Sunday, November 4, 2007
Saturday, March 31, 2007
[+/-] |
|
பாரதம்
அமரர் சத்யஜித் ரே அவர்களின் புகழ் மிகு திரைக்காவியமான 'ஜல்ஸா கர் ' (MUSIC HALL ) மாளிகை உங்களுக்கு நினவுக்கு வருகிறதா ? அப்படிப்பட்ட கம்பீரமானதொரு மாளிகை நான் பிறந்த தெருவிலேயே ' கடைசி வீடு ' என்ற பெயரால் அழைக்கப்பட்டு ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் யானை ஒன்று தான் இல்லை. மற்றபடி குதிரைகள் கோச்சு வண்டி, லஸ்தர் விளக்குகள், ஒளியைப் பிரதிபலித்து அதிகப் படுத்தும் ரஸகுண்டுகள் தஞ்சாவூர் ஒவியங்கள், வேலைப்பாடு மிகுந்த மரச் சாமான்கள் ஏராளமான நகை நட்டுகள் எல்லாமும் இருந்தன. என் மனவி இறந்து போய் கால் நூற்றாண்டு கடந்து நான் அங்கு போய்ப் பார்க்கையில் இடிந்து குட்டிச் சுவராய் அந்த மாளிகை. கண் கலங்கியது. அந்த வீட்டு சாரட்டு வண்டியில் முகம் பார்த்து பல்லிளித்தது,பழித்துக்காட்டி,நாக்கைத்துருத்தி பயம் காட்டி மகிழ்ந்தது. எம்.ஜி.ஆர் வாழ்க ஜிவாஜி ஒழிக என்று கோச்சு வண்டியில் படிந்திருந்த புழுதியின் மேல் எழுதி மகிழ்ந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. வீட்டுக்காரரின் சந்ததிகள் விற்றுக் காசாக்கிக் கொண்டு எங்கோ சென்று விட மிஞ்சியிருந்த ஒரு பங்காளி குடிசையில் குடியிருந்தார்.அவரிடம் பல முறை கெஞ்சிக் கூத்தாடி பெற்ற ஒரு புத்தகம்-‘ பாரதம்’. முதல் 25-ஆம் பக்கம் வரை கிழிந்து போய் விட்டது 399 பக்கம் தாண்டியும் கிழிந்து விட்டது. அந்த முதல் 25 பக்கத்தில் ‘திபருவத்தாதிபருவம்’ என்றொரு அத்தியாயம் இருந்திருகிறது. யார் எழுதியது? யார் பிரசுரித்தது ? எந்த ஆண்டு வெளி வந்தது ? ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த மொழி நடையும், வாக்கிய அமைப்பும், அச்சு நேர்த்தியும் வியப்பிலாழ்த்துகிறது.அந்தக் காலத்தில் அதனை வாய்விட்டு ராகம் போட்டு ஒருவர் படிக்க மொத்த கிராமமும் எப்படி வாய் பிளந்து ரசித்துக் கேட்டிருக்கும் என்பதையும் கற்பனை செய்து துயரத்தோடு, அப்பளம் போல் நொறுங்கும் இந்தப் புத்தகத்தை எவ்வாறேயுனும் காப்பாற்றியாக வேண்டுமே என்ற கவலையில் உங்களுடன் சில பக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். “முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை" என்ற பழமொழியை அந்த மாளிகை நினைவூட்டுகிறது.னால் இனி இந்தப் புத்தகம் வாசகர் நெஞ்சில் வாழுமென நம்புவோமாக !
தி பர்வம் ------------------- கய்யியிலாழியெடுத்தருள் கண்ணனை மய்யுலாமழை வண்ணனைப் பாண்டவர் உய்ய வந்து தயஞ்செய்த பாநுவை வய்யமுண்ட செவ்வாயனை வாழ்த்துவாம். ------------------------------கேளுங்கள் ஓ. . . சவுனகாதி முனிவர்களே!சந்திரகுல சிகாமணியாகிய ஜெநமேஜய மகாராரஜனை வைசம்பாயனர் பார்த்து ஓ. .,. . அரசனே! இந்த ஸ்ரீமகாபாரதம் - தி பர்வம் - சபா பர்வம் - ரண்ய பர்வம் - விராட பர்வம் - உத்தியோக பர்வம் - பீஷ்மபர்வம் - துரோண பர்வம் - கர்ந பர்வம் - சல்லிய பர்வம் - சவுத்திக பர்வம் - ஸ்ரீபர்வம் - சாந்தி பர்வம்- அநுசரசநிக பர்வம் - அஸ்வமேத பர்வம் - சிரம வாச பர்வம் _ மவுசலபர்வம் _ மஹா பிரஸ்தானிக பர்வம் _சொர்க்காரோகண பர்வம் கிய பதினெட்டு பர்வமாக இருக்கும் இரி திறத்தார் சேனைகளும் 18 அக்குரோணி, ஒரு அக்குரோணிக்குத் தொகை என்னவெனில் தேர் ஒன்று, யானை ஒன்று,குதிரை மூன்று, காலாள் ஐந்து இது ஒரு பந்தி இப்படி மூன்று கொண்டது( தேர் 3,யானை 3, குதிரை 9, காலாள் 15)சேனாமுகம்.இப்படி சேனாமுகம் மூன்று கொண்டது குமுதம்,இப்படிகுமுதம் மூன்று கொண்டது கணகம், கனகம் மூன்று கொண்டது வாகினி , வாகினி மூன்று கொண்டது புலுதம், புலுதம் மூன்று கொண்டது சமுத்திரம், சமுத்திரம் மூன்று கொண்டது சமாக்கியம், சமாக்கியம் மூன்று கொண்டது அக்குரோணி.
இப்படி பாண்டவர் ஏழு அக்குரோணியும் சுயோதனன் முதலானோர் பதினெட்டு அக்குரோணியும் உடைத்தாகி இரு திறத்தாரும் போர் செய்தது பதினெட்டு நாள். இந்தப் பத்னெட்டு நாளில் பத்து நாள் வரைக்கும் காங்கேயன், ஐந்து நாள் வரைக்கும் துரோணாச்சாரி, இரண்டு நாள் வரைக்கும் கர்நன், மற்ற ஒரு நாள் உதயாதி பதினந்து நாழிகை வரைக்கும் சல்லியன்,மற்ற பதினைந்து நாழிகை வரைக்கும் சுயோதனன் சேனாதிபதிகளாயிருந்தார்கள். இவர்களைப் பாண்டவர்கள் வெற்றி பெற்று உலக முழுதையும் கைக்கொண்டு அரசு செலுத்திப் பரம பதம் போய்ச் சேர்ந்தார்கள். இது கால கதி. இந்த காலகதி விளங்க அந்த ஸ்ரீ மகாபாரதத்தை யாவருமுணர கிரந்தமாகச் செய்து வெளிப்படுத்தினவர் என் குருவாகிய வேத வியாசர் அவர் பிறப்பை முன்னங்கூறுகிறேன் .
வேத வியாசர் உற்பவ சருக்கக் கதை.
கடல் சூழ்ந்த நெடிய உலகத்தில் நீர் வளம் குடிவளம் நிலவளம் பெற்று விளங்குகின்ற நாடெவற்ரிலும் சிறப்புற்றிருக்கின்றது சோதி நாடு.அந்தச் சோதி நாட்டிலிருந்து உலக முழுதும் தன்னை வணங்கச் செங்கோல் நடாத்தி வருகிறவன் இரவி குல திலகனான வசுவென்பவன். அவ்வசு மந்திரி முதலானவர்கள் தன்னைச் சூழ்ந்து வர வெளிப்பட்டுக் காட்டுக்குச் சென்று வேடையாடி இளைப்பாற முனிவர்கள் தவஞ்செய்கிற பெரிய சோலையில் வந்தான். அச்சோலையில் தவஞ்செய்து கொண்டிருக்கிற முனிவர்களைப் பார்த்துத் தவத்துக்கு மிஞ்சின பொருள் யாதொன்றுமில்லை தலால், நாம் தவந்செய்ய வேண்டுமென்று கருதி மந்திரி முதலானவர்களை அழைத்து ஓ! மந்திரிமார்களே! இதுவரை நான் அரசு செய்து வந்தது போல் யாவர்க்கும் ஒரு குறைவும் வராமல் அரசு செலுத்துங்கள் என்று கூறி தனது முத்திரை மோதிரத்தைக் கொடுத்து விட்டான். மந்திரி முதலானவர்கள் அரசன் முகக்குறியைக் கண்டு தடுத்துப் பேசச் சக்தி இல்லாதவர்களாய் , அரசன் கட்டளைப்படி சோதி நாட்டில் வந்து யாதொரு குறைவும் வராமல் அரசு செலுத்தி வந்தார்கள்.(தொடரும்) இங்கே வசுவென்பவன் முனிவர்களிடத்திற்சென்று வணங்கி அவர்கள் கிருபையினால் தவ நிலை சேர்ந்து அநேக நாள் தவஞ்செய்திருந்தான். இப்படி அருமையான தவஞ்செய்கிற வசுராசனுக்கு முன் இந்திரன் வந்து ஓ. . வசுராஜனே ! உலகிலுள்ள எல்லா அரசர்களிலும் நீ மநு ஸாஸ்திர விதி பிசகாமல் செங்கோல் நடாத்தித் தருமதேவதையை நாலுபாதத்தில் நடக்கச் செய்து குடிகளைக் காப்பாற்றி வருகிறவன் தவ நிலை சேர்ந்து தவந்செய்கிற காரணமென்னவென்று வினவ, வசுராஜன் இந்திரனை வணங்கி ஓ. . ஐயனே ! தவத்துக்கு மிஞ்சின பொருள் வேறொன்றுமில்லையென்று நினைத்து சஞ்சலத்துக்குக்கிடமாகிய உலகத்தை நீக்கி இத்தவத்தைச் செய்யக்கருதி தவநிலை சேர்ந்தேனென்றான். இந்திரன் ஓ. . . வசுராஜனே! தவத்திற்குயர்ந்த பொருள் வேறொன்றுமில்லை அது உண்மைதான்.அந்தத் தவம் அரசனால் பெறுக வேண்டும். அப்போது தவத்துக்கு மிகவும் உயர்ந்தது அரசு.அவ்வரசை மநுநெறி வழுவாமல் நடாத்தி வந்தால் அதைவிட மேலான பயன் என்னயிருக்கிறது? தலால் உனக்கு என்ன வேண்டும் அவ்வரத்தைக் கொடுக்கிறேன்.அதைப்பெற்று முன் போலவே அரசு செலுத்தி வாவென்று வழங்க வசுராஜன் ஓ! ஐயனே எந்த்ந்த லோகங்களைக் காண விரும்புகிறோனோ அந்தந்த லோகங்களைக்காண விரும்புகிறேன் என்று சொல்ல, இந்திரன் அக்கருத்தின்படி, ஒரு திவ்ய விமானங்கொடுத்து சத்துருவை நாசஞ்செய்ய ஒரு கால தண்டமும் கமல மாலையும் சொர்ண நிறமும் பாலித்து இந்திரன் தனதிருப்பிடம் சென்றான்.வசுராஜன் அவ்வரத்தைப் பெற்றுக்கொண்டு தவ நிலை விட்டுத் தன்னாட்டிற்சென்று காவிகாம்பர சடாடவி தண்டு கமலங்களை நீக்கி கங்கை முதலாகிய தீர்த்தங்களில் ஸ்நானஞ்செய்து நல்ல வஸ்திரங்களையுடுத்தி மகர குண்டல ரகேயூர கடக கங்கண முதலான பரணங்களை அணிந்து மல்லிகை முல்லை முதலாகிய பரிமளமிகுந்த நறுமலர் மாலைகள் சூடி சந்தனம் புநுகு கஸ்தூரி கற்பூர சவ்வாது பூசி நவரத்தினமிட்டிழைத்த சிங்காதனத்தில் இனிது வீற்றிருந்து தேசத்தரசர்களெல்லாம் வணங்க வேத வேதியர்கள் பல சிகள் கூற மகுடாபிஷேகனாகி மநுஸாஸ்திர விதி பிசகாமல் முன் போலவே அரசு செலுத்தித் தனக்கு நாலு வரங்கொடுத்த இந்திரனுக்கு மகிழ்வுண்டாக அவனுக்குத் திருவிழா நடத்தி வந்தான்.அதனாலே நீர்வளமிகுதியாகி குடிவளமிகுந்தது. இச்செய்கையை மற்ற அரசர்கள் கண்டும் கேட்டும் அவரவர்கள் தனித்தனியே இந்திரனுக்குத் திருவிழா நடத்தினார்கள். அதனாலே இந்திரனுக்கு அதிக மகிழ்ச்சியுண்டாகி எல்லா வளமும் பெருகும்படி நீர் வளத்தைப் பெருகச் செய்தான்.இப்படி உலக முழுதுஞ் சுகமடைந்தது.இந்த வசு ராஜன் இந்திரன் கொடுத்த விமானத்தின் மீதேறித் தன் கருத்தில் நினைத்த லோகங்களுக்கெல்லாம் சென்று அவிடத்திலுள்ள அதிசயங்களைப் பார்வையிட்டுக்கொண்டு அர்சு செலுத்தி வருகிற நாளில் ஒரு நாள் மந்திரி முதலானவர்கள் புடை சூழ வேடிக்கையார்த்தமாய் வெளிப்பட்டுத் தன்னகரத்தின் மரும்க்கில் இருக்கிற குளிர்ச்சியையுடைய சுத்தமதியென்னும் பெயர் பெற்ற நதியருகில் வந்து அவ்விடத்திலுள்ள விநோதங்களைப் பார்த்து வருகிறபோது, தனது பராக்கிரமத்தை மந்திரிகளுக்கும் மற்றவர்களுக்கு மறிவிக்க வேண்டி அங்கே உயர்ந்து பருத்திருந்த கோலாகலமென்கிற வெற்பைத் தன் காலினால் எற்றி, அந்நதியில் தள்ளித் தன் நகரத்தில் சென்றான். பின்பு சுத்தமதியென்கிற நதிபோகத்தையனுபவிக்கக் கருதி ஒரு பெண் ரூபந்தரித்துக் கோலாகலமென்னும் வெற்பைக் கணவனாகக் கொண்டு கூடி வசுபதத்தனென்றொரு புத்திரனையும் கிரிகை என்றொரு புத்திரியையும் பெற்றாள். அந்த இரண்டு இரண்டு மக்களையும் அன்புடன் வளர்த்து வருகிற நாளில் கிரிகை என்பவள் பேதைப்பருவம் பெதும்பைப் பருவங்கடந்து மங்கைப்பருவமான காலத்தில் ஒருநாள் தன்னந்தனியே அந்நதியருகில் விளையாடிக் கொண்டிருந்தாள்.அந்தத் தருணத்தில் முன் போல வசுராஜன் வேடிக்கையார்த்தமாய் அந்நதியருகில் வந்து விநோதங்களைப் பார்த்து வருகிறபோது நதியருகில் விளையாடித் திரிகிற கிரிகை என்பவளைக் கண்டு இந்தக் கன்னிகை யார் ? மஹா ரூப வதியாய் இரதியைப்போல் பிரகாசிக்கிறாள், இஅள் வதநமோ சந்திர பிம்பம் , குழலோ முகில் , நெற்றியோ மூன்றாம் பிறை, புருவமோ கருப்பு வில், கண்ணோ கருவிளமலர்,நாசியோ குமிழம்பூ,கன்னமோ கண்ணாடி, வாயோ சேதாம்பல், பல்லோ முல்லை, கழுத்தோ கமுகு, முலையோ மலை,தோளோ வேணு, முன் கையோ மகர யாழ், அகங்கையோ தாமரை, இடையோ அந்தரம், அல்குலோ அரவப்படம்,தொடையோ வாழைத்தம்பம், முழந்தாளோ ஞண்டு,கணைக்காலோ வரால், பாதமோ புத்தகம்,இவளுக்கொப்ப இவளேயன்றி வேறொருவரில்லையென்று அதிக மையலாகிப் பிரேமை கொண்டு அந்தக் கிரிகை விளையாடுகிறதைப் பார்த்து சித்திரப் பிரதிமை போல் நிற்கிறதை மந்திரிகள் அறிந்து _ ஓ! ஓ! நமதரசன் அக்கன்னிகையின் மேல் மையலாகினானென்று குறிப்பினாலுணர்ந்து அக்கன்னிகையிடத்தி சென்று ஓ _ அம்மணி ! நீ யார் ? உன் பெயரென்னவென்று வினவ கிரிகை ஓ புண்ணியவான்களே, நான் இந்த நதியின் புத்திரி என் பெயர் கிரிகையென்று கிளற்றி அந்நதியிலிறங்கி விட்டாள். மந்திரிகள் அரசனிடத்தில் வந்து ஓ_அரசனே! அப்பெண் இந்த நதியின் புத்திரியாம் . அந்த அம்மனுக்கு கிரிகை என்னும் பெயராம் என்று கூறினார்கள். அரசன் கேட்டு அந்நதியருகிற் சென்று சொல்லுகின்றான் : உலகுக்குத் தாயாகி எவர்களையும் பாது காக்கின்ற தேவதா சுரூபி ! அடியேன் மனங்களிக்க நின்னிடமாயிருக்கிற கிரிகை என்னும் கன்னிகையை மணம் செய்து கொடுக்க வேண்டும் அம்மணியென்று பிரார்த்தித்தான். அந்தச் சுத்தமதியென்னும் நதி ஒரு பெண் உருவந்தரித்து இரண்டு மக்களுடன் அரசன் முன்றோன்றி இரண்டு மக்கள் வந்த விருத்தாந்தத்தையும் சொல்லி _ ஓ அரசனே! நீ மஹா புண்ணியவான் லோகாதிபன் தலால் உன் ஸ்துதிக்கு மகிழ்ந்து இந்த இரண்டு மக்களையும் உனக்குக் கொடுத்தேன். கன்னிகைய்யகிய கிரிகையை நீ மணம் புரிந்து இந்தப் புத்திரனைச் சேனாதிபதியாய் வைத்துக்கொள்ளென்று கட்டளையிட்டு முன் போல் நதி உருவமாணாள். அரசன் கிரிகையென்னுங்கன்னிகையை ஐம்பத்தாறு தேசத்தரசர்களும் அறிய மங்கலம் புணைந்து வசுபதத்தனுக்கு சேனாதிபத்தியங்கொடுத்துப் பின்பு கிரியையோடு பள்ளியரை சேர்ந்து பஞ்சணை மஞ்சத்திலிருந்து தாம்பூலந்தரித்து 5 வித லிங்கனமும்,11 வித அதர பாணமும், 7 வித நகக்குறியும்,7 விதத் தொழிலும், 8 வித தந்தக்குறியும் புரிந்து, அமுதமிருக்கும் 15 தாநத்தையுமுணர்ந்து, 8 வித தாடனமும்,8 வித புட்குரலுமுண்டாக, 118 விதக் கரணங்கலைப் புரிந்து, கலவிப் போரிலுண்டாகும் 16 வித நயமுமியற்றி, கமும் மாவியுமொன்றெனக் கட்டி முத்தமிட்டு வட்டமிட்ட செப்புத் தனத்தை கைத்தலத்திற் பற்றிப்பிடித்து குழைத்துக் களித்து இரதியு மதனெனக்கூடிக் கலந்து பருவ கிரிகை மகிழ்ச்சியுறச் சிறந்த லீலை புரிந்து வைபோக சையோகசம்போகமடைந்து வாழ்ந்து வருகிற நாளில் கிரியையென்பவள் கர்ப்பவதியானாள். அரசன் கர்ப்பங்கொண்ட தன் மனைவிக்கு நல்ல மாம்சங்களைக் கொண்டு வந்து கொடுக்கக் கருதி மந்திரிமார்கள் _ இரத கஜ துரக பதாதி வேடர்கள் _ நாய்கள் வலையர் முதலானவர் புடை சூழ வெளிப்பட்டுக் காட்டிற்சென்று யானை கரடி சிங்கமுதலான பெரிய மிருகங்களை அதஞ்செய்து நல்ல ருசியுள்ள மிருகங்களை வதைத்து அதன் மாமிசத்தை எடுத்து அரண்மனைக்கு அனுப்புவித்துச் சேனைகளோடு மஹா விநோதமுள்ள ஒரு சோலையில் வந்திறங்கி அவ்விடத்தில் பெரிய மாளிகையைப் போல் வஸ்திரங்களாலியற்ரி அக்கூடார மாளிகையில் சப்பர கூட மஞ்சமிட்டு அன்றிரவில் சயனித்திருந்தான். அப்போது சந்திரோதயமாயிற்று . இளந்தென்றல் வீசிற்று..புஷ்பங்களெல்லாம் பரிமளித்தது. அது கண்டு அரசன் மிகுந்த காமங்கொண்டு கிரிகையினது உருவத்தை மனத்தில் நினைத்து தனந்தனியே புரண்டு அயர்ந்து நித்திரை செய்தான். அப்படி நித்திரை செய்கிறபோது கிரிகை வந்து தன்னைக் கூடிக் கலந்தது போல் கனவு கண்டு வீரியம் கலிதமாயிற்று. உட்னே அரசன் விஷித்து ஓ! ஓ ! மோசம் வந்தது. நாம் காம வெறி கொண்டு நித்திரை செய்ததனால் வீரியம் வெளிப்பட்டது. இது வீணாகப்போனால் மகா குற்றம் நேரிடும். இதற்கென்ன செய்கிறதென்று சற்று நேரம் லோசித்து தன்னெதிரில் வைத்திருக்கிற வல்லூறு என்கிற பட்சியை சைகை செய்தஷைத்து _ ஓ! பட்சியரசே!இந்த வீரியத்தைக் கொண்டு போய் என் மனவிக்குக் கொடுவென்று கட்டளையிட்டு ஒரு இலையைப் பறித்து வட்டில் போல் தைத்து அவ்வீரியத்தை அதிற்புகட்டி அந்த வல்லூறுவினிடத்திற் கொடுத்து அனுப்பினான். அந்த வல்லூறு அவ்வட்டிலை மூக்கினாலேற்றுக்கொண்டு கிரிகையினிடத்து வரக்கருதி யமுனையாறு வரைக்கும் வந்தது. அந்கு ஒரு ல மரத்தில் பசியினால் கனவருத்தமடைந்திருந்து ஒரு இராஜாளி இருந்தது. இந்த வல்லூறு செல்கிற அரவந்தெரிந்து பறந்து வந்து பார்த்து இது இரையெடுத்துப் போகிறது அதைப் பறித்துப் புசிக்கலாமென்று கருதி வல்லூறைத் தடுத்தது. இந்த வல்லூறு இராஜாளியை நோக்கி நீயேன் என்னை மறிக்கிறாய் நான் அரசன் அலுவலாகச் செல்கிறேன்.வீணாய் வருத்தத்துக்கிடம் வைத்துக் கொள்ளாதே வழிவிடென்று கூற, சீ _ சீ நானென்ன உன்னை விடுவனா? உன் மூகிலிருக்கிற இரையை நான் புசிக்கமல் போகிறதில்லையென்று பறந்து வந்தடித்தது. வல்லூறு அது கண்டு அடடா _ நீ எனக்கொரு அணுமாத்திரமென்று இகழந்து இதுவும் எழும்பிப் பறந்து அந்த இராஜாளியை அடித்தது. இப்படி இரண்டு பட்சிகளும் போராடுகிறபோது இராஜாளியினது மூக்கு அந்த வீரியமிருக்கிற வட்டிலிற்பட்டு இலை கிழியவே வீரியம் யமுனையாற்றில் இர்ண்டு துளியாய் விழுந்தது. உடனே வல்லூறு இராஜாளியை விட்டு விட்டு அரசனிடத்து வந்து நடந்த விருத்தாந்தத்தைக் கூறிற்று. அரசன் கேட்டு கன வருத்தமடைந்து அன்றிராத்திரி அங்கிருந்து மறுநாள் காலமே தன்னகரம் வந்து சேர்ந்து மனைவியைக் கண்டு மகிழ்ந்து முன் போல் அரசு செலுத்தியிருந்தான்.
இங்கே யமுனையாற்றில் விழுந்த வீரியத்தை அப்சரஸ்த்ரீகளிலொருத்தி பிரமன் சாபத்தினாலே மச்சமாகி சஞ்சரித்திருந்தாள். அவள் இரண்டு பிரிவாக வீழ்ந்த அவ்வீரியத்தைப் புசித்தாள். அன்று முதல் அவள் கர்ப்பவதியாகிப் பிரசவம்காலம் சமீபித்திருக்கிற தருணத்தில் மீன் பிடிக்கிற வலையர் வந்து அந்த யமுனையாற்றில் வலையை வீசினார்கள். அவ்வலையி மீனமாயிருக்கிற அப்சரஸ்த்ரீ அகப்பட்டாள். வலையர் பார்த்து இந்த மீன் மிகவும் பெரிதாயிருக்கிறதுமன்றி இதன் வயரும் பெருத்திருக்கின்றது இதை நமது அரசனிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்று கருதி அந்தத்தாச ராஜனிடத்தில் சேர்த்து விட்டார்கள். தாசராஜன் அந்த மீனத்தின் வயிற்றைப் பக்குவமாகக் கிழித்துப் பார்த்தான். அதிலொரு புத்திரனும் புத்திரியுமிருந்தார்கள்.புத்திரர்களில்லையென்று கன வருத்தமடைந்திருந்த தாசராஜன் கண்டு பரமானந்தத்தை யடைந்தவனாய் விழித்த கண் விழித்தபடி பார்த்திருக்கிற தருணத்தில் மீனமாயிருந்த அப்சரஸ்த்ரீ அந்தரத்தில் ஒரு திவ்ய விமானத்தில் தோன்றி ஓ தாசராஜனே! என்று அழைத்து அதோ உன்னருகிலிருக்கிற மீன் வடிவு நான் தான் அப்புத்திரர்களோ உலகமுழுதும் அரசு செலுத்தும் வசுராஜன் வீரியத்தால் வந்தவர்களென்று அந்த விருத்தாந்தத்தைச் சொல்லிப் பின்னும் தாசராஜனைப் பார்த்து ஓ தாச ராஜனே! என் வரலாற்றைக் கூறுகிறேன் கேள்.அந்தர வாசிகளாகிய அப்சர ஸ்த்ரீகளில் நானுமொருத்தி. பிரமனிடத்தில் பூசைக்குரிய பணிவிடைப் பெண்ணாயிருந்தேன். ஒரு நாள் பூசைக்குச் சலந்திரட்ட அமுனையாற்ருக்கு வந்து அந்த ற்றிலிருக்கி8ற மீன்களின் விநோதங்களைப் பார்த்திருந்து பூசை வேளை தப்பின பின்பு பிரமனிடத்திற் சென்றேன்.பிரமன் என்னைப் பார்த்து ஓ பெண்ணே இந்நேரவரையில் என்ன செய்தாயென்று கேட்டதின் பேரில் உண்மையைக் கூறினேன்.அதன் மேல் சினங்கொண்டு மீன் விநோதங்களைப் பார்த்திருந்தமையால் அவ்வாற்றிலேயே மீனமாகி இருவென்று சாபமிட்டார். அதன் மேல் மிகுந்த துன்பமடை பிரமனை மிகவும் வேண்டிக்கொண்டேன்.பிரமன் மகிழ்ந்து வசுராஜன் வீரியம் யமுனையாற்றில் விழப்போகிறது . அதை நீ புசிப்பாய் வலையர்கள் பிடித்து தாசராஜனுக்குக் கொடுப்பார்கள்.தாசராஜன் உன் வயற்றைக் கிழிப்பான் அப்போது நீ பெற்ற சாபம் தீருமென்று கூறினார். அப்படியே இன்றைய தினம் அச்சாபம் தீர்ந்த்தென்று கூறி முன்போல் பிரமனிடத்திற் சென்றாள்.
அதைக்கேட்ட தாசராஜன் திடுக்கிட்டு இம்மக்கள் நமதரசனாகிய வசுராஜன் புத்திரர்கள். இனி நாம் வைத்திருக்கிறது தகுதியல்ல. அரசனிடத்திற் சேர்த்து அரசனிட்ட கட்டளைப்படி நடப்பது உத்தமமென்று கருதி அம்மக்களைப் பொற்றட்டிலேந்தி அரசனிடத்துக் கொண்டு வந்து வைத்து அப்ரசஸ்த்ரீ கூறியவற்றைத் தெரிவித்து நின்றான். அரசன் மகிழ்ந்து புத்திரனை எடுத்துக்கொண்டு அந்தப் புத்திரனுக்கு மச்சராஜன் என்று பெயரிட்டு வளர்த்து தன் சேனைக்குத் தலவனாய் வைத்துக்கொண்டு புத்திரியைத் தாசராஜனுக்குக் கொடுத்து அனுப்பினான்.தாச ராஜன் மிகுந்த களிப்புடன் அந்தப் புத்திரிக்கு மச்சகந்தி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அந்த மச்சகந்தி பேதைப்பருவங்கடந்து பெதும்பைப் பருவத்தை அடந்து தந்தையாகிய தாசராஜனிடத்திற்சென்று வணங்கி _ ஐயா_எனக்கு ஒரு ப்டவு கொடுத்தால் நமது குலக்கலாச்சாரப்படி யமுனையாற்ரிலிருந்து வருகிற பெரியோர்களுக்கு படவு விட்டுக்கொண்டிருக்கிறேனென,தாசராஜன் அவ்வாறே சிறிய படவுவொன்று செய்து கொடுத்தான்.மச்சகந்தி அப்படவை சில பேரால் எடுத்து யமுனையில் விடுத்து வருகிற பெரியோர்களுக்கும் மற்றவர்களுக்கும் படவு விட்டிருந்தாள்.இப்படி சில காலஞ்சென்ற பின்பு ஒரு நாளில் பிரமன் மைந்தன் வசிஷ்டன் ,வசிஷ்டன் மைந்தன் சத்தி சத்தி மைந்தன் பராசர் அந்த பராச மஹாமுனி தனாலே உலகத்துக்கு நன்மையுண்டாக வேண்டுமென்றும் அதற்கு ஒரு புத்திரனைப் பெற வேண்டுமென்று கருதி இருபதேழு நட்சத்திரங்களில் ஒரு நட்சத்த்ரம் உச்சமாகிறது அந்த நட்சத்திரம் உச்சமாகிற காலத்தில் ஒரு ஸ்த்ரீயைக் கூட வேண்டுமென்று யோசித்து அந்தக்காலம் வரும் வரை தவத்திலிருந்தார். அந்தக் காலம் சமீபித்தது அது கண்டு தவநிலை விட்டெழுந்து நகரங்களுக்குச் செல்ல அதி வேகமாய் வந்தார்.குறுக்கே யமுனையைக் கண்டார். அந்த யமுனையோ மிகவும் பெருக்கெடுத்திருந்தது. பராசர் அதையறிந்து அந்த ற்றங்கரையில் படவோட்டியிருக்கும் மச்சகந்தியருகில் வந்து ஓ பெண்ணே நானொரு கோரிக்கையை உட்கொண்டு நகரங்களுக்கு போக வந்தேன். வழியில் இந்த று தோன்றிற்று. இதைக்கடந்து போவோமென்றால் பெருக்கெடுத்திருக்கின்றது. தயௌ செய்து படவு விடுவையாகில் ற்றைக்கடந்து என் கோரிக்கையை முடித்துக் கொள்வேனென மச்ச கந்தி ஓ ஐயா பெரியவரே றோ பெருக்கெடுத்திருக்கின்றது. உம்மை மாத்திரம் படவிலேற்றிச் செல்வேனாகில் படவுக்குத் தகுந்த பாரமல்ல.ஒரு வேளை படவு கவிழ்ந்தால் மோசம் வரும்.சற்று நேரம் இருந்தால் யாராவது இன்னுஞ்சிலபேர்கள் வருவார்கள். அப்போது தடையின்றி உம்மை அக்கரையில் சேர்க்கிறேனென ,பராசர் மச்சகந்தியைப் பார்த்து ஓ பெண்ணே படவுக்குத் தகுந்த பாரம் எவ்வளவோ அவ்வளவுக்கு நான் பாரமாயிருப்பேன் நீ சந்தேகப்படாமல் படவை விடுவென்று கூற,மச்சகந்தி இவர் யாரோ மஹாத்மாவென்று நினைத்து ஓ ஐயா வாரும் படவிலேறும் என்றாள்,பராசர் மகிழ்வடைந்து தமது தவ மகிமையால் படவுக்குத் தகுந்த பாரமிருக்க நினத்துப் படவிலேறினார். மச்சகந்தி படவையாற்றில் செலுத்தி வருகிறபோது படவு கனத்திருக்கிறது தெரிந்து இவர் மஹா தவசி என்று மனதில் நினைத்து மிகுந்த சாக்கீரதையுடன் படவைத் தள்லி வருகிறாள். படவிலிருந்த பராசர் காயத்தை நோக்கினார். அப்போது இவர் நாடிய நட்சத்திரம் உச்சத்தில் வருகிற தருணமாயிருந்தது. அதைப் பார்த்து கன வருத்தமடைந்து ஓ _ஓ _ நாம் கோரிய காலமாகிற தருணமாயிற்றே இனி என்ன செய்யப் போகிறோமென்று வருத்தப்பட்டு இனி இந்தப் படவைத் தள்ளும் பெண்ணிடத்தாவது காலந்தப்பாமல் கூட வேண்டுமென்று நினைத்து மச்சகந்தியைப் பார்த்து ஓ பெண்கள் நாயகமே இவ்வளவு வருத்தப்பட்டு வந்தும் நான் உட்கொண்ட கோரிக்கை நிறைவேற்றுவதற்கு காலந்தப்பிப் போகின்றது. நான் உட்கொண்ட கோரிக்கை என்னவென்றால் இதோ வானத்தில் இருக்கிற நட்சத்திரம் உச்சியில் வருகிறபோது ஒரு ஸ்த்ரீயைச் சேர்ந்து அவளால் ஒரு புத்திரனைப் பெறக்கருதி வந்தேன். நட்சத்திரமோ இன்னுஞ்சற்று நேரத்துக்குள் உச்சிக்கு வரப் போகின்றது. நானோ ற்றிலிருக்கிறேன். தலால் கிருபை கூர்ந்து பரந்து வளர்ந்து வருகிற உன் குயம் என் மார்பிலழுந்த அணைவாயாகில் என் கோரிக்கை நிறைவேறுவதுமன்றி இவ்வுலகத்தில் நீயும் அழிவில்லாத புகழையும் பெறுவாயென்று இனிய வார்த்தைகள் கூற, மச்சகந்தி நாணமுற்று ! பெரியவராயிருக்கிற இவ்ர் நம்மைப் புணர அழைகிறார் மனதில் நினைத்து ஓ ஐயனே! நீர் மஹா தவசி . நானோ இன்னும் மங்கைப் பருவமடையாதவள். என்னைப் பார்த்து உம்மைக் கூடென்று சொல்வது தகுதியா ? அரும்பைக் கசக்கி முகர்ந்தால் பரிமளிக்குமா ? அதுபோல் பருவ காலமல்லாத என்னைக் கூட வேண்டுமென்று கருதினது தகுதியா ? அப்படியல்லவென்று புணரயத்தனித்தாலும் என் உடல் முழுதும் மச்ச கந்தம் .நீர் தான் எப்படி சுகிப்பீர் ? மேலும் நான் கன்னிகை. டூதை யோசிக்காமல் இவ்வாறு கூறுகிறது தருமமா ? .என்னுடலோ புலால் நாற்றம் நாறுதென பராசர் மச்சகந்தியைப் பார்த்து ஓ பெண்ணே உன்னுடலில் இருக்கும் மச்சகந்தம் நீங்கி இன்று முதல் பரிமள கந்தியென்று உனக்குப் பெயராகக் கடவது.நீ என்னைக் கூடுமுன் போல கன்னிகையாகவே இருப்பாயென மச்சகந்தி இவ்வசனத்தைக்கேட்டவுடன் உடல் முழுதும் பரிமளம் வீசுகிறதைப் பார்த்துஓ _ ஓ இவர் தவ சிரேஷ்டர் மறுக்கக் கூடாது என்உ கருதி கூறுகிறாள் ஓ ஸ்வாமி தங்கள் கருத்துக்கிசைந்தபடி நானும் சம்மதித்தேன். னால் நான் மங்கைப் பருவமல்ல மேலும் தாங்கள் நினைத்த நினைப்புக்குத் தகுதியான காலமுமிடமுமல்லவே பகற்காலமாகவும் திவ்ய நதியாயியு மிருக்கிறதே இதற்கென்னெ செய்கிறதென்று கூற, பராசர் மச்சகந்திக்கு மஙைப் பருவத்தை அநுக்கிரகஞ்செய்து ற்றின் மத்தியில் ஒரு திட்டு தோன்றும்படி செய்து திருநீற்றில் கொஞ்சமெடுத்து காயத்தில் ஊதினார். உடனே யிரங்கதிர்களோடு பிரகாசிக்கிற சூரியனை மறைக்க மூடுபனி சூழ்ந்தது.அப்பனியினால் இரவு போலாயிற்று. அப்போது பராசர் மச்சகந்தியைப் பார்த்து _ ஓ பெண்கள் நாயகமே ! உன் கருத்தின்படி தகுந்த காலத்தையும் சேகரித்தேன். இனி தடையின்றி என்னைக்கூடு என்று வேண்ட, மச்சகந்தி அதிமகிழ்ச்சியை அடைந்து கருத்தொத்து அந்த ற்றின் மத்தியில் தோன்றிய திட்டில் இறங்கி இருவருங்கூடிக் கலந்தார்கள். அப்போது பராசருக்கு வீரியங்கலிதமாயிற்று, உடனே பராசர் எழுந்து யாதொன்றும் பேசாமல் ற்றைக் கடந்து நடந்தார்.மச்சகந்தி உடனே கர்ப்பவதியாகி மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பரப்பிரம்ம வஸ்துவாகியும் எனக்குக் குருவாகியும் விளங்குகின்ற வேத வியாசர் உதயமானார்.
விருத்தம்
முரணிறைந்த மெய்க்கேள்வியோனருளினான் முஞ்சியும் புரிநூலு மிரணியஞ் செழுங்கொழுந்து விட்டனவென் வேணியுந்தானுந் தரணியெங்கனும் வியாதனென்றுரை கெழுதபோதன முனியப்போ தரணியின் புறத்தனலென வென்வயினவதரித்தன னன்றே.
___________________________________________
புதுவை ஞானம்j.p.pandit@gmail.comgnanaththaru blogspot.com
Friday, March 16, 2007
Wednesday, March 14, 2007
[+/-] |
சுக்கிர நீதியை - அர்த்த சாஸ்திரத்தை |
சுக்கிர நீதியை - அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார். ------------------------------------------------- ‘ அந்த அழகிய மரம்’ என்ற நூலினைத் தமிழாக்கம் செய்ய உட்கார்ந்து பல்வேறு சொந்த சோகங்களால் தொய்வு ஏற்பட்ட ஒரு இடைவெளியில், வெறுமனே திண்ணைப் பள்ளியில் மட்டும் பயின்ற போதிலும் மாபெரும் தமிழ்த் தொண்டாற்றிய பண்டிதமணியாரின் நினைவு கொப்பளித்து வந்தது.
16.10.1881 அன்று மகிபாலன்பட்டி திரு. முத்துக் கருப்ப செட்டியார், திருமதி சிவப்பி ச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் தனது மூன்றாம் வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பீடிக்கப் பட்டார். அந்த பாதிப்பினால் வெளியூர் சென்று படிக்க முடியாத நிலையிலும் கூட தமது மன உறுதியால் தாமே படித்து முன்னேறினார்.
அந்தக் காலத்தில் செட்டிநாட்டில் முறையாகத் தமிழ்க்கல்வி பயிலுவதற்கான பள்ளிக் கூடங்கள் இல்லை. செட்டியார்களுக்கு அவ்வாறு கல்வி கற்க வேண்டுமென்ற ர்வமும் இல்லை.கீழ்வாய் இலக்கத்துக்கு மேல் படிக்கச் சொன்னால்
‘ பிள்ளையும் படிக்க வேண்டாம் பிரம்படி படவும் வேண்டாம்,சள்ளையாம் சுவடி தூக்கிச் சங்கடப் படவும் வேண்டாம்’ .
என்று கூறும் நிலையில் அன்றைய நகரத்தார் இருந்தனர். தமிழ்க் கல்வி பயின்றவன் வாணிகத்துக்கும் உலகியலுக்கும் பயன்பட மாட்டான் கோவிலூர் மடத்துக்கு ஓடிவிடுவான் எனவும் அஞ்சினர். (கோவிலூர் மடம் : கொவிலூர் என்பது காரைக்குடியை அடுத்த ஒரு சிற்றூர்.அங்கு ஒரு மடம் இருக்கிறது. செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த துறவிகளே இதில் மடாதிபதியாக இருக்க வேண்டும் என்பது மரபு. ண்டவர் முத்து ராமலிங்கர், ஞான தேசிகர், துறவு சாமிகள், சிதம்பர ஐய்யா , பொன்னம்பல சாமிகள் போன்ற தமிழறிஞர்கள் அம்மடத்தில் இருந்தனர்.)
அக்காலத்து நகரத்தார்களுக்கு திருமகள் மேலிருந்த பற்று கலைமகள் பால் இருந்ததில்லை.தங்கள் குழந்தைகளை ஐந்தாம் ண்டிலேயே பள்ளிக்கு அனுப்பும் மரபு இல்லை. பண்டித மணி அவர்கள் நோயுற்ரு இருந்தமையால் ஏழு வயது வரை பள்ளிக்குச் சென்றதாகத் தெரியவில்லை. அதன் பின்னர் பெற்றோர்கள் அவரைத் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாதக் கட்டணம் ஒரு பணம் அதாவது இரண்டு அணா / 13 புதுக்காசுகள்.
செட்டிநாட்டுத் திண்ணைப் பள்ளியில் படிப்பு என்பது அரிச்சுவடி எண்சுவடி தான். ஏனைய படிப்பு வட்டித்தொழிலுக்குத் தேவைப்படவில்லை. பொருளீட்டி வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் ,ஏனைய படிப்புக்குச் செலவிடும் காலம் வீணாவதாகக் கருதினர். ஏழு மாத காலம் அங்கே கல்வி பயின்றதைப் பற்றி பண்டிதமணி கூறியதாவது :
“ யான் றேழ் ண்டு அகவை உடையவனாக இருக்கும் பொழுதுதான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள த்திச்சூடி,உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச் சிறு சிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. ‘ .! இவை எத்தனை அழகாகவுக் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன !’ என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருள்களும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஒரு சில தினங்களிலேயே கற்று மனப்பாடம் செய்து கொண்டேன். அதன் பின்னர் இவ்வினத்துப் பொருள்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளன என்பதும் அறிந்தேன். அவற்றைப் பெற்றுப் பயிலுதல் எத்துணை இன்பமாக இருக்கும் என்று எண்ணினேன். அக்காலத்தில் நூல்கள் கிடைப்பதே அருமை. திருத்தொண்டர் புராணம்,கம்பராமாயணம்,சிற்சில பிள்ளத்தமிழ் இவைகளே அவ்விளம்பருவத்தே என் கைக்குக் கிடைத்தன. அவற்றை ர்வத்தோடே ஓதினேன்.அப்பெரு நூல்களும் தஞ்செய்யுட்பொருளை இளைஞனாகிய எனக்கு உலோவாது அளித்தன. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும் சிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம் பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது.”
இப்படியாக திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்துப் பல்கலைக்கழகப் பேராசிரியரான திரு.பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் ற்றிய தமிழ்ப் பணிகள் சொல்லி முடியாது.அவற்றில் சிலவற்றை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவது ஒரு முன்னோடி மனிதன் எப்படியெல்லாம் சாதிக்க முடியும் என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும்.
இவர் தமிழ் அறிஞராக திகழ்ந்தது மட்டுமின்றி வடமொழி அறிஞராகவும் சுடர்விட்டுப் பிரகாசித்து இருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. இவர் தமிழாக்கம் செய்த வடமொழி நூல்களின் பட்டியலைப் பாருங்கள் !
கௌடில்யரின் அர்த்த சாஸ்ஸ்திரம் (பொருணூல்)மிருச்சகடிகம் (மண்ணியல் சிறுதேர்)ஒளனசம் (சுக்கிர நீதி)சுலோசனா உதயண சரிதம்மாலதீ மாதவம்பிருதா பரித்ரீயம்
தமிழில் சொந்தமாக எழுதியவை :
உரைநடைக்கோவை - சமயக்கட்டுரைகள்உரைநடைக்கோவை - இலக்கியக் கட்டுரைகள்கதிர்மணி விளக்கம் - திருவாசக உரைதிருச்சதகம் நீத்தல் விண்ணப்பம்
பொறுப்பேற்றுப் பதிப்பித்தவை :
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிசைப் பாடல் வரிசைமகாவித்வான் வயிர நகரம் அ ராமனாதஞ்செட்டியார் தொகுத்தநாட்டுக்கோடை நகரத்தார் வரலாறு.
இப்படியான அறிவு சார்ந்த தனிப்பட்ட முயற்சிகள் அன்றி, மக்களுடன் கூட்டாக இணைந்து மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை என்ற இலக்கிய அமைப்பையும் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தினார். “ ஒழுக்கம் கல்வி முதலிய பல விஷயங்கள் குறித்து உபந்நியாசங்கள் புரிவித்தலும், தக்க பண்டிதர் ஒருவரைச் சபையில் உபாத்தியாயராக நியமனஞ்செய்து அங்கு சேரும் சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்தலும், சபையில் வந்து படிப்பார் பலருக்கும் உபயோகமாகும்படி தமிழ் ஸம்க்ருத மொழிகளிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் தொகுத்து வைத்தலும்,கல்வி ஒழுக்கம் முதலிய துண்டுப்பத்திரங்கள் அச்சிட்டு எல்லாருக்கும் இனாமாகக் கொடுத்தலும்,லெளகீக இலக்கண இலக்கிய சாஸ்திர சம்பந்தமான பத்திரிக்கைகளைத் தருவித்தலும் பிறவுமாம்” என்பதாக அவ்வமைப்பின் நோக்கங்களை வரையறுத்து செயல்பட்டார்.
திங்கள் தோறும் சொற்பொழிவுகளும் ண்டுதோறும் விழாக்களும் நடைபெற்றன. திரு. பழனியப்ப செட்டியார் என்ற புரவலர் இம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன் ரூபாய் ஐம்பதாயிரம் அளவுக்குப் பொருள் திரட்டி உதவினார். தான் நோயுற்றுக் கவலைக்கிடமான நிலையில் இருந்த போதிலும் ‘ சன்மார்க்க சபையைத் தொடர்ந்து நடத்தி வருக’ என தனது இளவல் திரு.அண்ணாமலைச் செட்டியாருக்கு அறிவுறுத்தினார். சபை ‘பண்டிதமணி சபை’ யிற்று. பண்டித மணியின் தமிழ் முழக்கம் நாடெங்கும் கேட்கத் தொடங்கி விட்டது.மணிச்சேவல் கூவி விட்டது. கல்விச்சாலை ஒன்றையும் ‘கணேசர் செந்தமிழ்க் கல்லூரி’ எனத்தொடங்கி வறண்ட மாவட்டத்தில் தமிழ்த் தண்ணீர் பாய்ச்சினார்.
தருமபுரம்,திருவையாறு,கரந்தை,மயிலம்,திருப்பணந்தாள்,அண்ணாமலை நகர்,பேரூர் - கோவை முதலிய இடங்களில் தமிழ் வித்வான் வகுப்பு நடத்தும் கல்லூரிகள் இருந்தன.திருச்சி,மதுரை,இராமநாதபுரம்,திருனெல்வேலி,புதுக்கோட்டை கிய மாவட்டங்களில் தமிழ் வித்வான் வகுப்பு நடத்துவதற்கென ஏற்பட்ட முதல் கல்லூரி இதுவேயாகும்.
சன்மார்க்க சபையின் வரலாற்றில் முக்கியமான கட்டம் 24.4.1932 இல் அதன் அறுபத்து மூன்றாவது ண்டு விழா நடைபெற்றது கும். தமிழகமெங்கும் தனது புகழை நிலை நாட்டிய பண்டித மணி தமிழ் வளர்ச்சி கருதி சில உறுதியான கருத்துக்களை தெரிவிக்கத் துணிந்தார். அவை தீர்மானங்களாக அந்த ண்டு விழாவில் நிறைவேற்றப் பட்டன. பண்டிதமணியின் கருத்து வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடியாக விளங்கும் அவற்றை இங்கே தருகிறோம்.
• “தமிழ் நாட்டரசராக விளங்கும் புதுக்கோட்டை அரசரைத் தமது ட்சியில் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு தனித் தமிழ்க் கல்லூரி ஏற்படுத்தி நடத்துமாறு சபையோர் வேண்டிக் கொள்கின்றனர்.
• சென்னை ராசதானிக்கல்லூரி,கும்பகோணம் அரசினர் கல்லூரி இரண்டிலும் பி.ஏ.வகுப்பில் ஐந்தாம் பகுதியில் (Group) தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கத் தகுந்த வசதிகளை ஏற்படுத்தும்படி அரசாங்கத்தாரைச் சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.
• ராமேஸ்வரம் தேவஸ்தானத்தார் நடத்தி வரும் கல்லூரியில் தனித்தமிழ் வகுப்பும் ஏற்படுத்தும்படிச் சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.
• சென்னைப் பல்கலைக் கழகத்தார் தமிழ் மொழி பயில்பவருக்கு பி.ஏ.னர்ஸ் பட்டம் வழங்க வெகுவிரைவில் ஏற்பாடு செய்யும்படி மேற்படி கழகத்தாரையும், அதற்குத் தகுந்த வகுப்புக்களை அரசாங்கக் கல்லுரிகளில் ஏற்படுத்த அரசாங்கத்தையும் இச்சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.
• சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார்களை,அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் வடமொழிச் சிரோமணி வகுப்புகளுக்கு ஒப்பத் தமிழிலும் இலக்கணம் இலக்கியம் சித்தாந்தம் வேதாந்தம் மருத்துவம் சோதிடம் முதலிய பிரிவுகளை ஏர்படுத்தி நடத்தும்படி இச்சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.
* சென்னை ,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரை நடுத்தரக் கல்வியில் (Secondary Education) ங்கிலம் தவிர்த்த ஏனைய பாடங்களைத் தாய்மொழியிலேயே கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கும்படி இச் சபையார் வேண்டிக் கொள்கின்றனர்.
• பள்ளியின் இறுதித் தேர்வுக்கு ( S.S.L.C. Examination ) தமிழ் கட்டாயப் பாடமாக இல்லாமலிருந்தால் மாணவர்களில் சிலர் முதற்றரத்திலேயே ( First Form ) தமிழை விடுத்து பிற மொழிகளைப் படிப்பதால் அவர்களது தமிழறிவு குறைந்து வருவது வருந்தத்தக்கதாய் இருக்கிறது என்பதையும், முன்போல் தமிழில் ஒரு பகுதியையாவது கட்டாய பாடமாக ஏற்படுத்த வேண்டுமென்பதையும் இச்சபை தெரிவித்துக் கொள்கிறது.
• தமிழ் மொழியை வளர்ப்பதற்கு முயன்று வரும் சங்கங்கள் யாவும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்கும்படியும் ண்டு தோறும் ஒவ்வொரு ஊரில் தமிழ் மகாநாடு கூடி சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை அனுப்பி தமிழ் வளர்ச்சிக்குறிய பல முடிவுகளை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகளில் முயலும்படியும் இச்சபையார் கேட்டுக் கொள்கின்றனர்.”
இந்த மூதறிஞர் விஜய ண்டு ஐப்பசித் திங்கள் எட்டாம் நாள் ( 24.10.1953 ) அன்று இறைவனின் திருவடி சேர்ந்தார்.
பிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கிய தமிழ் வழிக் கல்வி இயக்கம் சுதந்திர இந்தியா பொன் விழாக் கொண்டாடி முடிந்த பின்னரும் தனது இலக்கை எட்டப் போராடித்தான் தீர வேண்டும் என்ற நிலையை எண்ணுகையில் : “என்று தணியும் இந்த அடிமையின் மோகம் ?” என வெட்கித் தலை குனியத்தான் வேண்டியிருக்கிறது.
எனினும் ங்கிலேயர் இந்தியாவைப் பிடித்து அடிமைப் படுத்து முன் இந்தியக் கல்வி செழுமையாய்த்தான் இருந்திருக்கும் என்பதற்கு பண்டிதமணி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்பதனை அவரது மொழி பெயர்ப்புகளைப் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.
புதுவை ஞானம். j.p.pandit@gmail.comgnanatharu.blogspot.com
Friday, February 2, 2007
[+/-] |
இந்திய இசுலாமியரும் தமிழக இசுலாமியரும் |
இந்திய இசுலாமியரும் தமிழக இசுலாமியரும்
திரு. ஜகாரியா அவர்கள் எழுதிய எங்கே தவறு செய்தனர் இந்திய இசுலாமியர் ?
நூல் அறிமுகம் மட்டும் தான் படிக்கக் கிடைத்தது. முழு நூலும் படித்துப் பார்க்க ¬சையாகத்தான் இருக்கிறது .அது ஒரு புறம் இருக்க; எப்போதோ படித்த ஒரு பழைய கட்டுரை நினைவுக்கு வருகிறது. .இந்தியா சுதந்திரம்அடைவதற்கு ஏழு மாதம் முன்பாக ' சக்தி ' என்ற பத்திரிகையில் திரு. அப்துல் காதர் என்பவர் எழுதியதாகஞாபகம்.இது 'கவிதாச்சரன்' இதழில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் நடந்த அந்த கால கட்டத்த்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.இதன் சிறப்புப் பின்னனி என்ன எனத் தேடி அருமையானதொரு கட்டுரையை வழங்கி இருக்கிரார் அவர்.அந்தசிறப்பு மிகு கட்டுரைக்கும் 'திண்ணை' வாசகர்களுக்கும் இடையே குறுக்கே நந்தி போல் படுத்திருக்க நான்விரும்பவில்லை.நீங்களே படித்துப் பாருங்கள்.னாலும்,திருமதி.ரொமீலா தாப்பர் அவர்களது கருத்து ஒன்றினைத்தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள சை.அரையும் குறையுமாக நினைவில் இருப்பதை இப்போதும்அசலானவற்றை பின்னொரு சமயமும் பார்க்கலாம்.
அக்பர் காலத்துக்கு முன்னரே அசலாக இந்தியாவுக்குள் வந்தது சிலர்.பதவிக்காக மதம் மாறியவர் பலர்.ஷரியத்தையும் முழுமையாக ஏற்க முடியாமல் பழைய இந்துப் பழக்க வழக்கங்களையும் கைவிட முடியாமல்பலர் தவித்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.பிற்காலத்தில் தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்த தளபதிமாலிக்காபூர் இந்துவாக இருந்து பதவிக்காக மதம் மாறியவர் என்று வேறொரு வரலாற்றாசிரியர் எழுதியதும்படித்திருக்கிறேன்.இதனை நான் இங்கு குறிப்பிட ஒரு காரணம் உண்டு. அந்த கூலித் தளபதியை விரட்டியடித்தஅசல் இசுலாமியர்கள் பற்றிய கட்டுரை இது. .இனி அந்தக் கட்டுரையைப் பார்ப்போம்.
"the muslim population was only a fraction of the total and muslim elite could not have felt entirely secure.Those converted to islam in the early days were usually low-caste Hindus who chose to leavethe Hidu social fold for that of Islam ,beleieving that under Islam they would have better oppurtunities than ifthey remained low-caste Hindus .Such converts could provide little support for the ruling Muslim elite.Converts from higher Hindu social strata to Islam rarely made the change out of religious sympathy with Islambut out of opportunism, realizing that conversion was a necessary step before they could hope for economic and social advancement or political power. Ostensibly they were much of , but actually, andquite naturally ,they were regarded with suspicion by Turkish and Afghan nobles.(p.278 &9 )
Each year the sea brought a mere hand ful of traders ,who settled in the West coast ports .Islamtherefore had to rely increasingly on Hindu converts. The existing Indian population was slow in beingconverted.The fact that the muslims have always been a minority cmmunity in India would suggest ,as hasbeen pointed out elsewhere,that the vast mejority of Hindus were not so desperate a plight as to seekconversion. Perhaps at the lower levels of soceity the advantages to be gained by conversion were not spectacular. The Muslim community consisted mainly of converted Hindus ,and obviosly their pattern of living would not differ radically from that of the larger community in the midst of which they lived.
But the cultural fusion of the two ideologies was less predictable amonst the ruling classes andtheir seperateness was insisted upon by theologians of both religions and on occation, by politicallyambitious sections of the aristocracy .The call to Muslim loyalty or Hindu loyalty could always be used for the purposes other than religious, and this sentiment could be exploited when convenient.(p.289&90)
Muslim society as it evolved in India fell in to three broad divisins- the noblity both secular and religous,the artisans' and the cultivators.The nobility was made up of diverse trends , Turks, Afganisthans., prrsians, and Arabs,with the first two pre dominant ,sice they held power.To begin with , clan affiliations kept themdivided ,but once they wrer forced to accept India as their prominent home they became to coalseceinto a fairly homogeneous group. The fact of their being a minority in the country assited this process(p.298). ( A HISTORY OF INDIA_ ROMILA THAPER)
தமிழர் பண்பாடு ---------------------பாரத நாட்டின் பண்பாடு பயன் நிறைந்த பண்பாடு .பல கலாச்சாரங்கள் கலந்து மறைந்து உருவான, இனிமையும்புதுமையும் நிறைந்த பண்பாடு. .இப்புண்ணிய பூமியில் இன்று நின்று நிலவும் கலைகளையும் ,காவியங்களையும்மொழிகளையும், மதங்களையும் ராய்ந்து பார்ப்போமானால் ,அவை உருவாதற்கு உதவிய பல் வேறு ஜாதியதேசீய சக்திகளின் நிழலை நாம் அவற்றில் காணலாம். இந்த நன்னாட்டின் எதிர் கால உயர்வை உள்ளத்தில் கொண்ட யாவரும் இந்தியப் பண்பாட்டின் பல்வேறு முகங்களை பாது காக்கப் பாடுபட வேண்டும்.உண்மையில்உரம் தருவதும் உயிர் தருவதும் கிய சக்திகளை எல்லாம் ர்வத்துடன் இனிது வரவேற்று உபயோகமாய்இந்தியப் பண்பாண்ட்டோடு இணையச் செய்து அத¨னை வளர்க்க வேண்டும் .ஒரு பண்பாடு வளர அவ்வபோது தோண்றி¢ய சமூக, அரசியல் தார்மீக மாறுதல்களை ஏற்றே பண்பாடு பரிமளிக்கிறது.
தொண்மையும் பழமையும், கனிவும் செறிவும் மிகுந்த தமிழர் பண்பாட்டிலும் பல கலாசாரங்கள் கலந்துள்ளன. பண்டைத் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடு. சீரும் சிறப்பும் செழிப்பும் விழிப்பும் பெற்ற நாடு. காயும் கனியும், பூவும் பொழிலும் நிறைந்த பூமி., முத்தும், பொன்னும், மணியும், பவளமும், நம் நாட்டில் விளைந்தன. எனவே வர்த்தகமும்வாணிகமும் பெருகின. வேற்றுநாட்டு மக்கள் பலர் விரைந்து இந்நாடு வந்தனர். விருந்தோம்பலில் சிறந்தோங்கியதமிழர் அம்மக்களையெல்லாம் அவ்வப்போது வரவேற்று அவர்களுக்கு இடைவிடாமல் உணவு கொடுத்து நிழல் கொடுத்து எழில் கொடுத்து காப்பாற்றினர். தமிழ் நாட்டின் கீர்த்தி உலகெல்லாம் பரவியது.
தமிழ் நாட்டு வணிகர் நேர்மையும் நாணயமும் நிரம்பியவர்கள். வியாபாரத் துறையிலோ அல்லது வேறுஎத்துறையிலோ அவர்கள் பொய்யுரை புகலமாட்டார்கள். பொருட்களைக் கொள்ளை விலைக்கு விற்பதில்லை.ஊதியம் சிறிதே பெற்றுப் பெருகிய வாணிகம் நடத்தினார்கள். பழைய தமிழ் இலக்கியமாகிய 'பத்துப் பாட்டு' என்ற தொகுதியிலுள்ள'பட்டினப்பாலை' என்ற பாட்டில் அக்கால வணிகரின் நாணயத்திற்குத் தகுந்த சான்று கிடைக்கிறது.சோழர் பழம் பதியாகிய காவிரிப் பூம்பட்டினத்தின் வணிகரது உள்ளச்சிறப்பை அது வர்ணிப்பதைக் காணலாம்.
நடுவு நின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு(ம்) ஒப்ப நாடிக் கொள்வதூஉங் மிகை கொளாது கொடுப்பதூஉங் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை (வரிகள் 207 - 212)
நாணயமான வியாபாரமும் கண்ணியமான ஒழுக்கமும் அயலவரை அன்புடன் தரிக்கும் பேருள்ளமும் கொண்ட தமிழரின் நிழலில் பல அன்னியர்கள் பெருவிருப்புடன் வந்து தங்கினர். கடல் கடந்தும் வந்தனர். ரோமர்களும் கிரேக்கர்களும் மிகப் பழங்காலத்திருந்தே வாணிகத்தின் பொருட்டு தமிழ் நாட்டில் வந்து குடியேறினார்கள். ரோம அரசரது நாணயங்கள் பழந்துறைமுகப் பகுதிகளிலும் தலைநகர ஸ்தலங்களிலிலும் ஏராளமாய்த் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ரோமர், கிரேக்கர், அராபியர், சீனர்களின் பண்டக சாலைகள் தமிழ்நாட்டில் ங்காங்கே ஏற்பட்டன.காவிரிபூம்பட்டினத்தின் கடைவீதிகளில் இந்தியாவின் நாலாவிதப் பகுதிகளிலலுள்ள பண்டங்ளும் வந்து குவிந்தன. குதிரைகளும் அயல்நாட்டிலிருந்து கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும் காலில் வந்த கருங்கறி மூடையும் வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல்துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத் (து) க்கமும் (பட்டினப்பாலை 185 - 191)
அங்கு வந்து நிறைந்தன.
வியாபாரம் விரும்பி இங்கு வந்த பிற நாட்டு மக்கள் தமிழரின் உயர் பண்பாட்டாலும் உள்ள நிறைவாலும்கர்ஷிக்கப்பட்டு தமிழ் நாட்டைத் தங்கள் தாயகமாகவே கருதி இங்கேயே தங்கி விட்டனர். இவர்களில்பலர் கை தேர்ந்த சிற்பிகளாகவும், கம்மாளராயும், அரசரது மெய்க்காவலராயும் தொழில்களில் அமர்ந்தனர்.இவ்வாறு வந்து தங்கியவர்களையே 'யவணர் ' என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவர்கள் நாளடவில்தமிழரோடு தமிழராய்க் கலந்து இணைந்து விட்டனர்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ரம்பத்தில் அராபியாவில் 'இஸ்லாம்' என்ற புதிய மதம் தோன்றியது. உறங்கிக்கிடந்த அராபியர்கள் அதன் மூலம் புதியதோர் ஜீவசக்தியைப் பெற்று உலகம் வியக்கும் வண்ணம் ஒரு பலம்பொருந்திய பேரரசை நிர்மாணித்தார்கள். வாணிகத்துறையில் அவர்கள் அளவற்ற ர்வம் காட்டினார்கள். கீழ்நாடுகளுடனும் மேல் நாடுகளுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு பெரு வாணிகம் செய்தனர். தமிழ் நாட்டின் வளமான பண்டங்களை வாங்கி பிற நாடுகளில் விற்றனர்.தமிழரின் இனிய பண்பாட்டைப் பற்றி வெகுவாய்அறிந்து வியந்தார்கள்.
கி.பி.9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எகிப்தில் வாழ்ந்த அராபிய வணிகக் குடும்பங்களுக்கு பேராபத்துவந்தது. நாடு, நெறி திறம்பிய மன்னன் ட்சியால் சீர்குலைந்து, நன் மக்கள் நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.அவர்களில் சிலர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடையத் துணிவு கொண்டு கலங்களில் ஏறிச் சொல்லொணாத துன்பம் அடைந்து ஒருவாறு தென் குமரியைக் கடந்து பாண்டி நாட்டின் துறைமுகமாகியகாயலில் வந்து இறங்கினார்கள். பாண்டிய மன்னனைக் கண்டு தங்கள் பரிபவத்தைக் கூறித் தமிழ் நாட்டில்குடியேற அனுமதி கேட்டார்கள்.அரசர் அந்த அகதிகட்கு 'அஞ்சேல்' என அபயம் கொடுத்தார். சீர் குலைவுற்றஅவர்களது சீர் பெற வேண்டிய சாதனங்களும் தந்தார். அவர்களது உரிமைகளையும் கடமைகளையும் வகுத்துத்தாமிரப் பட்டயமும் கொடுத்தார்.அப்பட்டையம் தமிழரின் மாண்பை உலகுக்குப் பறை சாற்றும் ஒரு அழியாதசின்னம். தமிழரின் பண்பாட்டின் பிரதி பிம்பம். அதிலுள்ள சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :-
"................அறபி நாட்டு மிஸறு (எகிப்து) தேசாதிபதியின் கொடுங்கோலுக்கு அஞ்சி, மரக்கல யாத்திரையாய்கர்த்தர்களின் தேசச் செம்பி நாட்டில் பாசறை வகுத்து, கர்த்தர்களின் சமூகம் கொடுத்து அந்நாட்டில் குடியேறிஇருக்கத் தாமிரப் பட்டயம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டவர்களின் வம்சமும், எண்ணிக்கையும் :
சிம் வம்சத்தார் (23)பக்கிரி வம்சத்தார் (39)பாறூக்கு வம்சத்தார்(43)உமையா வம்சத்தார்(14)ராணுவ யுத்தர் (16)க்ஷவரகன் (3)நாச்சியார் பெண்டு (9) " " (16) " " (24)
" " (5)பெண் (6) " (1)அடிமை (4) " (7) " (17) " (12) " (2)இவர்கள் ஒரு மனப்பட்டு,முஹமது கல்ஜிக்கு தாமிரப் பட்டயம் கொடுக்கக் கேட்டுக் கொண்ட படியால்,இந்தக் குடியானவர்கள் மிஸறு தேசத்து காயிரூன் (கெய்ரோ) ஊரில் வசித்தவர்களான படியால்,தாமிரப்பட்டயங்கொடுக்கு மூருக்கு 'காயிரூன்' பட்டனமென்று நாமமும், மரக்கல யாத்திரையாக வந்ததற்காக இவர்களுக்குமரக்கல ராயர் என்ற நாமமும் நாம் சூட்டித் தாமிர பட்டயங்கொடுக்க உத்தரமருளி அரண்மனையார் கற்பித்தது.
" தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு மேற்கு,சிவந்தன் குளம், முள்ளக்காடு, கோபுரங்காடு, மஞ்சனக்காயல், கொற்கை,குலை நெல் கரிசை, முக்காணி கொலுவுத்துறை, ற்றூர், அதைச் சேர்ந்த மங்கலம், சொர்க்கப்பிள்ளைக்கரை,பின்னக்காயல்,வரங்காடு,தண்ணீர்ப்பந்தல்,கீரனுர், நல்லூர்,அம்மன் புரம், பள்ளிப்பத்து,மணற்காடு,ரஜமன்னியபுரம்,வீரபாண்டியன், மங்கள பாடி இவைகளடங்கிய குடிகளுக்கு முகமது கல்ஜி மரக்கலராயன்கற்பனையும்,அவனுக்கு இறைவரி செலுத்தக் கடைமையும் பளமும் பள்ளிப்பத்து அம்மன் புரங்கண்டு முதல்லாபத்தில் ஜெப லயங்கள் கட்டப் பாதியும்,தண்ணீர்ப் பந்தல் கண்டு முதலில் மரக்கலராயனுக்குப்பாதியும்பளமும், கன்னி முதல் மன்னார் மணல் மேடு இராமேஸ்வரம் வரை, இந்தக் குடியானவர்கள் சலாபமுத்துக் குளிக்க அம்பளவும்பளமும், தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு தோனி ஒன்னுக்கு 20 முத்துச் சிப்பியும்மரக்கலராயனுக்கு தோணி ஒன்னுக்கு 30 முத்துச் சிப்பியும் ,சித்த்ன லாசருக்கு 20 முத்துச் சிப்பியும் அம்பளவும்பளநிந்தமும்."
"அந்தந்த வருடமும் மகர மாசத்தையில், அரண்மனைக்கு மரக்கலராயன் 90 பொன்னும் உப்பு லாபத்தில் 100பொன்னுக்கு 25 பொன்னும் செலுதிவிடக் கடமையும், ஒரு பொன் எடையும் அதற்கு மேற்பட்ட ணிமுத்தும்,வலம்புரிச் சங்கும் அகப்பட்டால் அவைகளை மரக்கல ராயன் அரண்மனைக்கு சகல மேளவாத்தியத்துடன் செலுத்திட அரண்மனைக் கற்பனையும்."
"அரன்மனையார் உத்தரவிற்கு நாஞ்சி நாட்டு அதிபன் கொடுத்த வண்ணான் (5) ரெட்டியாபட்டி பாளைய கிருக்ஷ்ணநாயக்கன் கொடுத்த புதிய முத்தூர் மேளவாத்தியக்காரன்(5)க்கும் குடியானவர்கள் செலவு கொடுத்துக் கொள்ளவும்.பக்கிரி வம்சத்தலைவன் முகம்மது கல்ஜி மரக்கலராயன் தேசாதிபதி : பாறூக்கு வமிசத் தலைவன் உமறுமங்கூறு நியாதிபன் : சீம் வம்சத்தலைவன் கமாலுதீன் கடலதிபதி :உமையா வமிசத் தலைவன் சுபைறுஅடையில் முடையல்,ஊர் மணியம் ராணுவ யுத்தர்கள் , ஊர்க்காவல்,நாட்டுக்காவல்,கன்னி முதல் சேல மகரம்வரையுள்ள அரண் ம¨ண் குதிரைப் பாடிகளில் உள்ள இந்தக் குடியானவர்கள் குதிரை விற்பனை செய்துகொள்வதை ,அரண்மனைக் காவலர் பாளையக் காவலர் தடை செய்யக்கூடாது. சந்திராதிக்கம்,சந்திர சூரியப்பிரவேசமுள்ளவரைக்கும், அம்பள வும்பள சுதந்திரராக."
"சகாப்தம் எளக்ஷ்ய அ (798) ண்டு கீலக வருஷம்,மீன மாசம் சுக்கிரவாரம் உத்திர வேளையில்.............இந்தத் தாமிரப்பட்டயம் வெட்டி வரைந்து எழுதினேன் வீரவ நல்லூர் ககன மூர்த்தியாசாரி."
இந்த அபூர்வமான சாசனத்தைப் படிக்கப் படிக்க நாம் வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைகிறோம். பிறந்தநாட்டை விட்டு ஓடித்தப்பி அகதிகளாய் வந்தடைந்த அன்னியர்க்குத் தமிழ் நாட்டில் இத்தனை வரவேற்பா ?அதிலும் எவ்வளவு உரிமையும் சலுகையும்! கடற்கரைப் பகுதிகளில் குடியேற உரிமையும், முத்துக் குளிக்கவும்உப்பு விளைவிக்கவும், குதிரை வியாபாரம் செய்யவும் சலுகைகளும் எவ்வளவு தாராளமாய் வழங்கப் படுகின்றன.
பெரிய அரசுக்குள் அடங்கிய சிற்றரசு எனவே அவர்களைக் கூற வேண்டும்.அவர்களது நிர்வாகம் தான் எவ்வளவுதிறமையுடன் வகுத்துத் தரப்பட்டுள்ளது. ஒருவர் தேசாதிபதி ,மற்றொருவர் நியாயாதிபதி, பின்னொருவர்கடலாதிபதி மணியம் ஒருவர். இன்னும் அவர்களது ஊழியத்துக்கு வேண்டிய வண்ணார், மேளக்காரர், அம்பட்டர்முதலியோரையும் பாண்டி மன்னன் திட்டம் செய்து உதவுகிறான்.
மரக்கலராயர் என்ற பெயர் தான் எவ்வளவு அன்புடனும் அழகுடனும் சூட்டப்படுகிறது. அத்தமிழ் மன்னனின் வண்மைக்கும், ஒண்மைக்கும் சான்றாக இன்று தமிழ் நாட்டில் அம்மரக்கலராயரின் வகுப்பினர் மரக்காயர் என்றபெயருடன் கடற்கரைப் பகுதிகளிலெல்லாம் பல்கிப் பெருகிச் சிறந்த வணிக மன்னராய் வாழ்கின்றனர்.தமிழ்வளர்க்கின்றனர் .தமிழ் வளர்த்த தந்தையாகிய சீதக்காதி மரைக்காயரும் இவ்வகுப்பில் தோன்றியவரே.
மரக்காயர் பரம்பரையில் வந்த ஒருவரது பெயர் சரித்திரத்தில் தனிச் சிறப்பும் பெற்றது. ஸையத் ஜமாலுத்தீன் என்றஅரபி நாட்டு முஸ்லிம் தமிழ் நாட்டில் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தவர். அரேபியாவில் இருந்துநல்ல உயர் சாதிக் குதிரைகளைத் தென்னாட்டில் இறக்குமதி செய்யும் ஏகபோக உரிமையைப் பாண்டிய அரசரிடம் பெற்றார். காயல் பட்டினமே அவரது தலைமை காரியாலயஸ்தலம் .அரசர்க்கு அடுத்த பெருஞ்செல்வராய் அவர் விளங்கினார். எத்தனையோ மரக்கலங்கள் அவரது ஏவலில் இருந்தன. அவரது கப்பல்கள் செங்கடலில் இருந்துசீனம் வரை சென்று பொன்னொடும் பொருளோடும் திரும்பும்.உலகியலறிவும் நூலறிவும் மிகுந்த அவர் பிறறைவயமாக்கத் தக்க பேச்சுத் திறமையும் உடையவர்.அரசர் சுந்தர பாந்தியத் தெவரின் பேரன்பையும் பெரு நட்பையும் பெற்றவர்.கி.பி.1286-ல் பாண்டிய மன்னர் சீன அரசர் குப்ளைகானிடம் ஒரு தமிழர் தூது கோஷ்டியை அனுப்பிய பொழுது அதன் தலவராக ஸையத் ஜமாலுதீனே தெரிந்தெடுக்கப்பட்டார்.சீனச் சரித்திரம் இதற்குச் சான்று பகர்கிறது.இலங்கையில் பராகிரமபாகு ண்ட நாளில் (1288-1293) பாண்டியர் இலங்கை மீது படை எடுத்தனர்.அப்படைகளுக்கு சேனாதிபதியாக ஜமாலுத்தீனே நியமிக்கப்பட்டனர்.பாண்டி மன்னர் சபையில் இவருக்கு எவ்வளவு மதிப்பும் எத்துணை நம்பிக்கையும் உள்லம் கலந்த நல்லெண்ணமும் இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இந்துமுஸ்லிம் என்ற பேதம் எள்ளளவும் இன்றி தமிழ் நாட்டில் சவுஜன்யமும் சந்துஷ்டியும் அன்று முதல் இன்றும்நிலவுகிறது .
தமிழர் தமக்குச் செய்த தலையாய நன்றியை தமிழ் நாட்டு முஸ்லிம்கள் என்றும் மறந்தது இல்லை.வடக்கே இருந்துமுஸ்லிம் அரசர்களும் தளபதிகளும் போர்கொண்டு தென்னாடு வந்த போது தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தமிழரோடு தோள்தட்டி நின்று அவர்களை எதிர்த்து வீரப்போர் செய்தனர். மாலிகாபூர் என்ற சேனாதிபதியை எதிர்த்த வீரபாண்டியரின் சேனையில் 5000 முஸ்லிம் குதிரை வீரர்கள் இருந்தனர், என்று அக்காலச் சரித்திரக் காரரான குஸ்ருகுரிப்பிடுகிறார்.இந்து மன்னரின் கீழ் முஸ்லிம் படைகளை எதிர்த்துப் போராடிய அத்தமிழ் முஸ்லிம்களின் உள்ளப்பாங்கினை உணர்ந்து கொள்ள அச்சரித்திரக்காரருக்கு போதிய திருஷ்டி இல்லை.கையால் அவர்களைஏளனமாகவே அவர் குறிப்பிடுகிறார்." இவர்கள் பாதி இந்துக்களே.மத வைராக்கியமோ ஒழுக்கமோ இல்லாதவர்கள்.மரணம் தான் இவர்களுக்கு சரியான தண்டனை.எனினும் கலீமா சொல்ல அறிந்திருந்த படியால் பிழைத்துப்போனார்கள்." என்று அவர் எழுதுகிறார்.(See foot note on Malik kafur p.274 of A History of India by RomilaThapar )##
வடநாட்டு முஸ்லிம் அரசர்களின் தென்னாட்டுப் படையெடுப்பால் இங்குள்ள இந்துக்களைப் போலவே முஸ்லிம்களும் பெருந்துன்பமும் துயரமும் அடைந்தனர்.டெல்லி மன்னன் குத்புதீன் முபாரக் ஷா காலத்தில்(கி.பி.1317) அவனது தளபதி குஸ்ரூகான் தமிழகத்தின் மீது தண்டெடுத்து வந்தான்.மதுரையைத் தாக்கிப் பிடித்தான்.பாண்டியர் பிரதானிகளில் ஒருவராய் ஸிராஜுதீன் தாகீ என்பவர் மதுரையில் இருந்தார்.முஸ்லிம் என்பதற்காகஅவரைகுஸ்ரூகான் விட்டு வைக்கவில்லை. அவர் மாளிகையைச் சூரையிட்டது மல்லாமல்அவரது குடும்பத்தினரையும்கைது செய்தான்.அவரது அழகிய மகளையும் மணமுடித்துத்தர வேண்டுமென்று வம்பு பேசினான்.மானமிழந்த பின்உயிர் வாழாமை முன்னினிதே என்ற தமிழனது தன் மானக் கொள்கையைக் கொண்டே ஸிராஜுதீன் விஷமருந்திஉயிர் துறந்தார்.
சமீப காலத்தில் இந்திய நாட்டின் பிற பகுதிகளில் வகுப்பு மாச்சர்யம் மிகுந்து கொலைகளும்கொள்ளைகளும் நடந்த பொழுது தமிழ் நாட்டில்அமைதியும் சந்துஷ்டியும் நிலவி வந்ததைக் கண்டபிறர் ச்சரியமடைந்தனர். தமிழர் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட வினோதம் அவர்களுக்குப்புரியவில்லை. தமிழரின் தனிப் பண்பாடு அது.
##(Another expedition was sent under one of his officers ,Malik Kafur, a handsomeHindu convert from gujarat, and this was extremely successful. He had even attacked the city of Madurai ,the seat of the Panddyas ,and this was more than any other Northern rulers could claim. (p 274. )A HISTORY OF INDIA -ROMILA THAPAR)
தொகுப்பு: புதுவை ஞானம்.
இந்திய இசுலாமியரும் தமிழக இசுலாமியரும்
திரு. ஜகாரியா அவர்கள் எழுதிய எங்கே தவறு செய்தனர் இந்திய இசுலாமியர் ?
நூல் அறிமுகம் மட்டும் தான் படிக்கக் கிடைத்தது. முழு நூலும் படித்துப் பார்க்க சையாகத்தான் இருக்கிறது .அது ஒரு புறம் இருக்க; எப்போதோ படித்த ஒரு பழைய கட்டுரை நினைவுக்கு வருகிறது. .இந்தியா சுதந்திரம்அடைவதற்கு ஏழு மாதம் முன்பாக ' சக்தி ' என்ற பத்திரிகையில் திரு. அப்துல் காதர் என்பவர் எழுதியதாகஞாபகம்.இது 'கவிதாச்சரன்' இதழில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் நடந்த அந்த கால கட்டத்த்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.இதன் சிறப்புப் பின்னனி என்ன எனத் தேடி அருமையானதொரு கட்டுரையை வழங்கி இருக்கிரார் அவர்.அந்தசிறப்பு மிகு கட்டுரைக்கும் 'திண்ணை' வாசகர்களுக்கும் இடையே குறுக்கே நந்தி போல் படுத்திருக்க நான்விரும்பவில்லை.நீங்களே படித்துப் பாருங்கள்.னாலும்,திருமதி.ரொமீலா தாப்பர் அவர்களது கருத்து ஒன்றினைத்தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள சை.அரையும் குறையுமாக நினைவில் இருப்பதை இப்போதும்அசலானவற்றை பின்னொரு சமயமும் பார்க்கலாம்.
அக்பர் காலத்துக்கு முன்னரே அசலாக இந்தியாவுக்குள் வந்தது சிலர்.பதவிக்காக மதம் மாறியவர் பலர்.ஷரியத்தையும் முழுமையாக ஏற்க முடியாமல் பழைய இந்துப் பழக்க வழக்கங்களையும் கைவிட முடியாமல்பலர் தவித்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.பிற்காலத்தில் தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்த தளபதிமாலிக்காபூர் இந்துவாக இருந்து பதவிக்காக மதம் மாறியவர் என்று வேறொரு வரலாற்றாசிரியர் எழுதியதும்படித்திருக்கிறேன்.இதனை நான் இங்கு குறிப்பிட ஒரு காரணம் உண்டு. அந்த கூலித் தளபதியை விரட்டியடித்தஅசல் இசுலாமியர்கள் பற்றிய கட்டுரை இது. .இனி அந்தக் கட்டுரையைப் பார்ப்போம்.
"the muslim population was only a fraction of the total and muslim elite could not have felt entirely secure.Those converted to islam in the early days were usually low-caste Hindus who chose to leavethe Hidu social fold for that of Islam ,beleieving that under Islam they would have better oppurtunities than ifthey remained low-caste Hindus .Such converts could provide little support for the ruling Muslim elite.Converts from higher Hindu social strata to Islam rarely made the change out of religious sympathy with Islambut out of opportunism, realizing that conversion was a necessary step before they could hope for economic and social advancement or political power. Ostensibly they were much of , but actually, andquite naturally ,they were regarded with suspicion by Turkish and Afghan nobles.(p.278 &9 )
Each year the sea brought a mere hand ful of traders ,who settled in the West coast ports .Islamtherefore had to rely increasingly on Hindu converts. The existing Indian population was slow in beingconverted.The fact that the muslims have always been a minority cmmunity in India would suggest ,as hasbeen pointed out elsewhere,that the vast mejority of Hindus were not so desperate a plight as to seekconversion. Perhaps at the lower levels of soceity the advantages to be gained by conversion were not spectacular. The Muslim community consisted mainly of converted Hindus ,and obviosly their pattern of living would not differ radically from that of the larger community in the midst of which they lived.
But the cultural fusion of the two ideologies was less predictable amonst the ruling classes andtheir seperateness was insisted upon by theologians of both religions and on occation, by politicallyambitious sections of the aristocracy .The call to Muslim loyalty or Hindu loyalty could always be used for the purposes other than religious, and this sentiment could be exploited when convenient.(p.289&90)
Muslim society as it evolved in India fell in to three broad divisins- the noblity both secular and religous,the artisans' and the cultivators.The nobility was made up of diverse trends , Turks, Afganisthans., prrsians, and Arabs,with the first two pre dominant ,sice they held power.To begin with , clan affiliations kept themdivided ,but once they wrer forced to accept India as their prominent home they became to coalseceinto a fairly homogeneous group. The fact of their being a minority in the country assited this process(p.298). ( A HISTORY OF INDIA_ ROMILA THAPER)
தமிழர் பண்பாடு ---------------------பாரத நாட்டின் பண்பாடு பயன் நிறைந்த பண்பாடு .பல கலாச்சாரங்கள் கலந்து மறைந்து உருவான, இனிமையும்புதுமையும் நிறைந்த பண்பாடு. .இப்புண்ணிய பூமியில் இன்று நின்று நிலவும் கலைகளையும் ,காவியங்களையும்மொழிகளையும், மதங்களையும் ராய்ந்து பார்ப்போமானால் ,அவை உருவாதற்கு உதவிய பல் வேறு ஜாதியதேசீய சக்திகளின் நிழலை நாம் அவற்றில் காணலாம். இந்த நன்னாட்டின் எதிர் கால உயர்வை உள்ளத்தில் கொண்ட யாவரும் இந்தியப் பண்பாட்டின் பல்வேறு முகங்களை பாது காக்கப் பாடுபட வேண்டும்.உண்மையில்உரம் தருவதும் உயிர் தருவதும் கிய சக்திகளை எல்லாம் ர்வத்துடன் இனிது வரவேற்று உபயோகமாய்இந்தியப் பண்பாண்ட்டோடு இணையச் செய்து அத¨னை வளர்க்க வேண்டும் .ஒரு பண்பாடு வளர அவ்வபோது தோண்றி¢ய சமூக, அரசியல் தார்மீக மாறுதல்களை ஏற்றே பண்பாடு பரிமளிக்கிறது.
தொண்மையும் பழமையும், கனிவும் செறிவும் மிகுந்த தமிழர் பண்பாட்டிலும் பல கலாசாரங்கள் கலந்துள்ளன. பண்டைத் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடு. சீரும் சிறப்பும் செழிப்பும் விழிப்பும் பெற்ற நாடு. காயும் கனியும், பூவும் பொழிலும் நிறைந்த பூமி., முத்தும், பொன்னும், மணியும், பவளமும், நம் நாட்டில் விளைந்தன. எனவே வர்த்தகமும்வாணிகமும் பெருகின. வேற்றுநாட்டு மக்கள் பலர் விரைந்து இந்நாடு வந்தனர். விருந்தோம்பலில் சிறந்தோங்கியதமிழர் அம்மக்களையெல்லாம் அவ்வப்போது வரவேற்று அவர்களுக்கு இடைவிடாமல் உணவு கொடுத்து நிழல் கொடுத்து எழில் கொடுத்து காப்பாற்றினர். தமிழ் நாட்டின் கீர்த்தி உலகெல்லாம் பரவியது.
தமிழ் நாட்டு வணிகர் நேர்மையும் நாணயமும் நிரம்பியவர்கள். வியாபாரத் துறையிலோ அல்லது வேறுஎத்துறையிலோ அவர்கள் பொய்யுரை புகலமாட்டார்கள். பொருட்களைக் கொள்ளை விலைக்கு விற்பதில்லை.ஊதியம் சிறிதே பெற்றுப் பெருகிய வாணிகம் நடத்தினார்கள். பழைய தமிழ் இலக்கியமாகிய 'பத்துப் பாட்டு' என்ற தொகுதியிலுள்ள'பட்டினப்பாலை' என்ற பாட்டில் அக்கால வணிகரின் நாணயத்திற்குத் தகுந்த சான்று கிடைக்கிறது.சோழர் பழம் பதியாகிய காவிரிப் பூம்பட்டினத்தின் வணிகரது உள்ளச்சிறப்பை அது வர்ணிப்பதைக் காணலாம்.
நடுவு நின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு(ம்) ஒப்ப நாடிக் கொள்வதூஉங் மிகை கொளாது கொடுப்பதூஉங் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை (வரிகள் 207 - 212)
நாணயமான வியாபாரமும் கண்ணியமான ஒழுக்கமும் அயலவரை அன்புடன் தரிக்கும் பேருள்ளமும் கொண்ட தமிழரின் நிழலில் பல அன்னியர்கள் பெருவிருப்புடன் வந்து தங்கினர். கடல் கடந்தும் வந்தனர். ரோமர்களும் கிரேக்கர்களும் மிகப் பழங்காலத்திருந்தே வாணிகத்தின் பொருட்டு தமிழ் நாட்டில் வந்து குடியேறினார்கள். ரோம அரசரது நாணயங்கள் பழந்துறைமுகப் பகுதிகளிலும் தலைநகர ஸ்தலங்களிலிலும் ஏராளமாய்த் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ரோமர், கிரேக்கர், அராபியர், சீனர்களின் பண்டக சாலைகள் தமிழ்நாட்டில் ங்காங்கே ஏற்பட்டன.காவிரிபூம்பட்டினத்தின் கடைவீதிகளில் இந்தியாவின் நாலாவிதப் பகுதிகளிலலுள்ள பண்டங்ளும் வந்து குவிந்தன. குதிரைகளும் அயல்நாட்டிலிருந்து கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும் காலில் வந்த கருங்கறி மூடையும் வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல்துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத் (து) க்கமும் (பட்டினப்பாலை 185 - 191)
அங்கு வந்து நிறைந்தன.
வியாபாரம் விரும்பி இங்கு வந்த பிற நாட்டு மக்கள் தமிழரின் உயர் பண்பாட்டாலும் உள்ள நிறைவாலும்கர்ஷிக்கப்பட்டு தமிழ் நாட்டைத் தங்கள் தாயகமாகவே கருதி இங்கேயே தங்கி விட்டனர். இவர்களில்பலர் கை தேர்ந்த சிற்பிகளாகவும், கம்மாளராயும், அரசரது மெய்க்காவலராயும் தொழில்களில் அமர்ந்தனர்.இவ்வாறு வந்து தங்கியவர்களையே 'யவணர் ' என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவர்கள் நாளடவில்தமிழரோடு தமிழராய்க் கலந்து இணைந்து விட்டனர்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ரம்பத்தில் அராபியாவில் 'இஸ்லாம்' என்ற புதிய மதம் தோன்றியது. உறங்கிக்கிடந்த அராபியர்கள் அதன் மூலம் புதியதோர் ஜீவசக்தியைப் பெற்று உலகம் வியக்கும் வண்ணம் ஒரு பலம்பொருந்திய பேரரசை நிர்மாணித்தார்கள். வாணிகத்துறையில் அவர்கள் அளவற்ற ர்வம் காட்டினார்கள். கீழ்நாடுகளுடனும் மேல் நாடுகளுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு பெரு வாணிகம் செய்தனர். தமிழ் நாட்டின் வளமான பண்டங்களை வாங்கி பிற நாடுகளில் விற்றனர்.தமிழரின் இனிய பண்பாட்டைப் பற்றி வெகுவாய்அறிந்து வியந்தார்கள்.
கி.பி.9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எகிப்தில் வாழ்ந்த அராபிய வணிகக் குடும்பங்களுக்கு பேராபத்துவந்தது. நாடு, நெறி திறம்பிய மன்னன் ட்சியால் சீர்குலைந்து, நன் மக்கள் நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.அவர்களில் சிலர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடையத் துணிவு கொண்டு கலங்களில் ஏறிச் சொல்லொணாத துன்பம் அடைந்து ஒருவாறு தென் குமரியைக் கடந்து பாண்டி நாட்டின் துறைமுகமாகியகாயலில் வந்து இறங்கினார்கள். பாண்டிய மன்னனைக் கண்டு தங்கள் பரிபவத்தைக் கூறித் தமிழ் நாட்டில்குடியேற அனுமதி கேட்டார்கள்.அரசர் அந்த அகதிகட்கு 'அஞ்சேல்' என அபயம் கொடுத்தார். சீர் குலைவுற்றஅவர்களது சீர் பெற வேண்டிய சாதனங்களும் தந்தார். அவர்களது உரிமைகளையும் கடமைகளையும் வகுத்துத்தாமிரப் பட்டயமும் கொடுத்தார்.அப்பட்டையம் தமிழரின் மாண்பை உலகுக்குப் பறை சாற்றும் ஒரு அழியாதசின்னம். தமிழரின் பண்பாட்டின் பிரதி பிம்பம். அதிலுள்ள சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :-
"................அறபி நாட்டு மிஸறு (எகிப்து) தேசாதிபதியின் கொடுங்கோலுக்கு அஞ்சி, மரக்கல யாத்திரையாய்கர்த்தர்களின் தேசச் செம்பி நாட்டில் பாசறை வகுத்து, கர்த்தர்களின் சமூகம் கொடுத்து அந்நாட்டில் குடியேறிஇருக்கத் தாமிரப் பட்டயம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டவர்களின் வம்சமும், எண்ணிக்கையும் :
சிம் வம்சத்தார் (23)பக்கிரி வம்சத்தார் (39)பாறூக்கு வம்சத்தார்(43)உமையா வம்சத்தார்(14)ராணுவ யுத்தர் (16)க்ஷவரகன் (3)நாச்சியார் பெண்டு (9) " " (16) " " (24)
" " (5)பெண் (6) " (1)அடிமை (4) " (7) " (17) " (12) " (2)இவர்கள் ஒரு மனப்பட்டு,முஹமது கல்ஜிக்கு தாமிரப் பட்டயம் கொடுக்கக் கேட்டுக் கொண்ட படியால்,இந்தக் குடியானவர்கள் மிஸறு தேசத்து காயிரூன் (கெய்ரோ) ஊரில் வசித்தவர்களான படியால்,தாமிரப்பட்டயங்கொடுக்கு மூருக்கு 'காயிரூன்' பட்டனமென்று நாமமும், மரக்கல யாத்திரையாக வந்ததற்காக இவர்களுக்குமரக்கல ராயர் என்ற நாமமும் நாம் சூட்டித் தாமிர பட்டயங்கொடுக்க உத்தரமருளி அரண்மனையார் கற்பித்தது.
" தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு மேற்கு,சிவந்தன் குளம், முள்ளக்காடு, கோபுரங்காடு, மஞ்சனக்காயல், கொற்கை,குலை நெல் கரிசை, முக்காணி கொலுவுத்துறை, ற்றூர், அதைச் சேர்ந்த மங்கலம், சொர்க்கப்பிள்ளைக்கரை,பின்னக்காயல்,வரங்காடு,தண்ணீர்ப்பந்தல்,கீரனுர், நல்லூர்,அம்மன் புரம், பள்ளிப்பத்து,மணற்காடு,ரஜமன்னியபுரம்,வீரபாண்டியன், மங்கள பாடி இவைகளடங்கிய குடிகளுக்கு முகமது கல்ஜி மரக்கலராயன்கற்பனையும்,அவனுக்கு இறைவரி செலுத்தக் கடைமையும் பளமும் பள்ளிப்பத்து அம்மன் புரங்கண்டு முதல்லாபத்தில் ஜெப லயங்கள் கட்டப் பாதியும்,தண்ணீர்ப் பந்தல் கண்டு முதலில் மரக்கலராயனுக்குப்பாதியும்பளமும், கன்னி முதல் மன்னார் மணல் மேடு இராமேஸ்வரம் வரை, இந்தக் குடியானவர்கள் சலாபமுத்துக் குளிக்க அம்பளவும்பளமும், தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு தோனி ஒன்னுக்கு 20 முத்துச் சிப்பியும்மரக்கலராயனுக்கு தோணி ஒன்னுக்கு 30 முத்துச் சிப்பியும் ,சித்த்ன லாசருக்கு 20 முத்துச் சிப்பியும் அம்பளவும்பளநிந்தமும்."
"அந்தந்த வருடமும் மகர மாசத்தையில், அரண்மனைக்கு மரக்கலராயன் 90 பொன்னும் உப்பு லாபத்தில் 100பொன்னுக்கு 25 பொன்னும் செலுதிவிடக் கடமையும், ஒரு பொன் எடையும் அதற்கு மேற்பட்ட ணிமுத்தும்,வலம்புரிச் சங்கும் அகப்பட்டால் அவைகளை மரக்கல ராயன் அரண்மனைக்கு சகல மேளவாத்தியத்துடன் செலுத்திட அரண்மனைக் கற்பனையும்."
"அரன்மனையார் உத்தரவிற்கு நாஞ்சி நாட்டு அதிபன் கொடுத்த வண்ணான் (5) ரெட்டியாபட்டி பாளைய கிருக்ஷ்ணநாயக்கன் கொடுத்த புதிய முத்தூர் மேளவாத்தியக்காரன்(5)க்கும் குடியானவர்கள் செலவு கொடுத்துக் கொள்ளவும்.பக்கிரி வம்சத்தலைவன் முகம்மது கல்ஜி மரக்கலராயன் தேசாதிபதி : பாறூக்கு வமிசத் தலைவன் உமறுமங்கூறு நியாதிபன் : சீம் வம்சத்தலைவன் கமாலுதீன் கடலதிபதி :உமையா வமிசத் தலைவன் சுபைறுஅடையில் முடையல்,ஊர் மணியம் ராணுவ யுத்தர்கள் , ஊர்க்காவல்,நாட்டுக்காவல்,கன்னி முதல் சேல மகரம்வரையுள்ள அரண் ம¨ண் குதிரைப் பாடிகளில் உள்ள இந்தக் குடியானவர்கள் குதிரை விற்பனை செய்துகொள்வதை ,அரண்மனைக் காவலர் பாளையக் காவலர் தடை செய்யக்கூடாது. சந்திராதிக்கம்,சந்திர சூரியப்பிரவேசமுள்ளவரைக்கும், அம்பள வும்பள சுதந்திரராக."
"சகாப்தம் எளக்ஷ்ய அ (798) ண்டு கீலக வருஷம்,மீன மாசம் சுக்கிரவாரம் உத்திர வேளையில்.............இந்தத் தாமிரப்பட்டயம் வெட்டி வரைந்து எழுதினேன் வீரவ நல்லூர் ககன மூர்த்தியாசாரி."
இந்த அபூர்வமான சாசனத்தைப் படிக்கப் படிக்க நாம் வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைகிறோம். பிறந்தநாட்டை விட்டு ஓடித்தப்பி அகதிகளாய் வந்தடைந்த அன்னியர்க்குத் தமிழ் நாட்டில் இத்தனை வரவேற்பா ?அதிலும் எவ்வளவு உரிமையும் சலுகையும்! கடற்கரைப் பகுதிகளில் குடியேற உரிமையும், முத்துக் குளிக்கவும்உப்பு விளைவிக்கவும், குதிரை வியாபாரம் செய்யவும் சலுகைகளும் எவ்வளவு தாராளமாய் வழங்கப் படுகின்றன.
பெரிய அரசுக்குள் அடங்கிய சிற்றரசு எனவே அவர்களைக் கூற வேண்டும்.அவர்களது நிர்வாகம் தான் எவ்வளவுதிறமையுடன் வகுத்துத் தரப்பட்டுள்ளது. ஒருவர் தேசாதிபதி ,மற்றொருவர் நியாயாதிபதி, பின்னொருவர்கடலாதிபதி மணியம் ஒருவர். இன்னும் அவர்களது ஊழியத்துக்கு வேண்டிய வண்ணார், மேளக்காரர், அம்பட்டர்முதலியோரையும் பாண்டி மன்னன் திட்டம் செய்து உதவுகிறான்.
மரக்கலராயர் என்ற பெயர் தான் எவ்வளவு அன்புடனும் அழகுடனும் சூட்டப்படுகிறது. அத்தமிழ் மன்னனின் வண்மைக்கும், ஒண்மைக்கும் சான்றாக இன்று தமிழ் நாட்டில் அம்மரக்கலராயரின் வகுப்பினர் மரக்காயர் என்றபெயருடன் கடற்கரைப் பகுதிகளிலெல்லாம் பல்கிப் பெருகிச் சிறந்த வணிக மன்னராய் வாழ்கின்றனர்.தமிழ்வளர்க்கின்றனர் .தமிழ் வளர்த்த தந்தையாகிய சீதக்காதி மரைக்காயரும் இவ்வகுப்பில் தோன்றியவரே.
மரக்காயர் பரம்பரையில் வந்த ஒருவரது பெயர் சரித்திரத்தில் தனிச் சிறப்பும் பெற்றது. ஸையத் ஜமாலுத்தீன் என்றஅரபி நாட்டு முஸ்லிம் தமிழ் நாட்டில் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தவர். அரேபியாவில் இருந்துநல்ல உயர் சாதிக் குதிரைகளைத் தென்னாட்டில் இறக்குமதி செய்யும் ஏகபோக உரிமையைப் பாண்டிய அரசரிடம் பெற்றார். காயல் பட்டினமே அவரது தலைமை காரியாலயஸ்தலம் .அரசர்க்கு அடுத்த பெருஞ்செல்வராய் அவர் விளங்கினார். எத்தனையோ மரக்கலங்கள் அவரது ஏவலில் இருந்தன. அவரது கப்பல்கள் செங்கடலில் இருந்துசீனம் வரை சென்று பொன்னொடும் பொருளோடும் திரும்பும்.உலகியலறிவும் நூலறிவும் மிகுந்த அவர் பிறறைவயமாக்கத் தக்க பேச்சுத் திறமையும் உடையவர்.அரசர் சுந்தர பாந்தியத் தெவரின் பேரன்பையும் பெரு நட்பையும் பெற்றவர்.கி.பி.1286-ல் பாண்டிய மன்னர் சீன அரசர் குப்ளைகானிடம் ஒரு தமிழர் தூது கோஷ்டியை அனுப்பிய பொழுது அதன் தலவராக ஸையத் ஜமாலுதீனே தெரிந்தெடுக்கப்பட்டார்.சீனச் சரித்திரம் இதற்குச் சான்று பகர்கிறது.இலங்கையில் பராகிரமபாகு ண்ட நாளில் (1288-1293) பாண்டியர் இலங்கை மீது படை எடுத்தனர்.அப்படைகளுக்கு சேனாதிபதியாக ஜமாலுத்தீனே நியமிக்கப்பட்டனர்.பாண்டி மன்னர் சபையில் இவருக்கு எவ்வளவு மதிப்பும் எத்துணை நம்பிக்கையும் உள்லம் கலந்த நல்லெண்ணமும் இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இந்துமுஸ்லிம் என்ற பேதம் எள்ளளவும் இன்றி தமிழ் நாட்டில் சவுஜன்யமும் சந்துஷ்டியும் அன்று முதல் இன்றும்நிலவுகிறது .
தமிழர் தமக்குச் செய்த தலையாய நன்றியை தமிழ் நாட்டு முஸ்லிம்கள் என்றும் மறந்தது இல்லை.வடக்கே இருந்துமுஸ்லிம் அரசர்களும் தளபதிகளும் போர்கொண்டு தென்னாடு வந்த போது தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தமிழரோடு தோள்தட்டி நின்று அவர்களை எதிர்த்து வீரப்போர் செய்தனர். மாலிகாபூர் என்ற சேனாதிபதியை எதிர்த்த வீரபாண்டியரின் சேனையில் 5000 முஸ்லிம் குதிரை வீரர்கள் இருந்தனர், என்று அக்காலச் சரித்திரக் காரரான குஸ்ருகுரிப்பிடுகிறார்.இந்து மன்னரின் கீழ் முஸ்லிம் படைகளை எதிர்த்துப் போராடிய அத்தமிழ் முஸ்லிம்களின் உள்ளப்பாங்கினை உணர்ந்து கொள்ள அச்சரித்திரக்காரருக்கு போதிய திருஷ்டி இல்லை.கையால் அவர்களைஏளனமாகவே அவர் குறிப்பிடுகிறார்." இவர்கள் பாதி இந்துக்களே.மத வைராக்கியமோ ஒழுக்கமோ இல்லாதவர்கள்.மரணம் தான் இவர்களுக்கு சரியான தண்டனை.எனினும் கலீமா சொல்ல அறிந்திருந்த படியால் பிழைத்துப்போனார்கள்." என்று அவர் எழுதுகிறார்.(See foot note on Malik kafur p.274 of A History of India by RomilaThapar )##
வடநாட்டு முஸ்லிம் அரசர்களின் தென்னாட்டுப் படையெடுப்பால் இங்குள்ள இந்துக்களைப் போலவே முஸ்லிம்களும் பெருந்துன்பமும் துயரமும் அடைந்தனர்.டெல்லி மன்னன் குத்புதீன் முபாரக் ஷா காலத்தில்(கி.பி.1317) அவனது தளபதி குஸ்ரூகான் தமிழகத்தின் மீது தண்டெடுத்து வந்தான்.மதுரையைத் தாக்கிப் பிடித்தான்.பாண்டியர் பிரதானிகளில் ஒருவராய் ஸிராஜுதீன் தாகீ என்பவர் மதுரையில் இருந்தார்.முஸ்லிம் என்பதற்காகஅவரைகுஸ்ரூகான் விட்டு வைக்கவில்லை. அவர் மாளிகையைச் சூரையிட்டது மல்லாமல்அவரது குடும்பத்தினரையும்கைது செய்தான்.அவரது அழகிய மகளையும் மணமுடித்துத்தர வேண்டுமென்று வம்பு பேசினான்.மானமிழந்த பின்உயிர் வாழாமை முன்னினிதே என்ற தமிழனது தன் மானக் கொள்கையைக் கொண்டே ஸிராஜுதீன் விஷமருந்திஉயிர் துறந்தார்.
சமீப காலத்தில் இந்திய நாட்டின் பிற பகுதிகளில் வகுப்பு மாச்சர்யம் மிகுந்து கொலைகளும்கொள்ளைகளும் நடந்த பொழுது தமிழ் நாட்டில்அமைதியும் சந்துஷ்டியும் நிலவி வந்ததைக் கண்டபிறர் ச்சரியமடைந்தனர். தமிழர் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட வினோதம் அவர்களுக்குப்புரியவில்லை. தமிழரின் தனிப் பண்பாடு அது.
##(Another expedition was sent under one of his officers ,Malik Kafur, a handsomeHindu convert from gujarat, and this was extremely successful. He had even attacked the city of Madurai ,the seat of the Panddyas ,and this was more than any other Northern rulers could claim. (p 274. )A HISTORY OF INDIA -ROMILA THAPAR)
தொகுப்பு: புதுவை ஞானம்.
இந்திய இசுலாமியரும் தமிழக இசுலாமியரும்
திரு. ஜகாரியா அவர்கள் எழுதிய எங்கே தவறு செய்தனர் இந்திய இசுலாமியர் ?
நூல் அறிமுகம் மட்டும் தான் படிக்கக் கிடைத்தது. முழு நூலும் படித்துப் பார்க்க சையாகத்தான் இருக்கிறது .அது ஒரு புறம் இருக்க; எப்போதோ படித்த ஒரு பழைய கட்டுரை நினைவுக்கு வருகிறது. .இந்தியா சுதந்திரம்அடைவதற்கு ஏழு மாதம் முன்பாக ' சக்தி ' என்ற பத்திரிகையில் திரு. அப்துல் காதர் என்பவர் எழுதியதாகஞாபகம்.இது 'கவிதாச்சரன்' இதழில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் நடந்த அந்த கால கட்டத்த்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.இதன் சிறப்புப் பின்னனி என்ன எனத் தேடி அருமையானதொரு கட்டுரையை வழங்கி இருக்கிரார் அவர்.அந்தசிறப்பு மிகு கட்டுரைக்கும் 'திண்ணை' வாசகர்களுக்கும் இடையே குறுக்கே நந்தி போல் படுத்திருக்க நான்விரும்பவில்லை.நீங்களே படித்துப் பாருங்கள்.னாலும்,திருமதி.ரொமீலா தாப்பர் அவர்களது கருத்து ஒன்றினைத்தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள சை.அரையும் குறையுமாக நினைவில் இருப்பதை இப்போதும்அசலானவற்றை பின்னொரு சமயமும் பார்க்கலாம்.
அக்பர் காலத்துக்கு முன்னரே அசலாக இந்தியாவுக்குள் வந்தது சிலர்.பதவிக்காக மதம் மாறியவர் பலர்.ஷரியத்தையும் முழுமையாக ஏற்க முடியாமல் பழைய இந்துப் பழக்க வழக்கங்களையும் கைவிட முடியாமல்பலர் தவித்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.பிற்காலத்தில் தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்த தளபதிமாலிக்காபூர் இந்துவாக இருந்து பதவிக்காக மதம் மாறியவர் என்று வேறொரு வரலாற்றாசிரியர் எழுதியதும்படித்திருக்கிறேன்.இதனை நான் இங்கு குறிப்பிட ஒரு காரணம் உண்டு. அந்த கூலித் தளபதியை விரட்டியடித்தஅசல் இசுலாமியர்கள் பற்றிய கட்டுரை இது. .இனி அந்தக் கட்டுரையைப் பார்ப்போம்.
"the muslim population was only a fraction of the total and muslim elite could not have felt entirely secure.Those converted to islam in the early days were usually low-caste Hindus who chose to leavethe Hidu social fold for that of Islam ,beleieving that under Islam they would have better oppurtunities than ifthey remained low-caste Hindus .Such converts could provide little support for the ruling Muslim elite.Converts from higher Hindu social strata to Islam rarely made the change out of religious sympathy with Islambut out of opportunism, realizing that conversion was a necessary step before they could hope for economic and social advancement or political power. Ostensibly they were much of , but actually, andquite naturally ,they were regarded with suspicion by Turkish and Afghan nobles.(p.278 &9 )
Each year the sea brought a mere hand ful of traders ,who settled in the West coast ports .Islamtherefore had to rely increasingly on Hindu converts. The existing Indian population was slow in beingconverted.The fact that the muslims have always been a minority cmmunity in India would suggest ,as hasbeen pointed out elsewhere,that the vast mejority of Hindus were not so desperate a plight as to seekconversion. Perhaps at the lower levels of soceity the advantages to be gained by conversion were not spectacular. The Muslim community consisted mainly of converted Hindus ,and obviosly their pattern of living would not differ radically from that of the larger community in the midst of which they lived.
But the cultural fusion of the two ideologies was less predictable amonst the ruling classes andtheir seperateness was insisted upon by theologians of both religions and on occation, by politicallyambitious sections of the aristocracy .The call to Muslim loyalty or Hindu loyalty could always be used for the purposes other than religious, and this sentiment could be exploited when convenient.(p.289&90)
Muslim society as it evolved in India fell in to three broad divisins- the noblity both secular and religous,the artisans' and the cultivators.The nobility was made up of diverse trends , Turks, Afganisthans., prrsians, and Arabs,with the first two pre dominant ,sice they held power.To begin with , clan affiliations kept themdivided ,but once they wrer forced to accept India as their prominent home they became to coalseceinto a fairly homogeneous group. The fact of their being a minority in the country assited this process(p.298). ( A HISTORY OF INDIA_ ROMILA THAPER)
தமிழர் பண்பாடு ---------------------பாரத நாட்டின் பண்பாடு பயன் நிறைந்த பண்பாடு .பல கலாச்சாரங்கள் கலந்து மறைந்து உருவான, இனிமையும்புதுமையும் நிறைந்த பண்பாடு. .இப்புண்ணிய பூமியில் இன்று நின்று நிலவும் கலைகளையும் ,காவியங்களையும்மொழிகளையும், மதங்களையும் ராய்ந்து பார்ப்போமானால் ,அவை உருவாதற்கு உதவிய பல் வேறு ஜாதியதேசீய சக்திகளின் நிழலை நாம் அவற்றில் காணலாம். இந்த நன்னாட்டின் எதிர் கால உயர்வை உள்ளத்தில் கொண்ட யாவரும் இந்தியப் பண்பாட்டின் பல்வேறு முகங்களை பாது காக்கப் பாடுபட வேண்டும்.உண்மையில்உரம் தருவதும் உயிர் தருவதும் கிய சக்திகளை எல்லாம் ர்வத்துடன் இனிது வரவேற்று உபயோகமாய்இந்தியப் பண்பாண்ட்டோடு இணையச் செய்து அத¨னை வளர்க்க வேண்டும் .ஒரு பண்பாடு வளர அவ்வபோது தோண்றி¢ய சமூக, அரசியல் தார்மீக மாறுதல்களை ஏற்றே பண்பாடு பரிமளிக்கிறது.
தொண்மையும் பழமையும், கனிவும் செறிவும் மிகுந்த தமிழர் பண்பாட்டிலும் பல கலாசாரங்கள் கலந்துள்ளன. பண்டைத் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடு. சீரும் சிறப்பும் செழிப்பும் விழிப்பும் பெற்ற நாடு. காயும் கனியும், பூவும் பொழிலும் நிறைந்த பூமி., முத்தும், பொன்னும், மணியும், பவளமும், நம் நாட்டில் விளைந்தன. எனவே வர்த்தகமும்வாணிகமும் பெருகின. வேற்றுநாட்டு மக்கள் பலர் விரைந்து இந்நாடு வந்தனர். விருந்தோம்பலில் சிறந்தோங்கியதமிழர் அம்மக்களையெல்லாம் அவ்வப்போது வரவேற்று அவர்களுக்கு இடைவிடாமல் உணவு கொடுத்து நிழல் கொடுத்து எழில் கொடுத்து காப்பாற்றினர். தமிழ் நாட்டின் கீர்த்தி உலகெல்லாம் பரவியது.
தமிழ் நாட்டு வணிகர் நேர்மையும் நாணயமும் நிரம்பியவர்கள். வியாபாரத் துறையிலோ அல்லது வேறுஎத்துறையிலோ அவர்கள் பொய்யுரை புகலமாட்டார்கள். பொருட்களைக் கொள்ளை விலைக்கு விற்பதில்லை.ஊதியம் சிறிதே பெற்றுப் பெருகிய வாணிகம் நடத்தினார்கள். பழைய தமிழ் இலக்கியமாகிய 'பத்துப் பாட்டு' என்ற தொகுதியிலுள்ள'பட்டினப்பாலை' என்ற பாட்டில் அக்கால வணிகரின் நாணயத்திற்குத் தகுந்த சான்று கிடைக்கிறது.சோழர் பழம் பதியாகிய காவிரிப் பூம்பட்டினத்தின் வணிகரது உள்ளச்சிறப்பை அது வர்ணிப்பதைக் காணலாம்.
நடுவு நின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு(ம்) ஒப்ப நாடிக் கொள்வதூஉங் மிகை கொளாது கொடுப்பதூஉங் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை (வரிகள் 207 - 212)
நாணயமான வியாபாரமும் கண்ணியமான ஒழுக்கமும் அயலவரை அன்புடன் தரிக்கும் பேருள்ளமும் கொண்ட தமிழரின் நிழலில் பல அன்னியர்கள் பெருவிருப்புடன் வந்து தங்கினர். கடல் கடந்தும் வந்தனர். ரோமர்களும் கிரேக்கர்களும் மிகப் பழங்காலத்திருந்தே வாணிகத்தின் பொருட்டு தமிழ் நாட்டில் வந்து குடியேறினார்கள். ரோம அரசரது நாணயங்கள் பழந்துறைமுகப் பகுதிகளிலும் தலைநகர ஸ்தலங்களிலிலும் ஏராளமாய்த் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ரோமர், கிரேக்கர், அராபியர், சீனர்களின் பண்டக சாலைகள் தமிழ்நாட்டில் ங்காங்கே ஏற்பட்டன.காவிரிபூம்பட்டினத்தின் கடைவீதிகளில் இந்தியாவின் நாலாவிதப் பகுதிகளிலலுள்ள பண்டங்ளும் வந்து குவிந்தன. குதிரைகளும் அயல்நாட்டிலிருந்து கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும் காலில் வந்த கருங்கறி மூடையும் வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல்துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத் (து) க்கமும் (பட்டினப்பாலை 185 - 191)
அங்கு வந்து நிறைந்தன.
வியாபாரம் விரும்பி இங்கு வந்த பிற நாட்டு மக்கள் தமிழரின் உயர் பண்பாட்டாலும் உள்ள நிறைவாலும்கர்ஷிக்கப்பட்டு தமிழ் நாட்டைத் தங்கள் தாயகமாகவே கருதி இங்கேயே தங்கி விட்டனர். இவர்களில்பலர் கை தேர்ந்த சிற்பிகளாகவும், கம்மாளராயும், அரசரது மெய்க்காவலராயும் தொழில்களில் அமர்ந்தனர்.இவ்வாறு வந்து தங்கியவர்களையே 'யவணர் ' என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவர்கள் நாளடவில்தமிழரோடு தமிழராய்க் கலந்து இணைந்து விட்டனர்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ரம்பத்தில் அராபியாவில் 'இஸ்லாம்' என்ற புதிய மதம் தோன்றியது. உறங்கிக்கிடந்த அராபியர்கள் அதன் மூலம் புதியதோர் ஜீவசக்தியைப் பெற்று உலகம் வியக்கும் வண்ணம் ஒரு பலம்பொருந்திய பேரரசை நிர்மாணித்தார்கள். வாணிகத்துறையில் அவர்கள் அளவற்ற ர்வம் காட்டினார்கள். கீழ்நாடுகளுடனும் மேல் நாடுகளுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு பெரு வாணிகம் செய்தனர். தமிழ் நாட்டின் வளமான பண்டங்களை வாங்கி பிற நாடுகளில் விற்றனர்.தமிழரின் இனிய பண்பாட்டைப் பற்றி வெகுவாய்அறிந்து வியந்தார்கள்.
கி.பி.9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எகிப்தில் வாழ்ந்த அராபிய வணிகக் குடும்பங்களுக்கு பேராபத்துவந்தது. நாடு, நெறி திறம்பிய மன்னன் ட்சியால் சீர்குலைந்து, நன் மக்கள் நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.அவர்களில் சிலர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடையத் துணிவு கொண்டு கலங்களில் ஏறிச் சொல்லொணாத துன்பம் அடைந்து ஒருவாறு தென் குமரியைக் கடந்து பாண்டி நாட்டின் துறைமுகமாகியகாயலில் வந்து இறங்கினார்கள். பாண்டிய மன்னனைக் கண்டு தங்கள் பரிபவத்தைக் கூறித் தமிழ் நாட்டில்குடியேற அனுமதி கேட்டார்கள்.அரசர் அந்த அகதிகட்கு 'அஞ்சேல்' என அபயம் கொடுத்தார். சீர் குலைவுற்றஅவர்களது சீர் பெற வேண்டிய சாதனங்களும் தந்தார். அவர்களது உரிமைகளையும் கடமைகளையும் வகுத்துத்தாமிரப் பட்டயமும் கொடுத்தார்.அப்பட்டையம் தமிழரின் மாண்பை உலகுக்குப் பறை சாற்றும் ஒரு அழியாதசின்னம். தமிழரின் பண்பாட்டின் பிரதி பிம்பம். அதிலுள்ள சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :-
"................அறபி நாட்டு மிஸறு (எகிப்து) தேசாதிபதியின் கொடுங்கோலுக்கு அஞ்சி, மரக்கல யாத்திரையாய்கர்த்தர்களின் தேசச் செம்பி நாட்டில் பாசறை வகுத்து, கர்த்தர்களின் சமூகம் கொடுத்து அந்நாட்டில் குடியேறிஇருக்கத் தாமிரப் பட்டயம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டவர்களின் வம்சமும், எண்ணிக்கையும் :
சிம் வம்சத்தார் (23)பக்கிரி வம்சத்தார் (39)பாறூக்கு வம்சத்தார்(43)உமையா வம்சத்தார்(14)ராணுவ யுத்தர் (16)க்ஷவரகன் (3)நாச்சியார் பெண்டு (9) " " (16) " " (24)
" " (5)பெண் (6) " (1)அடிமை (4) " (7) " (17) " (12) " (2)இவர்கள் ஒரு மனப்பட்டு,முஹமது கல்ஜிக்கு தாமிரப் பட்டயம் கொடுக்கக் கேட்டுக் கொண்ட படியால்,இந்தக் குடியானவர்கள் மிஸறு தேசத்து காயிரூன் (கெய்ரோ) ஊரில் வசித்தவர்களான படியால்,தாமிரப்பட்டயங்கொடுக்கு மூருக்கு 'காயிரூன்' பட்டனமென்று நாமமும், மரக்கல யாத்திரையாக வந்ததற்காக இவர்களுக்குமரக்கல ராயர் என்ற நாமமும் நாம் சூட்டித் தாமிர பட்டயங்கொடுக்க உத்தரமருளி அரண்மனையார் கற்பித்தது.
" தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு மேற்கு,சிவந்தன் குளம், முள்ளக்காடு, கோபுரங்காடு, மஞ்சனக்காயல், கொற்கை,குலை நெல் கரிசை, முக்காணி கொலுவுத்துறை, ற்றூர், அதைச் சேர்ந்த மங்கலம், சொர்க்கப்பிள்ளைக்கரை,பின்னக்காயல்,வரங்காடு,தண்ணீர்ப்பந்தல்,கீரனுர், நல்லூர்,அம்மன் புரம், பள்ளிப்பத்து,மணற்காடு,ரஜமன்னியபுரம்,வீரபாண்டியன், மங்கள பாடி இவைகளடங்கிய குடிகளுக்கு முகமது கல்ஜி மரக்கலராயன்கற்பனையும்,அவனுக்கு இறைவரி செலுத்தக் கடைமையும் பளமும் பள்ளிப்பத்து அம்மன் புரங்கண்டு முதல்லாபத்தில் ஜெப லயங்கள் கட்டப் பாதியும்,தண்ணீர்ப் பந்தல் கண்டு முதலில் மரக்கலராயனுக்குப்பாதியும்பளமும், கன்னி முதல் மன்னார் மணல் மேடு இராமேஸ்வரம் வரை, இந்தக் குடியானவர்கள் சலாபமுத்துக் குளிக்க அம்பளவும்பளமும், தூதுகுடி மாரிஅம்மன் கொவிலுக்கு தோனி ஒன்னுக்கு 20 முத்துச் சிப்பியும்மரக்கலராயனுக்கு தோணி ஒன்னுக்கு 30 முத்துச் சிப்பியும் ,சித்த்ன லாசருக்கு 20 முத்துச் சிப்பியும் அம்பளவும்பளநிந்தமும்."
"அந்தந்த வருடமும் மகர மாசத்தையில், அரண்மனைக்கு மரக்கலராயன் 90 பொன்னும் உப்பு லாபத்தில் 100பொன்னுக்கு 25 பொன்னும் செலுதிவிடக் கடமையும், ஒரு பொன் எடையும் அதற்கு மேற்பட்ட ணிமுத்தும்,வலம்புரிச் சங்கும் அகப்பட்டால் அவைகளை மரக்கல ராயன் அரண்மனைக்கு சகல மேளவாத்தியத்துடன் செலுத்திட அரண்மனைக் கற்பனையும்."
"அரன்மனையார் உத்தரவிற்கு நாஞ்சி நாட்டு அதிபன் கொடுத்த வண்ணான் (5) ரெட்டியாபட்டி பாளைய கிருக்ஷ்ணநாயக்கன் கொடுத்த புதிய முத்தூர் மேளவாத்தியக்காரன்(5)க்கும் குடியானவர்கள் செலவு கொடுத்துக் கொள்ளவும்.பக்கிரி வம்சத்தலைவன் முகம்மது கல்ஜி மரக்கலராயன் தேசாதிபதி : பாறூக்கு வமிசத் தலைவன் உமறுமங்கூறு நியாதிபன் : சீம் வம்சத்தலைவன் கமாலுதீன் கடலதிபதி :உமையா வமிசத் தலைவன் சுபைறுஅடையில் முடையல்,ஊர் மணியம் ராணுவ யுத்தர்கள் , ஊர்க்காவல்,நாட்டுக்காவல்,கன்னி முதல் சேல மகரம்வரையுள்ள அரண் ம¨ண் குதிரைப் பாடிகளில் உள்ள இந்தக் குடியானவர்கள் குதிரை விற்பனை செய்துகொள்வதை ,அரண்மனைக் காவலர் பாளையக் காவலர் தடை செய்யக்கூடாது. சந்திராதிக்கம்,சந்திர சூரியப்பிரவேசமுள்ளவரைக்கும், அம்பள வும்பள சுதந்திரராக."
"சகாப்தம் எளக்ஷ்ய அ (798) ண்டு கீலக வருஷம்,மீன மாசம் சுக்கிரவாரம் உத்திர வேளையில்.............இந்தத் தாமிரப்பட்டயம் வெட்டி வரைந்து எழுதினேன் வீரவ நல்லூர் ககன மூர்த்தியாசாரி."
இந்த அபூர்வமான சாசனத்தைப் படிக்கப் படிக்க நாம் வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைகிறோம். பிறந்தநாட்டை விட்டு ஓடித்தப்பி அகதிகளாய் வந்தடைந்த அன்னியர்க்குத் தமிழ் நாட்டில் இத்தனை வரவேற்பா ?அதிலும் எவ்வளவு உரிமையும் சலுகையும்! கடற்கரைப் பகுதிகளில் குடியேற உரிமையும், முத்துக் குளிக்கவும்உப்பு விளைவிக்கவும், குதிரை வியாபாரம் செய்யவும் சலுகைகளும் எவ்வளவு தாராளமாய் வழங்கப் படுகின்றன.
பெரிய அரசுக்குள் அடங்கிய சிற்றரசு எனவே அவர்களைக் கூற வேண்டும்.அவர்களது நிர்வாகம் தான் எவ்வளவுதிறமையுடன் வகுத்துத் தரப்பட்டுள்ளது. ஒருவர் தேசாதிபதி ,மற்றொருவர் நியாயாதிபதி, பின்னொருவர்கடலாதிபதி மணியம் ஒருவர். இன்னும் அவர்களது ஊழியத்துக்கு வேண்டிய வண்ணார், மேளக்காரர், அம்பட்டர்முதலியோரையும் பாண்டி மன்னன் திட்டம் செய்து உதவுகிறான்.
மரக்கலராயர் என்ற பெயர் தான் எவ்வளவு அன்புடனும் அழகுடனும் சூட்டப்படுகிறது. அத்தமிழ் மன்னனின் வண்மைக்கும், ஒண்மைக்கும் சான்றாக இன்று தமிழ் நாட்டில் அம்மரக்கலராயரின் வகுப்பினர் மரக்காயர் என்றபெயருடன் கடற்கரைப் பகுதிகளிலெல்லாம் பல்கிப் பெருகிச் சிறந்த வணிக மன்னராய் வாழ்கின்றனர்.தமிழ்வளர்க்கின்றனர் .தமிழ் வளர்த்த தந்தையாகிய சீதக்காதி மரைக்காயரும் இவ்வகுப்பில் தோன்றியவரே.
மரக்காயர் பரம்பரையில் வந்த ஒருவரது பெயர் சரித்திரத்தில் தனிச் சிறப்பும் பெற்றது. ஸையத் ஜமாலுத்தீன் என்றஅரபி நாட்டு முஸ்லிம் தமிழ் நாட்டில் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தவர். அரேபியாவில் இருந்துநல்ல உயர் சாதிக் குதிரைகளைத் தென்னாட்டில் இறக்குமதி செய்யும் ஏகபோக உரிமையைப் பாண்டிய அரசரிடம் பெற்றார். காயல் பட்டினமே அவரது தலைமை காரியாலயஸ்தலம் .அரசர்க்கு அடுத்த பெருஞ்செல்வராய் அவர் விளங்கினார். எத்தனையோ மரக்கலங்கள் அவரது ஏவலில் இருந்தன. அவரது கப்பல்கள் செங்கடலில் இருந்துசீனம் வரை சென்று பொன்னொடும் பொருளோடும் திரும்பும்.உலகியலறிவும் நூலறிவும் மிகுந்த அவர் பிறறைவயமாக்கத் தக்க பேச்சுத் திறமையும் உடையவர்.அரசர் சுந்தர பாந்தியத் தெவரின் பேரன்பையும் பெரு நட்பையும் பெற்றவர்.கி.பி.1286-ல் பாண்டிய மன்னர் சீன அரசர் குப்ளைகானிடம் ஒரு தமிழர் தூது கோஷ்டியை அனுப்பிய பொழுது அதன் தலவராக ஸையத் ஜமாலுதீனே தெரிந்தெடுக்கப்பட்டார்.சீனச் சரித்திரம் இதற்குச் சான்று பகர்கிறது.இலங்கையில் பராகிரமபாகு ண்ட நாளில் (1288-1293) பாண்டியர் இலங்கை மீது படை எடுத்தனர்.அப்படைகளுக்கு சேனாதிபதியாக ஜமாலுத்தீனே நியமிக்கப்பட்டனர்.பாண்டி மன்னர் சபையில் இவருக்கு எவ்வளவு மதிப்பும் எத்துணை நம்பிக்கையும் உள்லம் கலந்த நல்லெண்ணமும் இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இந்துமுஸ்லிம் என்ற பேதம் எள்ளளவும் இன்றி தமிழ் நாட்டில் சவுஜன்யமும் சந்துஷ்டியும் அன்று முதல் இன்றும்நிலவுகிறது .
தமிழர் தமக்குச் செய்த தலையாய நன்றியை தமிழ் நாட்டு முஸ்லிம்கள் என்றும் மறந்தது இல்லை.வடக்கே இருந்துமுஸ்லிம் அரசர்களும் தளபதிகளும் போர்கொண்டு தென்னாடு வந்த போது தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தமிழரோடு தோள்தட்டி நின்று அவர்களை எதிர்த்து வீரப்போர் செய்தனர். மாலிகாபூர் என்ற சேனாதிபதியை எதிர்த்த வீரபாண்டியரின் சேனையில் 5000 முஸ்லிம் குதிரை வீரர்கள் இருந்தனர், என்று அக்காலச் சரித்திரக் காரரான குஸ்ருகுரிப்பிடுகிறார்.இந்து மன்னரின் கீழ் முஸ்லிம் படைகளை எதிர்த்துப் போராடிய அத்தமிழ் முஸ்லிம்களின் உள்ளப்பாங்கினை உணர்ந்து கொள்ள அச்சரித்திரக்காரருக்கு போதிய திருஷ்டி இல்லை.கையால் அவர்களைஏளனமாகவே அவர் குறிப்பிடுகிறார்." இவர்கள் பாதி இந்துக்களே.மத வைராக்கியமோ ஒழுக்கமோ இல்லாதவர்கள்.மரணம் தான் இவர்களுக்கு சரியான தண்டனை.எனினும் கலீமா சொல்ல அறிந்திருந்த படியால் பிழைத்துப்போனார்கள்." என்று அவர் எழுதுகிறார்.(See foot note on Malik kafur p.274 of A History of India by RomilaThapar )##
வடநாட்டு முஸ்லிம் அரசர்களின் தென்னாட்டுப் படையெடுப்பால் இங்குள்ள இந்துக்களைப் போலவே முஸ்லிம்களும் பெருந்துன்பமும் துயரமும் அடைந்தனர்.டெல்லி மன்னன் குத்புதீன் முபாரக் ஷா காலத்தில்(கி.பி.1317) அவனது தளபதி குஸ்ரூகான் தமிழகத்தின் மீது தண்டெடுத்து வந்தான்.மதுரையைத் தாக்கிப் பிடித்தான்.பாண்டியர் பிரதானிகளில் ஒருவராய் ஸிராஜுதீன் தாகீ என்பவர் மதுரையில் இருந்தார்.முஸ்லிம் என்பதற்காகஅவரைகுஸ்ரூகான் விட்டு வைக்கவில்லை. அவர் மாளிகையைச் சூரையிட்டது மல்லாமல்அவரது குடும்பத்தினரையும்கைது செய்தான்.அவரது அழகிய மகளையும் மணமுடித்துத்தர வேண்டுமென்று வம்பு பேசினான்.மானமிழந்த பின்உயிர் வாழாமை முன்னினிதே என்ற தமிழனது தன் மானக் கொள்கையைக் கொண்டே ஸிராஜுதீன் விஷமருந்திஉயிர் துறந்தார்.
சமீப காலத்தில் இந்திய நாட்டின் பிற பகுதிகளில் வகுப்பு மாச்சர்யம் மிகுந்து கொலைகளும்கொள்ளைகளும் நடந்த பொழுது தமிழ் நாட்டில்அமைதியும் சந்துஷ்டியும் நிலவி வந்ததைக் கண்டபிறர் ச்சரியமடைந்தனர். தமிழர் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட வினோதம் அவர்களுக்குப்புரியவில்லை. தமிழரின் தனிப் பண்பாடு அது.
##(Another expedition was sent under one of his officers ,Malik Kafur, a handsomeHindu convert from gujarat, and this was extremely successful. He had even attacked the city of Madurai ,the seat of the Panddyas ,and this was more than any other Northern rulers could claim. (p 274. )A HISTORY OF INDIA -ROMILA THAPAR)
தொகுப்பு: புதுவை ஞானம்.