும் நிலவி வந்ததைக் கண்டபிறர் ச்சரியமடைந்தனர். தமிழர் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட வினோதம் அவர்களுக்குப்புரியவில்லை. தமிழரின் தனிப் பண்பாடு அது.
##(Another expedition was sent under one of his officers ,Malik Kafur, a handsomeHindu convert from gujarat, and this was extremely successful. He had even attacked the city of Madurai ,the seat of the Panddyas ,and this was more than any other Northern rulers could claim. (p 274. )A HISTORY OF INDIA -ROMILA THAPAR)
தொகுப்பு: புதுவை ஞானம்.
Friday, February 2, 2007
இந்திய இசுலாமியரும் தமிழக இசுலாமியரும்
Posted by
புதுவை ஞானம்
at
5:10 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
excellent article. very significant historical data. - gnani.
Post a Comment